Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதாக கூட்டமைப்பிடம் பொன்சேகா உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை அவர்

ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகவும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவருக்கே ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரதான இரு வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசுவதென தாம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தும் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசு தரப்பிலிருந்து இதுவரை தமக்கு விடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவுள்ளதாக வெளியான யூகங்கள் தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது பற்றியோ அல்லது வேறு தீர்மானங்கள் குறித்தோ எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள எமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படு மென்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு வழங்குவதென ஆராய்வதனை விடவும் கட்சிக்குள் ஐக்கியத்தை எவ்வாறு கொண்டு வருவதென்பதே இன்றைய முக்கிய விடயம்.

கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் நாம் இப்போது ஈடுபட்டுள்ளோம். அது நிச்சயமாக வெற்றியளிக்குமென்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 பேரும் ஒன்றுபட்ட நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வோமென எதிர்பார்ப்பதுடன் கட்சியின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு அதன் முடிவினை ஏற்றுக் கொள்ளும் நிலையும் உருவாகுமென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://www.sankamam.com

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை அவர்

ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகவும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவருக்கே ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரதான இரு வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசுவதென தாம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தும் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசு தரப்பிலிருந்து இதுவரை தமக்கு விடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவுள்ளதாக வெளியான யூகங்கள் தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்ப என்னவெண்டால் சம்பந்தர் வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துப் போட்டுவிடடார். இவருக்குத் தெரியாது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளது மக்கள் முன்ணணி எனும் பெயரில் தேர்த்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒன்று இருக்கின்றது எனவும். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தற்போதுள்ள விடுதலைப் புலிகளது அரசியற் துறையினைச் சேர்ந்தவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பது எனும் பெயரில் தேசிய அரசியலில் களமிறக்கும் வாயப்புக்கள் அதிபர் தேர்த்தலில் சரத் வெல்வாராக இருந்தால் அதிகரிக்கும், அதன் பின்பு பாரளுமன்றத் தேர்தலில் இவர்களது அப்புக்காத்து அரசியல் வடக்குக் கிழக்கில் எடுபடாது என்பதும். வீட்டுக்கு வீடு விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களது விருப்பத்தை நேர்மையுடன் நிறைவு செய்பவர்க்கே அவர்களது உறவுகள் வாக்களிப்பார்கள் என்பதையம் இந்த அப்புக்காத்துமார் மறந்து போயிட்டினம் போலகிடக்கு. இவர்களது அறிக்கைகள் மூலம் இவர்கள் யார் என்பதையும் எதற்காக இவ்வளவு நாட்களும் காத்திருந்தார்கள் என்பதையும் தமிழ்மக்கள் இப்போது அறிந்திருப்பார்கள். எனினும் இவர்கள் கூறினாலும் கூறாது விட்டாலும் சரத்துக்குத்தான் வடக்குக்கிழக்கில் ஆளும்கட்சியின் கூலியாட்களிடமிருந்து தப்பிய வாக்குகள் போய்ச்சேரும். என்றாலும் இவர்கள் சரத்திடம் பிரச்சனையைத் தீர்த்து வைப்போன் எனச்சத்தியம் வாங்கி அதன் பின்பு அவர் வனது பேரினவாத முகத்ததைக் காட்டி சத்தியத்தில் இருந்து பின்வாங்கினால் அதுவும் வடக்குக் கிழக்கில் ஒரு பதிய அரசியல் தலைமை உருவாவதை எளிதாக்கும் இதுக்குத்தானே நாங்கள் காத்திருக்கிறோம், மிஸ்டர் சம்பந்தர் அப்புக்காத்து, இன்னமும் நன்றாகவே அறிக்கைகளை அள்ளிவிடுங்கள்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது பற்றியோ அல்லது வேறு தீர்மானங்கள் குறித்தோ எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள எமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படு மென்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு வழங்குவதென ஆராய்வதனை விடவும் கட்சிக்குள் ஐக்கியத்தை எவ்வாறு கொண்டு வருவதென்பதே இன்றைய முக்கிய விடயம்.

கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் நாம் இப்போது ஈடுபட்டுள்ளோம். அது நிச்சயமாக வெற்றியளிக்குமென்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 பேரும் ஒன்றுபட்ட நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வோமென எதிர்பார்ப்பதுடன் கட்சியின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு அதன் முடிவினை ஏற்றுக் கொள்ளும் நிலையும் உருவாகுமென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://www.sankamam.com

இப்ப என்னவெண்டால் சம்பந்தர் வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துப் போட்டுவிடடார். இவருக்குத் தெரியாது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளது மக்கள் முன்ணணி எனும் பெயரில் தேர்த்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒன்று இருக்கின்றது எனவும். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தற்போதுள்ள விடுதலைப் புலிகளது அரசியற் துறையினைச் சேர்ந்தவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பது எனும் பெயரில் தேசிய அரசியலில் களமிறக்கும் வாயப்புக்கள் அதிபர் தேர்த்தலில் சரத் வெல்வாராக இருந்தால் அதிகரிக்கும், அதன் பின்பு பாரளுமன்றத் தேர்தலில் இவர்களது அப்புக்காத்து அரசியல் வடக்குக் கிழக்கில் எடுபடாது என்பதும். வீட்டுக்கு வீடு விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களது விருப்பத்தை நேர்மையுடன் நிறைவு செய்பவர்க்கே அவர்களது உறவுகள் வாக்களிப்பார்கள் என்பதையம் இந்த அப்புக்காத்துமார் மறந்து போயிட்டினம் போலகிடக்கு. இவர்களது அறிக்கைகள் மூலம் இவர்கள் யார் என்பதையும் எதற்காக இவ்வளவு நாட்களும் காத்திருந்தார்கள் என்பதையும் தமிழ்மக்கள் இப்போது அறிந்திருப்பார்கள். எனினும் இவர்கள் கூறினாலும் கூறாது விட்டாலும் சரத்துக்குத்தான் வடக்குக்கிழக்கில் ஆளும்கட்சியின் கூலியாட்களிடமிருந்து தப்பிய வாக்குகள் போய்ச்சேரும். என்றாலும் இவர்கள் சரத்திடம் பிரச்சனையைத் தீர்த்து வைப்போன் எனச்சத்தியம் வாங்கி அதன் பின்பு அவர் வனது பேரினவாத முகத்ததைக் காட்டி சத்தியத்தில் இருந்து பின்வாங்கினால் அதுவும் வடக்குக் கிழக்கில் ஒரு பதிய அரசியல் தலைமை உருவாவதை எளிதாக்கும் இதுக்குத்தானே நாங்கள் காத்திருக்கிறோம், மிஸ்டர் சம்பந்தர் அப்புக்காத்து, இன்னமும் நன்றாகவே அறிக்கைகளை அள்ளிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கு வாக்களிப்பதால் மகிந்தவைப் பழிவாங்கிவிட முடியும் என்கிற கருத்து ஒரு சாராரிடம் இருக்கிறது. ஆனால் அந்தப் பழிவாங்கலால் எமக்கு என்ன லாபம் என்றால் எதுவுமில்லை. மகிந்தவைக் கொண்டுவந்ததுதான் இன்று எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்லும் நாங்கள் நாளையே பொன்சேக்கா மகிந்தவிலும் கொடூரமாக முகமெடுக்கும்போது என்ன சொல்லப்போகிறோம்? அப்போது யாரின்மீது பழியைப் போடப்போகிறது கூட்டமைப்பு?

இவ்வளவு காலமும் தமிழருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்பது சம்பந்தன் ஐய்யா அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இவர்கள் செய்வோம் என்று உறுதியளித்த எத்தனை விடயங்களை இதுவரையிலும் செய்திருக்கிறார்கள்? சிங்களத் தலைவர்களை நம்பத்தயாராக இல்லையென்று இதுவரை கூறிவந்த கூட்டமைப்பு பொன்சேக்காவை மட்டும் எப்படி நம்பியது??

உருவத்திலும், இனவெறியிலும் இந்த இஎஉவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தமக்கு சவாலாக வரப்போகிறான் என்று மகிந்த சகோதரர்கள் கவலைப்படும்வரையிலும் இந்த இரு இனக்கொலை நாயகர்களும் ஒரே நோக்கத்தையும், வெறியையும் கொண்டிருந்தவர்கள்தான். இன்றும் அந்த சிங்கள ஆதிக்க வெறியும், இனவழிப்பின் வெற்றிப் பெருமிதமும் இன்னும் இவர்களிடம் அபரிமிதமாகக் காணப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவன் சொல்லியதை அப்படியே நம்பி, அதை மக்களுக்கு வேறு சொல்லுகிறதை என்னெவென்பது.

பிறகென்ன? எல்லாரும் வரிசையில் நின்று விரலில் மை பூசி ஓட்டுப் போடுவோம். தமிழர்களே திரண்டு வாருங்கள். நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது குடு குடு குடு குடு குடு குடு குடு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.