Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லச் சொன்னவனுக்கல்ல கொன்றவனுக்தே தமிழரின் வாக்காம்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொல்லச் சொன்னவனுக்கல்ல கொன்றவனுக்தே தமிழரின் வாக்காம்..

வடக்கே யாழ்ப்பாணம் முதல் மன்னார் வவுனியா மக்கள் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள் என்பது எங்களுடைய வடக்கு விஜயத்தின் போதும் நாம் அறிந்துகொண்டோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சனநாயகமக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் நேற்றுமாலை ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: இந்த ஆட்சியாளர் காலத்தில்தான் தமிழ்மக்கள் பலர் காணாமல் போனார்கள். அவர்களுடைய கலாச்சாரம் பண்பாடு கல்வி காணாமல் போனது. இந்த ஆட்சியாளரைபோல் எந்த அரசும் தமிழ் மக்களுக்கு மோசமாக நடந்துகொள்ளவில்லை. ஆட்சியாளரை மாற்றவேண்டும். அதற்கு ஒரே வழி எதிரணி வேட்பாளருக்கு வாக்களிப்பதாகும்.

தமிழ்மக்கள் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்பதும் மகிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என குறிப்பிட்ட மனோ கணேசன், கடந்த காலத்தில் தமிழ்மக்கள் பட்ட துன்பங்கள் போதும். இனியும் துன்பம் அனுபவிக்கமுடியாது. இந்த ஆட்சியாளர்களை வீட்டு அனுப்பிவைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்கு ஒரேவழி ஜெனரல் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதே ஆகும் என்றார்.

இதுவரை வெற்றி பெறக்கூடியதாக கருதப்படும் இரண்டு சிங்கள வேட்பாளர்களும் தமிழர்களுக்கு உரிய அடிப்படைத் தீர்வுகளையேனும் கோடிட்டுக் காட்டவில்லை. பேயுக்கா அல்லது பிசாசுக்கா வாக்களிப்பது என்று அனைவரும் சிந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது வெளிப்படை.

சிவாஜிலிங்கமும் கட்சி / கூட்டமைப்பு ஒன்றில் இருக்க வேண்டிய அடிப்படை கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித் தனமாக செயற்பட்டதாக தோன்றுகிறது. இது வழமையாக தமிழர் மத்தியில் தாராளமாக வெளிப்படும் சந்தேகப் பார்வையை உசுப்பிவிட்டதாக தெரிகிறது. அதே முறையில் தமிழ் காங்கிரசும் பஹிஸ்கரிப்போம் என அறிக்கை விட்டனர்.

கூட்டமைப்பு அவசரப்பட்டு அரைகுறை உறுதி மொழிகளை நம்பி அறிக்கை விடத் தயாராகுகிறது. பேரம் பேச இன்னமும் மூன்று கிழமைகள் இருக்க ஏன் இந்த அவசரமோ தெரியவில்லை. அரைகுறை உறுதி மொழிகளே தமிழர்களுக்குப் போதும் என்ற முடிவோ தெரியவில்லை! இறக்குமுன் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற அவசரமோ எனவும் மக்கள் கதைப்பது காதுகளில் விழுகிறது.

அரச அடிவருடிகளின் மற்றும் மலையகக் கட்சிகள் போல் அடிமைத்தன அரசியல் செய்து எலும்புத் துண்டையாவது நக்குவோம் என பேசுவோரும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

புத்தி ஜீவிகள் என்ற பெயரில் இன்னொரு குழுவினர் அறிக்கை விட்டு தமக்குத் தெரிந்த அரைகுறை ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பஹிஸ்கரிப்பதும் தமிழர்களுக்கு வாக்களிப்பதுவும் ஜனநாயகம் இல்லை என்ற பாணியில் அவர்கள் அறிக்கை. சிவாஜிலிங்கத்தின், தமிழ் காங்கிரசின், டக்ளசின், சித்தார்த்தனின், என் கூட்டமைப்பில் உள்ளவர்களின் தான் தோன்றித் தனத்தை வன்மையாக கண்டித்து இருந்தால் புத்திஜீவிகளை பாராட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் தமிழர்கள் வலிமையான, நேர்மையான, உறுதியான தலைமை இன்றி மீண்டும் நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர்.

நாம் சரியான திசையில் செல்கிறோமா?

எனவே தமிழர்கள் அவசரப்படாது இறுதி சிலதினங்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதே விவேகமானது எனத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனவே தமிழர்கள் அவசரப்படாது இறுதி சிலதினங்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதே விவேகமானது எனத் தோன்றுகிறது.

பொறுத்திருந்து பார்க்கலாம்

மகிந்தவையும் சிவாஐpலிங்கத்தையும் புறந்தள்ளியுள்ளதாக செய்திகள் கசிவதால்...

நல்லமுடிவு இல்லையென்றாலும் ராஐதந்திர முடிவு ஒன்றைத்தான் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட எனது கருத்து

---------------------

என்னிடம் இப்போது தமிழீழ கனவுகள் துயரம்தோய்ந்த கனவுகளாக மட்டுமே உள்ளன. ஆனால் பழிவாங்கும் உணர்வு ஓரமாக இருக்கிறதுதான். ஆனால் நாம் தமிழர்கள் மகிந்தவை பழிவாங்குவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. கடைசியில் சரத் மகிந்தவை பழிவாங்கினால் ஒரு சிறு மகிழ்வு.. அவ்வளவுதான்..

அதேநேரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் மகிந்தவை பெருவாரியாக ஆதரித்தால்.. சரி அந்த மக்கள் தமது வாழ்வு சார்ந்த ஏதோ ஒரு காரணத்திற்காகவே அதனை செய்திருக்கிறார்கள் என்பதையும் ஏற்க தயாராயிருக்கிறேன்.

----------

புலம்பெயர்ந்துள்ள நாம் மேற்குலகோடு நட்பினையும் புதிய உறவுகளையும் உருவாக்குகிறமாதிரி எதையும் புடுங்கப்போவதில்லை என்று தெரிந்து கொண்டும், இதை சொல்கிறேன். இலங்கையில் மேற்குலகு சார்ந்த ஒரு அரசு உருவாக வேண்டும். இலங்கை அரசு மேற்குலகில் சார - நாம் மேற்குலகில் என்ற ஒரு நேர்கோட்டில் ஏதோ இருக்கிறது என்பது போலத் தெரியுது..

--

லெனின் தனது வகுப்பில் சொன்னாராம் - உனக்கு நான்கு எதிரிகள் இருந்தால் 3 எதிரிகளோடு சேர்ந்து ஒரு எதிரியை ஒழி - இப்படியே மற்ற இருவரோடு சேர்ந்து இன்னொரு எதிரிரய ஒழி..

அப்போது மாணவன் கேட்டானாம். இறுதியாக ஒரு எதிரி எஞ்சுவானே.. அவனை என்ன செய்வதென்று..

லெனின் சொன்னார் - ஆம்.. அவனை நீதான் ஒழிக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் நீ ஒரு கம்யுனிஸ்டே கிடையாது என்று..

  • கருத்துக்கள உறவுகள்

தங்களைப்போல்தான் எல்லோரும் நினைக்கிறோம்

அதன் முதற்படியாக

சரத்தை ஆட்சி ஏற்றனால்

மகிந்தவின் பல்லுப்புடுங்குப்படுமா?

அதுதான் இன்றை கேள்வி

புலம்பெயர்ந்துள்ள நாம் மேற்குலகோடு நட்பினையும் புதிய உறவுகளையும் உருவாக்குகிறமாதிரி எதையும் புடுங்கப்போவதில்லை என்று தெரிந்து கொண்டும், இதை சொல்கிறேன். இலங்கையில் மேற்குலகு சார்ந்த ஒரு அரசு உருவாக வேண்டும். இலங்கை அரசு மேற்குலகில் சார - நாம் மேற்குலகில் என்ற ஒரு நேர்கோட்டில் ஏதோ இருக்கிறது என்பது போலத் தெரியுது..

--

மேற்குலகின் ஆதரவோடு இலங்கையில் சிங்கள அரசு இருந்த போது தமிழர்கள் பலமான ஒரு தளத்தில் இருந்தனர்... அப்போது தமிழர்களை ஒடுக்க முழுமையான ஆதரவை கொடுத்து நிண்றது மேற்குலகம்... எங்கள் மீது தடைகள் போட்டு சிங்களவரோடு இராணுவ ஒத்துளைப்பு ஒப்பந்தங்களையு, புலநாய்வு தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களையும் போட்டது மேற்குலகம்... அதையும் விட இஸ்ரெலிய பாதுகாப்பு நிறுவனம் ஒண்று இலங்கைக்கு இராணுவ திட்டமிடல் ஆலோசனை பொறுப்பில் நியமிக்க பட்டு இருந்தது.. அந்த நிறுவனத்துக்கு தேவையான பணத்தை செலுத்தியது மேற்குலகு சார்ந்த இணைத்தலைமை நாடுகள்...

இப்படி அனேக வளிகளில் இலங்கைக்கு உதவிய மேற்குலகு தனது பலனை எதிர்ப்பார்க்கும் வேளை இது... இதில் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் ஆட்ச்சிக்கு வருவார் எண்றால் முழுமையாக சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் தமிழர்கள் நலன்கள் எல்லாம் அடிபட்டு போகும்..

சரத் ஆட்சிக்கு வந்தால் மேற்குலகில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் தமிழர்கள் புலி எனும் பெயரில் கைது செய்யப்படும் நிலையும்.. மேலும் தமிழர்கள் செயற்பட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு இருப்பார்கள்...

தமிழர்களை பொறுத்தவரை வேண்டாத நிகள்வுகளின் ஆரம்ப புள்ளி எதுவாக இருந்தது எண்றால் மேற்குலகின் ஆதரவளரான இரணில் சிறிது காலம் ஆட்சி செய்தமைதான்...

  • கருத்துக்கள உறவுகள்

சரத் ஆட்சிக்கு வந்தால் மேற்குலகில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் தமிழர்கள் புலி எனும் பெயரில் கைது செய்யப்படும் நிலையும்.. மேலும் தமிழர்கள் செயற்பட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு இருப்பார்கள்...

தமிழர்களை பொறுத்தவரை வேண்டாத நிகள்வுகளின் ஆரம்ப புள்ளி எதுவாக இருந்தது எண்றால் மேற்குலகின் ஆதரவளரான இரணில் சிறிது காலம் ஆட்சி செய்தமைதான்...

சிந்திக்க வைக்கும் கருத்து

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.