Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவாஜிலிங்கம் இன்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும்.

என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை.

இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறவதில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெருவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் விழும் தமிழர்களின் வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் வாயிலாக தமிழர்களின் வாக்குகளை அதிபர் ராஜபக்சவுக்கு சாதிகமாக திருப்புவதில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பதாலும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்துகொள்வது அவருக்கு ஆதரவாக தமிழர்களின் வாக்குகளை ஒன்று சேர்க்கும் என்று கருதப்பட்டதாலும் அவரை மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நன்றி thedipaar.com

செய்திகளுக்கு http://www.thedipaar.com/news/news.php?id=10723

அப்ப இந்தியா தான் அவருக்கு பின்னால் இருக்கில்லையா?

இங்க சில அரசியல் அவதானிகள் சென்னார்களே இந்தியாதான் இராஜபக்ஸ வெல்ல வேனுமேன்பதற்காக சிவாஜிலிங்கத்த்துக்கு ஜூவால் எத்திவிட்டதாக?

இப்ப அவங்க என்ன சொல்லப்போறங்க? மக்களை திசை திருப்ப இந்தியாவும் சிவாஜிலிங்கமும் நாடகமாடுவதாகவா?

எதுக்கும் நானும் போய் கோயில்ல அரிச்சனை செய்திட்டு வாறன்.. அதோட எல்லா பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு வந்திடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவும் நடிக்குது. :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் நடிக்குது. :o:lol:

இப்பவாவது இவருக்கு உண்மை தெரிஞ்சுதே. நானும் போய் கோயில்ல அரிச்சனை செய்திட்டு வாறன்

அப்ப சிவாஜிலிங்கத்தார் இந்தியாவின் நிகள்ச்சி நிரலில் இல்லை...

அப்ப சிவாஜிலிங்கத்தார் இந்தியாவின் நிகள்ச்சி நிரலில் இல்லை...

சொன்னால் கேத்கமட்டாங்கலாம்.. இதுக்கு ஒரு அரசியல் ஆய்வு வேறை.

சிவாஜிலிங்கம் தனிய முடிவெடுத்தது என்னமோ கொஞ்சம் அவசரம்தான்....

இருந்தாலும் இது கூட்டமைப்பின் உள்வீட்டு விவகாரம்.... கூட்டமைப்பினர் தான் இதை தீர்க்கவேண்டும்.

அத விட்டுபோட்டு சிவாஜிலிங்கம் காசுவாங்கிட்டார்.. விளைபோயிட்டார் எண்டு கதை விட்டு குழப்பத்துக்கு காரமாயிருந்தவர்கள்

வந்து மன்னிப்பாவது மநனிiபெமயடுயய?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.