Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்?

ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.

இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு, தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் என்பதுதான். வருகிற ஜனாதிபதித் தேர்தல் களத்தை அடிப்படையாகவைத்து, இந்த விஷயத்தை பேரம் பேசி முடிக்க வேண்டிய அக்கறை கூட இல்லை, இலங்கைத் தமிழ்க் கட்சிகளிடம்.

”தமிழர்களுக்கான பாதுகாப்புக் கேடயமாக இதுவரை புலிகள் இருந்தனர். புலிகள் இல்லாத நிலையில், மக்கள் எங்களைப் போன்ற தமிழ் அரசியல்வாதிகளைத்தான் முழுமையாக நம்புகின்றனர். ஆனால், இங்கே இருக்கும் தமிழ்த் தலைவர்களிடம் எந்த ஒற்றுமையும் இல்லாததினால் பேரம் பேசும் வலிமையை இழந்துவிட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்!” என்று வருத்தம் கலந்த அக்கறை யோடு பேசுகிறார் டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி எம்.பி-யுமான செல்வம் அடைக்கலநாதன். இதையே பிளாட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த் தனும் வழிமொழிகிறார். ”தமிழரின் பலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாக சூரிச்சில் தமிழ் பேசும் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை” என்கிறார் இவர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் விடுதலை முன்னணி, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (பத்மநாபா அணி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் எந்தவித நிபந்தனையும், வேண்டுகோளும் இல்லாமல் அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே வுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.

மனோகணேசனின் ஜனநாயக முன்னணி எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்குச் சில நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கியிருக்கிறது. ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலை முன்னணியும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கவுள்ள நிலையில், தமிழரசு கட்சி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளைக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற தவியாகத் தவிக்கிறார்கள் ராஜபக்ஷேவும் ஃபொன்சேகாவும். சிங்கள வாக்குகள் சிதறிப் பிரியும் வேளையில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவு மட்டும் இருந்தால் எளிதில் வென்றுவிடலாம் என்பதால், கூட்டமைப்பைச் சாய்க்கப் பல்வேறு காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறார் ராஜபக்ஷே. இரண்டு தரப்பின் இந்த படபடப்பையே ஆயுதமாக்கி, தமிழ் மக்களின் தேவைகளைப் பேரத்தின் மூலம் வென்றெடுக்க வேண்டிய கூட்டமைப்போ எந்த முடிவும் எடுக்க முடியாமல் நிலைதடுமாறியக் கப்பலாகத் தடுமாறுகிறது.

இந்தக் கூட்டமைப்புதான் இலங்கையில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கியின் பெரும்பகுதியை வைத்திருக்கிறது. ”தமிழ் மக்களைக் கொன்று குவித்த, புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணமான ராஜபக்ஷே மற்றும் ஃபொன்சேகா இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். இதைப் பார்த்துக் கோபப்பட்ட ராஜபக்ஷே, இந்தக் கூட்டமைப்பையே பிளக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில் உள்ள சில எம்.பி-க்களைத் தனியாகப் பிரிக்கும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. ராஜபக்ஷே பிறந்தநாளின்போது கூட்டமைப்பின் எம்.பி சிவநாதன் கிஷோர், அவரை வாழ்த்திக் கட்டித் தழுவியிருக்கிறார். அனைத்து தமிழ் எம்.பி-க்களையும் தன்னைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் மகிந்தா.

இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் குதித்தார். இதற்கு மற்றொரு எம்.பி-யான ஸ்ரீகாந்தாவும் ஆதரவு தெரிவித்தார். ”ராஜபக்ஷேவின் தூண்டுதல் படியே சிவாஜிலிங்கம் நிற்கிறார்” என்று சிவசக்தி ஆனந்தன் போன்றோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ”தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு உடையாமல் போனால் தமிழ்ச் சமூகத்தின் வாக்குகளில் பெரும்பகுதி ரணிலை நம்பி ஃபொன்சேகாவுக்கு விழுந்து விடும். இதன் மூலம் எளிதாக அதிபர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் ஃபொன்சேகா. இதைத் தடுக்க நினைக்கும் ராஜபக்ஷே, டெலோவைச் சார்ந்த சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்தி அந்த வாக்குகளைச் சிதறடிக்க நினைக்கிறார்” என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். தற்போதைய நிலைமையில், தமிழகத்தின் விஜயகாந்த் நிலைமைதான் சிவாஜிலிங்கத்துக்கு இலங்கையில். தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பிரித்து வெற்றி தோல்வியை மாற்றும் வல்லமை படைத்த விஜயகாந்த்தைப் போன்றுதான் இலங்கையிலும் தமிழர்களின் கணிசமான வாக்கைப் பிரித்து ஃபொன்சேகாவின் வெற்றியைப் பறிக்கப்போகிறார் சிவாஜிலிங்கம் என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள். இதை சிவாஜிலிங்கம் மறுக்கிறார். ”இப்போதும்கூட நேரம் கடந்துவிடவில்லை. வடக்கு, கிழக்கு ராணுவமயமாக்கலைத் தடுத்து எமது மக்களின் சுதந்திர மீள்குடியேற்றத்தை உறுதி செய்தால், நாளையே நான் தேர்தலில் இருந்து விலகத் தயார்!” என்கிறார். ஃபொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார் மனோகணேசன்.

இந்த பரமபத ஆட்டத்தில் பரிதாபமாக பாம்புக் கொத்து வாங்குவதைத் தவிர, அப்பாவி மக்களுக்கு வேறு வழி இல்லை!

– மு.தாமரைக்கண்ணன்

நன்றி: விகடன்

http://meenakam.com/?p=1018

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை நிறுத்துவதால் தமிழரின் வாக்குகள் பிரிவடையும், அதனால் மகிந்த வெல்லுவதற்கு சந்தர்ப்பம் அதிகமாகும் என்பது எல்லாம் சரி, ஆனால் பொன்சேக்காவை ஆட்சியில் அமர்த்துவதால் எமக்கு என்ன நன்மை??

ஏதோ மகிந்த மட்டும்தான் எம்மைக் கொலை செய்தது போலவும், பொன்சேக்காவுக்கு இதில் எந்தச் சம்பந்தமுமில்லை போலவுமல்லவா காட்டிக்கொள்கிறார்கள்.மகிந்த செய்த இன அழிப்பில் பொன்சேக்காதான் பிரதான கதாப்பாத்திரம். தமிழர் வந்தேறுகுடிகள், சிங்களவரின் தயவில்த்தான் அவர்கள் வாழவேண்டும் என்று அண்மையில் கூடக் கூறியிருந்தானே?? புல்கள் கூட இவனது கொடூரம் அறிந்துதானே இலக்கு வைத்தார்கள்?!இப்போது மட்டும் அவன் நல்லவனாகத் தெரிவது எப்படி??

நாம் வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் இந்த ரெண்டு பேய்களில் ஒன்றுதான் வரப்போகிறது.

சிவாஜி லிங்கத்தை நிறுத்தியது இந்தியாவாகக்கூட இருக்கலாம்.

இந்து சிங்கள தேசத்தின் தேர்தல். நாம் விலகியிருப்பதுதான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சிலர் ஆட்சிமாற்றம் வந்தால் விடிவு கிட்டும் என்று நம்புகின்றார்கள். அத்தோடு ஐ.தே.க. ஏதாவது செய்யும் என்ற நினைப்பு வேறு.

சிங்கள ஆளும்தரப்பினர் எந்தத் தீர்வையும் தாமாகத் தரப்போவதில்லை என்பது இத்தனை வருட போராட்டங்களில் இருந்தும் கற்காத ஒரு படிப்பினை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.