Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் மீழ் குடியமர்வு வட்டிக்கு கடன்கொடுப்பதிலா முடிவடைய போகின்றது?

Featured Replies

இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வட்டிக்கு கடன் வழங்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊதுகுழல் டக்ளஸ் கூறியுள்ளார். இதுவரை 75 இலட்சம் கொடுத்துள்ளதாக மேலும் பெருமையாக கூறியுள்ளார்.

யாழ் குடா நாட்டில் உள்ள மக்களின் சேமிப்பு அரச வங்கிகளில் மட்டும் கிட்ட தட்ட 4000 கோடிகள் இது 10 வருடங்களுக்கு முற்பட்ட கணக்கு. அதன் பின்னர் கொழும்பில் உள்ள வங்கிகளில் வடபகுதி தமிழர்களது பணங்கள் பெருமளவு வைப்பில் இடப்பட்டுள்ளன. இது தவிர வன்னியில் இருந்து தடுப்பு முகாமிற்குள் மக்கள் அடைக்கப்பட்டபோது அந்த மக்களால் வைப்பில் இடப்பட்ட பணம் நகைகள் கிட்டதட்ட 400 மில்லியன் ரூபாய்கள் இதனை மத்திய வங்கியே குறிப்பிட்டு இருந்தது.

ஆகவே இவ்வளவு தமிழர்களது நிதியினையும் வைத்துக்கொண்டு அதில் வரும் இலாபங்களில் , இடம்பெயர்ந்த மக்களுக்கு கடன்களை வழங்கும் அரசாங்கம். அதனை ஒரு பிரச்சார திட்டமாக கூறிவருகின்றது. இதற்கு தமிழ் அமைச்சர் என்று பெருமையாக கூறும் டக்ளஸ் அவர்கள் ஒரு சிபார்சு வேற செய்துகொண்டு ஊதுகுழலாகவும் செயற்படுவது எவ்வளவு கேலித்தனம்.

பழுதடைந்த உலர் உணவினை நிவாரணமாகவும்,காணிகளுக்கு சென்றதன் பின்னர் இந்தியா கொடுத்த தகரங்களையும் தவிர வேறு எதனையும் வழங்கவில்லை. ஆனால் வடக்கின் வசந்தம் என 4000 மில்லியன் ரூபா நிதி மட்டும் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை.

காரணம் உலர் உணவு உலக உணவு திட்டத்தினாலும் சர்வதேச நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது.

தகரங்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டது.அதுவும் ஒழுங்காக இன்னமும் கொடுத்து முடியவில்லை.

வீட்டு தேவை உபகரணங்கள் செஞ்சிலுவை சங்கம், ஐ. நா வினால் கொடுக்கப்படுகின்றது. மீழ் குடியமர்வு நிதி 5,000 - 10,000 வரையான நிதியும் ஐ. நா வினால் வழங்கப்படுகின்றது.

இது தவிர மக்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் வடக்கின் வசந்தம் எனும் திட்டங்களில் இருந்தே மஹிந்தவின் மகன் நமல் இராசபக்‌ஷவின் நிறுவனத்திற்கு இளைஞர் செயற்பாட்டிற்கு என 50 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதும் அதில் இருந்தே தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

2002 இல் மீழ் குடியமர்வின் போது ஆக குறைந்தது மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியில் மீழ் குடியமர்வு பொதி தயாரிக்கபட்டது. இது விடுதலைப்புலிகள், அரசாங்கம் உலக வங்கி ஆகியன சேர்ந்து தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தயாரிப்பில் அனைத்துலக நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள் பங்கெடுத்தன. ஆனால் இப்போ மஹிந்த சகோதரர்களின் தயாரிப்பில் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகவே காணப்படுகின்றது.

வடக்கின் வசந்தத்தில் உள்ள அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே தமிழர் அவரும் அரச அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இதனை கருத்தில் கொண்ட சர்வதேசம் ஏன் இந்த நிதியினை மஹிந்தவுக்கு வழங்குகின்றது. அவ்வாறு வழங்கினாலும் ஏன் ஓர் கண்காணிப்பினை செய்ய கூடாது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் மீழ் குடியமர்வு செய்யும் வேளை (2002 - 2008) சர்வதேசம் எத்தனை குழுக்களை அமைத்து கண்காணித்தது. இப்போ ஏன் அதனை செய்ய முடியாது?

இதனை விட இந்தியாவால் ஒதுக்கப்பட்ட 1000 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது. இந்தியா உண்மையில் அதனை வழங்கியதா? யாரிடம்? அப்படி வழங்கவிலையாயின் ஏன்? இதனை தமிழக அரசியல் வாதிகள் அல்லது ஆதரவு அமைப்புக்கள் ஏன் இந்த விடயத்தினை டில்லியில் எழுப்பவில்லை? ஏன் தொல் திருமா கூட இந்த கேள்வியினை ஏன் எழுப்பவில்லை?

அண்மையில் வியன்னாவில் நடந்த மா நாட்டில் இந்த கேள்விகள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் இந்த கேள்வி எழுப்பபட்டது. அதே வேளை ஜெனீவாவில் நடந்த கூட்டத்திலும் தெளிவு படுத்தப்பட்டது. அனைவரும் தவறுகளை ஏற்று கொண்டனர், ஆனால் நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏன் தயங்குகின்றனர்.

நிச்சயமாக அனைத்து தமிழர் தரப்பில் போராட்டங்கள் நடத்துபவர்கள் இந்த விடயங்களை கட்டாயம் கருத்தில் எடுக்கவேண்டும். கூட்டங்கள் , மா நாடுகள் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் இதனை கருத்தில் எடுக்கவேண்டும்.

http://www.eelanatham.net/news/important

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.