Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)

பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்!

சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்!

சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்!

ஆனால்...

திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்!

சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர்.

"நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட்டுமல்ல! பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதநேயப் போரின் செயலகப் பணிப்பாளரும்கூட." என்று அப்பொழுது மார்தட்டிக் கொண்டவர் அல்லவா நீங்கள்?

ஆனாலும் பாலியல் வதைகளை கிரேக்க தத்துவத்துடன் நீங்கள் ஒப்பிடுவீர்கள் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை.

வவுனியா வதைமுகாம்களில் எமது வன்னிப் பெண்களுக்கு எதிராக உங்களது சிங்களப் படைகள் கட்டவிழ்த்து விட்ட பாலியல் கொடூரங்களை கடந்த ஓராண்டுகளாக எமது ஊடகங்கள் வெளிக்கொணர்ந்திருந்தன.

ஆனாலும் இவற்றுக்கெல்லாம் எங்கே சாட்சி என்று அன்று முழங்கினீர்கள்.

சணல்-4 தொலைக்காட்சியில் வெளிவந்த ஒளிப்படங்களை 'டொக்ரேர்ட் இமேஜ்' என்று கற்பிதம் செய்து உங்களது கலாநிதி ஆய்வுத்திறனை வெளிப்படுத்தினீர்கள்!

இப்பொழுது தமிழ்வாணி என்ற ஒரு சாட்சி உங்களை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உங்களது ‘வீரர்கள்’ புரிந்த வீரபிரதாபங்களை அவர் ஏற்கனவே புட்டுவைத்துவிட்டார். எமது மக்களைக் கொன்றவர்கள் யார் என்பதையும் உலகிற்கு அவர் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்.

இப்பொழுது வவுனியா வதைமுகாம்களில் உங்களின் 'மனிதநேய வீரர்கள்' புரிந்த சாகசங்களையும் அவர் அம்பலப்படுத்திவிட்டார்.

கேட்கவே காது கூசுகின்றது. தமிழ் குருதி துடிதுடிக்கின்றது. நிலத்தில் வீழ்ந்துகிடந்து நெஞ்சில் ஓங்கியடித்துக் கதறியழ வேண்டும் போல் உள்ளது.

கண்ணகியை இழிவுபடுத்திய கனக-விஜயரை கங்கைக் கரையில் தோற்கடித்துத் தலையிற் கல்லும், கங்கை நீரும் ஏற்றி வந்து கண்ணகி அம்மனுக்கு அபிசேகம் செய்ய வைத்த சேரன்செங்குட்டுவனின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்.

ஆனாலும் என்ன?

எங்களின் மலர்களை அழித்த உங்களது படைகளை தண்டிப்பதற்கு திராணியற்றவர்களாகிவிட்டோம்.

வீதிகளில் இறங்கி நாம் விட்ட கண்ணீர் உலகின் மனச்சாட்சியை இன்னமும் இளகவைக்கவில்லை.

நாம் அழுது கொண்டேயிருக்கின்றோம்.

ஆனால் நீங்கள்...

"வவுனியா முகாம்களில் பாலியல் உறவும் இடம்பெற்றிருக்கலாம். கிரேக்க தத்துவமும் பேசப்பட்டிருக்கலாம்!" என்று எக்காளமிடுகின்றீர்கள்.

உங்களது வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட எங்களது மூன்று இலட்சம் உறவுகளும் என்ன சோக்கிரட்டீசையும், அறிஸ்ரோட்டிலையும் பற்றியா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்?

விடுதலை! விடுதலை! விடுதலை!

அந்த ஒற்றைச்சொல்லுக்காக அல்லவா அவர்கள் இவ்வளவு துயரங்களையும் சுமந்தார்கள்.

சிலுவை சுமக்கும் இனம் ஈழத்தமிழினம் என்றால் சிலுவையில் அறையப்பட்ட இனக்கூறு வன்னி மக்கள்.

உங்களது சிப்பாய்களுடன் எமது பெண்கள் கிரேக்க தத்துவம் பேசும் அளவிற்கு சிங்களச் சிப்பாய்கள் எல்லாம் அரசியல் தத்துவஞானிகளாகி விட்டார்களா?

உண்ண உணவின்றி, அருந்த நீரின்றி கூடாரங்களுக்குள் வதைபட்ட எமது பெண்கள் புராதன அதென்சின் மக்களாட்சி பற்றித்தான் அப்பொழுது சிந்தித்திருப்பார்களா?

அல்லது கிரேக்க தத்துவஞானி தூசிடெசின் ‘வலிமையே வெல்லும்' என்ற வாய்மை பற்றிச்சிந்திருப்பார்கள் என்கின்றீர்களா?

அல்லது தமது மானத்தைக் காப்பதற்கு கண்ணபிரான் வெகுண்டெழுந்து வருவான் என்று நம்பியிருந்திருப்பார்களா?

அன்று திரௌபதியின் துகிலை துச்சாதன் அகற்ற முற்பட்ட பொழுது கண்ணபிரான் அவள் மானம் காத்தான்.

ஆனால் எமது பெண்களின் மானம் காக்க எவரும் வரவில்லையே! ஏன்?

ஐ.நா மன்றமே எங்கே போனாய்? பன்னாட்டு நீதிமன்றமே ஏன் மௌனியானாய்? நவநீதம்பிள்ளை அம்மையாரே ஏன் எங்களுக்காக உங்களது குரல் ஓங்கியொலிக்கவில்லை.

பாலியல் வல்லுறவு ஓர் போர் ஆயுதம் என்று அன்று பன்னாட்டு நீதிமன்றில் சட்ட வரைவிலக்கணம் அளித்தவர் அல்லவா நீங்கள்! றுவாண்டாவில் மட்டுமா போர் ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு கையாளப்பட்டது? எமது பெண்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஐயா!

சிங்களத்தின் சமாதானச் சிங்கமே! போர்ப் புத்திஜீவியே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்களது கிருசாந்தியை உங்களது சிங்கங்கள் குதறியபொழுது...

எங்களது கோணோஸ்வரியின் பெண்ணுறுப்பில் உங்களது சிங்கங்கள் எறிகுண்டுவைத்து கொன்றபொழுது...

எங்களது தர்சினியினை குதறிக் கிணற்றிற்குள் உங்களது சிங்கங்கள் வீசிய பொழுது...

அதை உங்களது சனநாயக அரசு மறுத்துரைத்தது.

அப்பொழுது கிரேக்க தத்துவம் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை.

அடங்காப்பற்று வன்னி மண்ணின் புதல்விகளை கூட்டாக உங்களது அரசும், படைகளும் மானபங்கப்படுத்திய பொழுது சோக்கிரட்டீசும், அறிஸ்ரோட்டிலும், தூசிடெசும் எங்களது சிந்தனையில் வரவில்லை.

ஆனால் இப்பொழுது சேரன்செங்குட்டுவனைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம்!!!

அடோல்வ் கிட்லர், சுலோபடான் மிலோசவிக், சார்ள்ஸ் ரெய்லர், ரடோவான் கராட்சிக், பசீர் அல் ஓமார் போன்ற போர்க்குற்றவாளிகளின் வரிசையில் மகிந்த ராஜபக்சவும் பொன்சேகாவும் இணைக்கப்பட வேண்டும் என்று துடிக்கின்றோம்.

கிரேக்க தத்துவத்தை அலசிய ஆராயலாமா? என்று யோசிக்கின்றோம்.

நீங்களும் பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் அல்லவா?

- சேரமான்-

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மிருகப் புணர்சியில் தோன்றிய மனித உருப்படைத்த மிருக இனத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.