Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் பகுதிகளில் மகிந்த அலை: அவரே வெல்வாராம் - இந்திய நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு

Featured Replies

சிங்களப் பகுதிகளில் மகிந்த அலை: அவரே வெல்வாராம் - இந்திய நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு

வடக்கு, கிழக்கு தவிர்ந்த சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களில் மகிந்த ராஜபக்சவுக்கே அதிக செல்வாக்கு இருப்பதாகவும், அவர் அதிபர் தேர்தலில் இலகுவாக வெற்றியீட்டுவார் என்றும் இந்திய நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

விப்லாவ் தொடர்பாடல் நிறுவனம் [Viplav Communications Pvt. Ltd.] இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.

இதன் அடிப்படையில் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சரத் பொன்சேகாவை விட மகிந்த ராஜபக்ச முன்னணியில் உள்ளார்.

பெரும்பான்மைச் சிங்களவர்களும் முஸ்லிம்களும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

மலையகத் தமிழரில் பெரும்பாலானோர் கூட மகிந்த ராஜபக்சவுக்கே அதரவளிப்பதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் மகிந்த ராஜபக்ஸவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் சரத் பொன்சேகாவுக்கு அதரவு இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சிங்கள கிறிஸ்தவர்களும், பெரும்பாலான சிங்கள பௌத்தர்களும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கின்றனர்.

நகரப் புறங்களில் சரத் பொன்சேகாவுக்கும் கிராமப் புறங்களில் மகிந்த ராஜபக்சவுக்கும் ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், பெரும்பாலும் பெண்கள் மகிந்தவையே ஆதரிப்பதாகவும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

இதனால் மகிந்த ராஜபக்ச 12 வீத வாக்குகளை அதிகம் பெற்று வெற்றிபெறுவார் என்று மேலும் கூறியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையான காலப்பகுதியில் 10,225 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக ஐ.ஏ.என்.எஸ் குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100116100323

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாப் புளுகிறான்கள் இந்தியன்கள்.சிறிலங்கா அதிபர் தேர்தலில் சந்திரிகா மட்டும் அதுவும் தமிழர்கள் பெரும்பாலான அளவில் ஆதரித்த முதல் தேர்தலில் 62 வீத வாக்குகளைப் பெற்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கணிப்பு செய்தது இந்திய நிறுவனமெண்டு சொல்லியிருக்கு,

எங்கட கருத்துக்கணிப்பு என்னமாதிரியானதெண்டு சொல்லி தெரியவேண்டியதில்ல,

இஞ்சத்தைய கருத்துக்கணிப்பு 98-99% எங்களுக்குத்தான் வெற்றி.

பகிஸ்கரிக்கிறாக்கள் 50% எண்டு காட்டுது.

டக்கிளசுக்கே 25% விழுத்திருக்கெண்டா பாருங்கோவன். :D

இந்த லச்சனத்தில கருத்துக்கணிப்ப நம்பி ..... இன்னும் 10 நாள்தான் இருக்கு, சரியான முடிவுவர. :wub:

நல்லாப் புளுகிறான்கள் இந்தியன்கள்.சிறிலங்கா அதிபர் தேர்தலில் சந்திரிகா மட்டும் அதுவும் தமிழர்கள் பெரும்பாலான அளவில் ஆதரித்த முதல் தேர்தலில் 62 வீத வாக்குகளைப் பெற்றார்.

09.11.1994. அண்று நடந்த ஜானாதிபதி தேர்தலை தானே சொல்கிறீர்கள்... ???

யாழ்ப்பாணத்தில் 596 000 பேர் வாக்களிக்க வேண்டிய தேர்தலில் 17000 பேர் வாக்களித்து இருந்தனர்... அது மொத்த வாக்காளர் தொகையில் 2.9% அதில் தமிழர்கள் 16000 பேர்தான் சந்திரிக்காவுக்கு வாக்கு போட்டு இருந்தனர்... வவுனியா , மன்னார் எண்று சிங்கள பகுதிகள் அடங்கிய வன்னியில் மக்கள் 33000 பேர் சந்திரிக்காவுக்கு வாக்களித்து இருந்தனர்...

ஆனால் கடந்த 2005 பாராளுமண்ற தேர்தலில் டக்கிளசுக்கு 28 000 பேர் வாக்களித்து இருக்கிறார்கள்...

உங்கட கணக்கே பிணக்க கிடக்கே அண்ணை...

பிடியுங்கோ ஆதாரத்தை...

http://www.slelections.gov.lk/pdf/1994%20Presidential.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.