Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயப்படுறாங்களா! நடிக்குறாங்களா!

Featured Replies

mahintha1_1.jpg

சரத்பொன்சேகா ஊடகவியலாளர் ஃப்ரெட்ரிகா ஜயன்ஸ் அவர்களுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தபாய அவர்கள் சரணடைந்த புலிகளை கொல்லும்படி உத்தரவு பிறப்பித்தார் என்று கூறியதும் பின்னர் அதனை அரச ஊடகங்கள் பூதாகரமாக்கி சரத்பொன்சேகாவினை தேச துரோகியாக்கியதுமே கடந்த வாரம் மட்டுமல்ல தேர்தல் முடியும் வரை அதனையே மஹிந்த தரப்பு துரும்பாக வைத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

ஆனால் தான் அவ்வாறு கூறவில்லையென்று சரத் எவ்வாறுதான் சொன்னாலும் அதனை ஏற்க தயாராகவில்லை மஹிந்த தரப்பு இப்போ சரத்பொன்சேகா உட்பட ஐக்கிய தேசிய கட்சி ஏன் ஃப்ரெட்ரிகா ஜயன்ஸ் கூட சரத்பொன்சேகாவின் வீடியோவினை முழுமையாக ஒளிபரப்பவேண்டும் என சவால் விட்டுள்ளனர். ஆனால் மஹிந்த தரப்பு அதனை கருத்தில் எடுப்பதாக தெரியவில்லை காரணம் மஹிந்த சார்பு ஊடகங்கள் சரத்பொன்சேகாவின் செவ்வியினை எடிற் பண்ணி போட்டதாகவே எதிரணி குற்றம் சாட்டுகின்றது.

இது இவ்வாறு இருக்க அரசாங்கம் சரத்பொன்சேகாவினை தேர்தலில் வீழ்த்துவதற்காக பாவிக்கும் தந்திரம் அவர்களையே படுகுழியில் வீழ்த்திவிடும் என்பதுபோலவே சில தேச பற்றாளர்கள் எச்சரித்தும் வருகின்றனர். தேச பற்றாளர்களின் இந்த எச்சரிக்கைக்கு காரணம் உண்மையில் மஹிந்த அரசுக்கு எச்சரிக்கையா விடுவதா அல்லது சரத்பொன்சேகாவை அடியோடு வெட்டி சாய்ப்பதா என்பதே புதிராக உள்ளது.

கடற்படை தளபதியாக இருந்த வசந்த கருணகொட அவர்கள் சரத்பொன்சேகாவின் கூற்று ஹெயிட்டிக்கு ஐ. நா படையுடன் தமது படையினரை அனுப்பும் திட்டம் பாதிக்கப்படும் என்று கூறியது மட்டுமன்றி அரச தொலைகாட்சி மற்றும் தினமின பத்திரிகைக்கும் அளித்த நேர்முகத்தில் சரத்பொன்சேகாவின் கூற்று ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச நீதிமன்றம் இலங்கை படைத்துறையினரை விசாரிக்கவேண்டிய சூழலை உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளதுடன் எடுத்துக்காட்டாக பொஸ்னியா தலைவர்களின் விசாரணைகளையும் முன்வைத்துள்ளார்.

அடுத்ததாக அமைச்சரான பேராசிரியர் காமினி லக்‌ஷ்மன் பீரிஸ் அவர்கள் குறிப்பிடுகையில் பிலிப் அல்ஸ்ரனின் கடிதம் இலங்கையினை சர்வதேச குற்றவாழி கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யும் நிலையினை தோற்றுவிக்கும் எனவும் கூறியுள்ளார். அதாவது மனித உரிமை மீறல் , மனித குலத்திற்கு எதிரான போர்குற்றம் என்ற சட்டத்தின் கீழ் விசாரணை செய்வது மட்டுமன்றி அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இலங்கை நாட்டு படைதுறை அதிகாரிகள் செல்லும் வேளை கைது செய்யப்படலாம் எனவும் கூறி எடுத்துக்காட்டாக சிலி நாட்டின் அதிகாரி அகஸ்ரோ பினாசிற் அவர்கள் மருத்துவத்திற்காக இலண்டன் செல்லும் போது அங்கு கைது செய்து நாலரை வருடங்கள் சிறை வைக்கப்பட்டார் எனவும் மிரட்டியுள்ளார்.

பேராசிரியர் பீரிஸ் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை கட்டாயம் பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் இல்லையானால் இலங்கை அரசாங்கம் குற்ற சாட்டினை ஏற்றுக்கொண்டது என கருதி ஐ. நா நடவடிக்கை எடுக்கமுடியும் என கூறியுள்ளார். அதே நேரம் விசாரணைகளுக்கு ஒத்து கொள்வதுபோன்று சாதகமாக பதிலளிக்காவிட்டாலும் கூட ஐ. நா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு ஆகவே இலங்கை ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது என்பதனை ஏற்றுகொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆகவே தான் ரஜீவ விஜயசிங்க அவசரப்பட்டு அனுப்பிய பதில் கடிதத்தினை இலங்கை அரசு கொடுத்த கையோடு மீழ பெற்றுகொண்டதாக கூறப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் மஹிந்த தமது ஆதரவாளர்களுக்கு கொடுத்த சிக்னல் என்னவெனில் எப்படியாவது, எதையாவது பாவித்து தேர்தலில் வெற்றிபெறுவோம் பின்னர் நான் சர்வதேச சமூகத்தை சமாளிக்கின்றேன் என கூறியுள்ளாராம். ஏனெனில் சர்வதேச சமூகத்தின் மனித உரிமை நாடகம் எல்லாம் தன்னை வெருட்டவும் தன்னிடம் இருந்து எதையாவது பெறுவதற்குமே என நன்கு புரிந்து வைத்துள்ளார் மஹிந்த. ஆகவே பயப்படுவது போன்று நடித்து சிங்களவரிடம் நாட்டிற்கு ஆபத்து என கூறி சிங்களவரின் வாக்குகளை பெற்று சரத்பொன்சேகாவை அரசியலை நினைத்துகூட பார்க்கமுடியாதவாறு துரத்துவதே மஹிந்தவின் முதல் நோக்கம்.

http://www.eelanatham.net/news/important

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.