Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு ரணிலின் உக்கிப்போன அதிகார பரவலாக்கல் தீர்வு

Featured Replies

தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத் தவரும் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே தமது திட்டம் என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வுத்திட்டம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

அ) சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.

ஆ) சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையைப் பேணிப்பாது காத்தலும் மதத்தைப் பின்பற்றுதல், மொழியைப் பேணிப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்து, தம் தனித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.

இ) சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.

ஈ) தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கரும மொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.

உ)சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்

* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.

* ஓர் இனத்தை அல்லது மதத்தைவிடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.

* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.

ஊ) புதிய நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்புச் சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புச் சட்டத்தை அமுல்படுத்தல்.

எ) மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்குப் பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும் மத்திய,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.

ஏ) பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள,தமிழ்,முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டுநடத்துவதற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.

என்று கூறப்பட்டுள்ளது.

ரணில் இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு இனப்பைரச்சினை தீர்வு என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை . மாறாக வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தினரை அகற்றி அங்கு அரசாங்க பணியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் பணிபுரிய விட்டாலே போதும் மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைபெறும். இதற்கு ஏன் அதிகாரபரவலாக்கல் திட்டம் என்ற பெயரை வைப்பான்? http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

இனி எனது பணி எழுத்துத்தான் என தீர்மானித்து விட்டாலும்கூட சமகால அரசியல் துயரம் தருவதாகவே உள்ளது. மலை உச்சியில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் சுற்றுப் பாதைகளை நிராகரித்து மக்கள் குத்தண மேலேறிவரவேணடுமென வலியுறுத்துகிறார்கள். மக்கள் சாத்தியமில்லாத தெரிவுகலை புறக்கணித்து விடுவார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையுடன் எந்த பொருளாதார தொடர்புகளும் வேண்டாமென்கிறார்கள். ஈழத்தையும் இலங்கையோடு சேர்த்து தூக்கி எறிவதில் அவர்களுக்குச் சிரமமொன்றில்லை. நெந்து நுலாகிப்போன மக்களோ புலம்பெயர்ந்த தமிழர்கள் புனர்வாழ்வு புனர் நிர்மானம் உற்பத்தி சுகாதாரம் கல்வி வேலை வாய்ப்புகளில் புலம் பெயர்ந்தவர்கள் முத்லீடு செய்ய வேணும் என நினைக்கிறார்கள். மக்களது அபிலாசைகளை உள்வாங்காத மக்கள் நிலை உணர்ந்து தங்கு மடங்களூடாக பயணிக்காத, புலம் பெயர்ந்த தமிழர்களது அதிதீவிரம் வட்டப்பாதையில் ஓடுகிற ஓட்டம்தான். எங்கும் போய்ச் சேராது. புலம்பெயர்ந்த உறவுகளோடு சமரசமில்லாத கல அரசியல் நிரந்தர சரணாகதியில் முடிந்துவிடலாம். நிலமைகள் மனசுக்கு கஸ்டமாக இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.