Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளும் தரப்பும், எதிரணியும் கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் அளுத்தம் ? இன்று முடிவு!

Featured Replies

நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலை கூடிய பின்னர் கோத்தபாய, பசில் ஆகியோரிடம் இருந்து கூட்டமைப்பினை சந்திப்பதற்கு அழைப்புக்கள் வந்தது. இதே வேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதால் ஆளும் கட்சியுடன் பேசுவதனை சம்பந்தர் வெட்டிவிட்டார் என கூறப்படுகின்றது. எனினும் கோத்தபாய கூட்டமைப்பினரை பயமுறுத்தும் முகமாகவே அழைத்ததாக கூறப்படுகின்றது.

இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகச் சென்று சந்தித்து உரையாடிய பின்னர் சரத் பொன்சேகா சந்திக்க விரும்புவதாகவும் சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை தர தயாராக இருப்பதாகவும் ஆகவே அவரை முடிவு எடுப்பதற்கு முன்பாக சந்திக்கவேண்டும் எனவும் ரணில் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சரத்பொன்சேகாவை சந்தித்து எழுத்து மூலமான சரத் பொன்சேகா கையெழுத்திட்ட பத்திரத்தினை பெற்று கொண்டார்.

இந்த எழுத்து மூல பத்திரத்தினை பெற்று கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது சம்பந்தமான முடிவை வழங்கியதாகவும் எப்படியாயினும் தான் கூட்டமைப்பு எம்.பி க்களை உள்வாங்கி விடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே சரத் அணியும் அவசரப்பட்டு ஊடகக்ங்களுக்கு அறிக்கை விட்டது அதாவது கூட்டமைப்பு தன்னையே ஆதரிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் செய்தியினை பார்த்துவிட்டு பல ஊடகங்கள் கூட்டமைப்பினை தொடர்பு கொண்டபோது அவ்வாறு முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆகவே இன்றுதான் கூட்டமைப்பு முடிவு எடுக்கும் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்குத் தமிழர்களின் வாக்குகள் இன்றியமையாதவை எனக் கருதும் இரு பிரதான வேட்பாளர்களின் தரப்பினரும், தமிழர்களின் வாக்குகளை வளைத்துப்போடும் இலக்குடன் உறுதியுடன் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமது தரப்பை ஆதரிக்கும்படியான முடிவை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர் .

யாரையுமே நம்பி மக்களுக்கு நாம் சிபார்சு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கஜன், பத்மினி, செல்வம், சிவாகிலிங்கம், சிறிகாந்தா, கனகசபை, அரியனேந்திரன், ஜெயானந்த மூர்த்தி, தன்கேஸ்வரி, கிஷோர், உட்பட ஏனையோர் உள்ளனர்.

இதில் கிஷோர், தங்கேஸ்வரி ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் வேறு நிகழ்ச்சினிரலில் இருந்தாலும்இந்த விடயத்திற்கு தாம் ஒத்துபோவதாக கூறியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க சில எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாத நிலையிலும் உள்ளனர். கனகசபை எம்.பி இந்தியாவில் உள்ளார். ஜெயானந்த மூர்த்தி வெளி நாட்டில், கனகரட்னம் சிறையில்: ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இன்று 05/01/2010 அன்று பசில் இராஜபக்‌ஷ கூட்டமைப்பு எம்பி க்களுடன் நேரடியாக சந்தித்து சம்பந்தன் பொய் சொல்கின்றார். அவர் பலதடவை மஹிந்த இராசபக்‌ஷவுடன் வந்து பேசினார் அது வெளியில் தெரியாது. இந்த வாரம் கூட கொழும்பில் உள்ள பிரபல முஸ்லிம் வர்த்தகர் மரிக்கார் என்பவருடன் வந்து பேசினார். சரத் பொன்சேகா கூறிய விடயத்திற்கு மேலாக நாங்களும் சம்மதித்தோம் என கூறியுள்ளார் பசில்.

இதே வேளை சம்பந்தன் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை ஆனால் எங்களுடன் பேசியதனையும், நாம் சொன்னவற்றையும் அப்படியே சொல்லவேண்டும் இல்லையேல் நாம் அதனை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளார்.

இதே வேளை நேற்றைய கூட்டத்தில் சரத்பொன்சேகா அதரவு அணியும், எதிரணியும் தமது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே இன்றும் இரண்டு முடிவுகளே வருவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக கூறப்படுகின்றது.

http://www.eelanatham.net/news/important

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.