Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் இன்னொரு சிங்கள தேசிய நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றம் தொடர்பில் பதிலளித்து சர்வதேசத்தின் மத்தியில் ஆஜராகி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர மகிந்த திட்டம்?

யுத்த குற்றம் தொடர்பில் பதிலளித்து சர்வதேசத்தின் மத்தியில் ஆஜராகி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு கடிதம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹோன கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். யுத்தம் குற்றம் தொடர்பில் சர்வதேச முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இலங்கை ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் இதற்காக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு பாலித கோஹோன சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அமைய அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நாடு திரும்பி மீண்டும் ஒரு முறை மண்ணை முத்தமிட எதிர்பார்த்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எதிரணி வேட்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு கிடைக்காது போகும் நிலைமையில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை குறிவைத்து செயற்படுதமாறு ஆலோசகர்களினால் வழங்கப்பட்டுள்ள யோசனையின்படியே ஜனாதிபதி இவ்வாறு யுத்த குற்ற நீதிமன்றத்தில் ஆஜராக முயற்சித்து வருகிறார்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர்வதற்காக கொழும்பு நகரில் சில குண்டுகளை வெடிக்க வைத்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்னும் இருப்பதாக சுட்டிக்காட்டினால் ஜனாதிபதிக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த முன்வைத்த யோசனையும் ஜனாதிபதி கலந்துகொள்ளும் கூட்டத்தில் அவருக்கு சிறிய காயத்தை ஏற்படுத்தி அந்த பலியை பொது வேட்பாளர் மீது சுமத்தி அனுதாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்த யோசனையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பௌதத சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக யுத்த குற்ற நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து ஜனாதிபதி ஆலோசித்து வருகிறார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க யுத்த குற்றம் சம்பந்தமான சர்வதேச உடனபடிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை இதனால் எந்த சர்வதேச அமைப்புக்கும் இலங்கையர் எவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இதில் கைச்சாத்திடவில்லை என்பதால் அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ஷவையும் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்: Source

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர்வதற்காக கொழும்பு நகரில் சில குண்டுகளை வெடிக்க வைத்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்னும் இருப்பதாக சுட்டிக்காட்டினால் ஜனாதிபதிக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த முன்வைத்த யோசனையும் ஜனாதிபதி கலந்துகொள்ளும் கூட்டத்தில் அவருக்கு சிறிய காயத்தை ஏற்படுத்தி அந்த பலியை பொது வேட்பாளர் மீது சுமத்தி அனுதாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்த யோசனையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

:D:):)

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை...

தங்களுக்கு இந்த தசாப்தத்துக்கான கோமாளிகள் விருது கிடைச்சாலும் ஆச்சரியப்பட அரனலையயவார.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D:):)

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை...

தங்களுக்கு இந்த தசாப்தத்துக்கான கோமாளிகள் விருது கிடைச்சாலும் ஆச்சரியப்பட அரனலையயவார.

நீங்கள் என்னைச் சொல்லவில்லை தானே... ? இந்த செய்தியின் மூலம் அடியேன் இல்லை சூறாவளிப் பெருமானே

(அது சரி அதென்ன அரனலையயவார.? அடிக்கடி உங்களின் பதிலின் முடிவில் இப்படி வருகின்றதே ஏன்?)

பிழம்பு

நாங்களை உங்களை நிச்சயமாகக் குறிக்கவில்லை. இதை எழுதியவரை நினைத்துத்தான் சொன்னேன். இப்படியான திட்டங்கள் தீட்டமாட்டார்கள் என்றுநான் சொல்ல வரவில்லை. இப்படியான திட்டங்களை இப்பிடியா எங்கள் ஊடகங்கள் அறியும் வகையில் அவ்வளவு அலச்சியமா இருப்பார்கள்.

இலங்கை அரசியல் அசிங்கமானதுதான்..... இருந்தாலும் போங்கள் எனக்கு மீண்டும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

அட அந்த எழுத்தை சொல்கிறீர்களா? ஒன்றுமில்லை இந்தக்கனனிக்கு ஆற்றல் போதாது என்று நினைக்கிறேன். சிலவேளைகளில் மொளிபெர்யர்ப்பை செய்யமருக்கிறது.

அல்லது என்னுடைய ஆற்றலிலும் குறை இருக்கலாம்... எவ்வாறாயினும் தொடரும் எனது இந்த தவறுக்கு வருந்துகிறேன். திருத்திக்கொள்ள முயற்சிப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.