Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனின் படமே போதும் அச்சமூட்ட… – கண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் படமே போதும் அச்சமூட்ட… – கண்மணி

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இருக்கும் நிலைகளை எல்லாம்விட்டு தமிழீழம் அமைவதற்கு எதிரான கருத்தியல் மாநாடாக அமைந்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.வி.தங்கபாலு இந்தியா ஒரு ஜனநாயக நாடு, காங்கிரஸ் கட்சி உள்ளதால்தான் இங்கு ஜனநாயகம் காக்கப்படுகிறது என்கிற 2010ஆம் ஆண்டின் ஒரு சிறந்த நகைச்சுவையை வெளிப்படுத்தினார். இந்திய நாட்டின் ஜனநாயகம் ஒருபக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம் நமக்குத் தெரியாதா? தங்கபாலு மேடையைவிட்டு இறங்கும்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பாரா? மாட்டாரா? என்பதை சோனியாவின் மூளை செல்கள் அல்லவா தீர்மானிக்கும். அந்த அளவிற்கு ஆற்றல் வாய்ந்த மிகப்பெரிய ஜனநாயகம் கொண்ட கட்சிதான் காங்கிரஸ்.

தீவிரவாதத்தை வேரறுக்கப்படும் என அறிவித்துவிட்டு இந்தியாவிற்குள் பழங்குடியின மக்கள் மீது ஒரு பாரிய சமர்தொடுக்க, அரச பயங்கரவாதத்தின் அச்சானிக் கொம்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து பேசினார்கள். அவர் உதிர்த்த முத்துகளில் தமிழீழம் என்பது மாயை என்றாரே, இதைவிட ஒரு மடமை வேறெதுவும் இருக்க முடியாது. மடமையென்பதும், அடிமைப்புத்தி என்பதும் காங்கிரசின் தனிப்பெரும் சொத்து. அவரோடு இணைந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்கிற அறிவாளி கருணாநிதிக்கு அறிவுரை சொல்கிறார்.

புலிகளின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். காரணம் இன்று தமிழகத்தில் வெளிப்படையாக புலிகளை ஆதரித்துப் பேசுகிறார்களாம். அதன் தலைவர் பிரபாகரன் புகழ் பாடுகிறார்களாம். ஆகவே, அப்படி செய்வோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். தமிழின உணர்வு, தன்மானம், தமக்கான அடையாளத்தைக் காத்துக் கொள்ளும் லட்சியம் என எந்தவொரு அடிப்படையும் இல்லாத காங்கிரஸ், அதன் தலைமை எவ்வழியோ அவ்வழியேதான் இருக்கும். இவர்களுக்கு பிரபாகரன் வேண்டாம்.

இந்திய தேசிய விலங்கான புலியை இனி இவர்கள் புலி என அழைக்கமாட்டார்கள். பூனையென்றுதான் அழைப்பார்கள். காரணம் புலி என்ற வார்த்தையே இவர்களுக்கு கிலியூட்டுகிறது. கருணாநிதிக்கு ஆலோசனை சொல்லும் இந்த அடிமைகள், கருணாநிதி இவர்களைக்காட்டிலும் ஒருபடி உயர்ந்து இந்த இனத்தைக் காட்டிக்கொடுத்த, தமது இனத்தை அடகுவைத்த மிகப்பெரிய பரிசுத்தவான் என்பது இவர்களுக்கு ஏனோ புரியாமல் போய்விட்டது. நடந்துமுடிந்த, ஈழப்போரிலே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களை இந்தியாவின் சர்வாதிகாரம் வென்றுவிட்டது என்று நாம் நினைத்து அமைதியாக இருந்துவிட முடியாது. காரணம் தமிழீழ மக்கள் தமது சொந்த மண்ணின் அடையாளத்தைக் காத்துக் கொள்ள பாரிய இழப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டே களத்தில் நின்றார்கள்.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மோதலில் தமிழீழ மக்கள் உலகளாவிய கல்வியாளர்களாக உருமாற்றப்பட்டார்கள். 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, உலகெல்லாம் புலம்பெயர்ந்து போய் உலக சமூகத்திடம் தமிழ்தேசிய அடையாளத்தைப் பதிவு செய்தார்கள். 2009ஆம் ஆண்டு நடந்து முடிந்த இந்த இன அழிப்பிற்குப்பின் அவர்கள் தமக்கான நாட்டை அடையப் போகிறார்கள். நாம் வரலாற்றை ஆய்வு செய்யும்போது, வெற்றியின் தொடக்கப் புள்ளியாக தோல்வியே இருந்திருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு தோல்வியின் மூலமும் ஒரு புதிய புதிய வரலாற்றுத் தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து அதை இச்சமூகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

2009ல் ஏற்பட்ட மாபெரும் பின்னடைவு அவர்களை தமிழீழம் என்ற லட்சியத்திற்கு உந்தித் தள்ளியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பிரான்சிலும், கனடாவிலும், அதைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். உலகச் சமூகத்தை தம்பால் திருப்பி இது எமக்கான நாடு, எமது லட்சியம், எமது கனவு, எல்லாம் தமிழீழம் மட்டும்தான் என்பதை அவர்கள் பதிவு செய்ததின் அடையாளமாகத்தான் இந்த உலகமே, தமிழீழத்தைத் திரும்பிப் பார்த்திருக்கிறது.

ஆனால் இப்படி தமிழீழ மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தை அவர்களின் தமிழீழ தாகத்தை இந்தத் தமிழ் ஊடகங்கள் ஏனோ திட்டமிட்டு மறைக்கிறது. முள்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது சொந்த உறவுகள், அவர்களின் துயர்கள், அவர்களுக்கெதிராக சிங்கள இனவெறி அரசு நடத்தும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளைக் குறித்த செய்திகள் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய ஊடகங்கள் பார்ப்பனிய பாசிச தன்மையைக் கொண்டிருப்பதால் எந்தநிலையிலும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை கூறிவிடக்கூடாது என்பதிலே மிகத் தெளிவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தந்தை பெரியார் சொன்னதைப் போல பூனூல் போடாத பார்ப்பனர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்ற கூற்று தமிழ் ஊடகத் தன்மையிலிருந்து வெளிப்படுகிறது.

ஊடகங்களைக் காட்டிலும் நம்முடைய தமிழினத் தலைவர் இருக்கிறாரே அவரின் தன்மை அதைவிட ஒருபடி மேலேயுயர்ந்து, இனதுரோகத்தின் அடையாளமாகக் காட்சியளிக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத லட்சக்கணக்கான தமிழுறவுகள் கொடுஞ்சிறையைவிட கேவலமான வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் கருணாநிதி தமது முரசொலியில் உடன்பிறப்பே என அழைத்து, ஈழத்தமிழர்களுக்காகத் தாம் இழந்த சொத்துக்கள், தாம் அனுபவித்த தண்டனைகள் அதனால் நான் ஒரு சாதாரண குடிசைவாசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரேஷன் கடைகளில் நான் போடும் ஒரு ரூபாய் அரிசியைத்தான் நானே வாங்கிச் சாப்பிடுகிறேன். எங்கள் வீட்டில் நான் கொடுத்த அதே தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு என் பேரன்கள் நடத்தும் அதே தொடர்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்காக இதைவிட என்ன செய்ய சொல்கிறாய்? என்பதைப்போல் அவரின் கடிதம் இருக்கிறது.

18.11.2009 அன்று எழுதிய அந்தக் கடிதத்தில் வந்த அவரது தியாகங்களை நாம் இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் கேட்டுக் கொண்டிருப்பது. அதில் அவர் கூறிய வார்த்தைகளையும், அதற்கு அதனுள் புதைந்துள்ள அவரின் ஏமாற்று வித்தைகளையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் “ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகளின் போர்த் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்பதை கருணாநிதி எழுதியிருக்கிறார். ஆனால் நடந்து முடிந்தது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் ஆன போரா? என்பதை கருணாநிதி மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

இந்தப் போரில் இந்திய அரசு வகித்தப் பங்கு மிக முக்கியமானது. இந்தப் போரைக் கண்டு அழுது துடித்து கையாளாகாதத் தனத்தோடு இந்தியத் தமிழர்கள் இருந்தோம் என்பதை நாம் மறுதலிக்க முடியாது. கருணாநிதி தமிழகக் காங்கிரசை சுமக்கும் பாத்திரத்தை ஏற்று இருப்பதால் அவர் ஏறக்குறைய காங்கிரசை அரண் போல் தாங்கும் நிலைக்கும் வந்துவிட்டார். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். லட்சிய உணர்வும், சொந்த மண்ணிற்காக களபலியாகும் எண்ணமும் கொண்ட விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதி மறைமுகமாகத் திட்டமிட்டார். அதற்குக் காரணம் எந்த நிலையிலும் தமிழினத் தலைவர் என்ற பட்டம் பிரபாகரனுக்குப் போய்விடக் கூடாது என்பதுதான்.

தோழர் தா.பா. கேட்ட கேள்விகளை தா.பா.வின் குரலிலேயே கேட்போம். கருணாநிதி என்ன பதில்சொல்கிறார் என்று பார்ப்போம்.

1. 1956ஆம் ஆண்டு முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீரவில்லையே? இதற்குக் காரணம் யார்?

2. நாம் தந்த ஆலோசனைகள், உதவிகள், பணம் அனைத்தையும் விடுதலைப்புலிகள் நிராகரித்தனர் எனக் குறைகள் கண்டுள்ளார். ஆனால் திமுக பங்கேற்றுள்ள மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபை தீர்மானம் பிரதமரைச் சந்தித்து நேரில் தந்த வேண்டுகோள் இவையனைத்தையுமே காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லையே ஏன்?

இதிலிருந்து ஒன்று புரிகிறது. தமிழீழம் உருவாவதை எப்படியேனும் முடக்கவேண்டுமென நினைப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, அதைவிட மேலாக கருணாநிதியின் மூளை என்பதை அவர் உடன் பிறப்புகளுக்கு எழுதும் கடிதம் மூலம் புரிய வைக்கிறார்.

-கண்மணி.

http://meenakam.com/?p=2164

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிரபாகரனின் படமே போதும் அச்சமூட்ட
பயங்கரவாதியெண்டு சொல்லுறாங்களோ? :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் பயப்பிடட்டும் அதுக்கு மதியண்ணே நீங்களேன் கலியாணவீட்டில பத்து பவுண் தாலிய அறுத்துக்கொண்டோடி பிடிபட்ட திருடன் மாதிரி முழிக்கிறியள்:(:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.