Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும் - பருத்தியன்

Featured Replies

இறைவன்.... தங்கள் யதார்த்தமான கருத்துக்களுக்கு நன்றிகள்.

ஆனால் நீங்கள் தெரிவித்த கருத்துக்களில், நான் சிவப்பெழுத்துக்களால் குறியிட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை நாம் நம் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முன்... நமக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட முன் வேண்டுமானால் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இவ்வளவு இழப்புக்களையும் தாங்கி, இப்படி ஒரு தீர்வை பெறவேண்டிய அவசியம் இல்லை.

நம் மாவீரர்களுக்கும்,இழந்த மக்களுக்கும் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தியாகங்கள் என்றும் வீண்போனதில்லை.

நாம் நிச்சயம் வெல்வோம் என்பது உறுதி!

(அதை நான் நம்புகின்றேன்..........நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது!!!???)

பின்வாங்குதல் தந்திரமாயிருந்தால், தற்காலிக ஏற்பும் தந்திரமே. சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது என்பது தமிழரது வரலாறு. நாம் கேட்டும் கிடைக்கவில்லை. இந்தியா சொல்லியும் கிடைக்கவில்லை. சர்வதேசம் சொல்லித்தான் கிடைக்கப்போகிறதா? என்பதை எப்படிக் காட்டப் போகிறோம். தற்காலிகமாகத் தருவார்களா? தந்தால் அதை முதலில் பெறுவோம். அது தொடக்கம். முடிவு நீங்கள் சொன்னது போல் தியாகங்கள் வீண்போவதில்லை. நாங்கள் வெற்றி பெறவேண்டும்.

  • தொடங்கியவர்

பின்வாங்குதல் தந்திரமாயிருந்தால், தற்காலிக ஏற்பும் தந்திரமே. சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது என்பது தமிழரது வரலாறு. நாம் கேட்டும் கிடைக்கவில்லை. இந்தியா சொல்லியும் கிடைக்கவில்லை. சர்வதேசம் சொல்லித்தான் கிடைக்கப்போகிறதா? என்பதை எப்படிக் காட்டப் போகிறோம். தற்காலிகமாகத் தருவார்களா? தந்தால் அதை முதலில் பெறுவோம். அது தொடக்கம். முடிவு நீங்கள் சொன்னது போல் தியாகங்கள் வீண்போவதில்லை. நாங்கள் வெற்றி பெறவேண்டும்.

எம் இனம் இழந்தவை எவ்வளவோ அதற்கேனும் ஒரு தீர்வு வந்தால் ஏற்கலாம். தற்காலிக தீர்வு என்பது நிரந்தரமில்லை. நமது எதிகாலமாக அதை ஏற்க முடியாது. போருக்கு வேண்டுமானால் தந்திரோபாய பின்வாங்கல் ஒத்துவரலாம். ஆனால் நமது தலைவிதியை தீர்மானிக்கப் போகும் நிரந்தரத் தீர்வு அமைவதற்கு அது ஒவ்வாது.

தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு தற்காலிகமாகவேனும் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்காக வேண்டுமானால் அது சாத்தியப்படும்.தற்காலிகத் தீர்வென்பது எவ்வளவுக்கு பாரதூரமான விளைவுகளை எதிகாலத்தில் கொண்டுவரும் என்பதனையும் நாம் சிந்திக்கவேண்டும்.

நமது போராட்ட இலட்சியம் நம் இனத்தின் விடுதலை. இலட்சியத்தினை அடையும் வரை நம் போராட்டம் தொடரும் எவ்வழியிலேனும்.....

நன்றி இறைவன்

  • தொடங்கியவர்

பருத்தியன் உங்களின் பதில் உள்ள பண்பும் உணர்வும் என்னை நெகிழ்ச்சிபடுத்துகிறது...

ஒரு குற்ற உணர்வு நான் பிழையான தகவலை தந்து விட்டேன் (தகவலை மறைத்து விட்டேன் ) என...அந்த ருமேனியன் சொன்னது எங்கள் இருவரினதும் (அவருடையதும் எனதும்) உச்சரிப்புகள் வேறுபடுவதால் இருவருக்கும் கடினம் என...மற்றும்படி பல நிகழ்வுகள் எங்கள் புலம்பெயந்த -கொஞ்சம் படித்திட்டு வந்த ஆட்களுக்கு நடப்பது எல்லாம் எனக்கும் நடக்குது...தனியே வெளியே வேலைக்கு போற இடத்தில் மட்டுமல்ல வீட்டிலும் உறவினர் வீடுகளிலும் ...(முதலில் என் மனைவிக்கு யாழில் நேரம் செலவழிப்பது விருப்பமில்லை இப்ப ஓரளவு OK ஏனென்றால் நான் எதோ இலகுவாக இருப்பதான உணர்வால்- இந்தவகையில் யாழுக்கு எனது நன்றிகள் :) எனது மனைவி இதில் இருந்து விலகிஉள்ளா..சில இடங்களில் கணவன் மனைவிக்கிடையிலே பிணக்குகள் வந்திருக்கு ..

நீங்கள் சொன்ன புழு கடிக்கிறது...சில நேரங்களில் கடிக்கிறோம்...பலநேரங்களில்....

இங்குள்ள identity பிரச்சனையால் பயமாக இருக்கிறது நிறைய எழுத ....முன்பு ஒருக்கா நானும் எனது நபர்களும் பயணம் செய்தபோது ஒரு சென்றியில் வாக்குவாதம் நடந்து அவர்கள் எங்களுக்கு அடித்து விட்டார்கள்...பிறகு உரிய ஆட்களை கூட்டிக்கொண்டு போய் முறைப்பாடு செய்யபோனால், அங்கு முதலே கேஸ் இருக்குது நாங்கள்தான் அவர்களுக்கு அடித்தது என....பிறகு அவரை அந்த இடத்திலிருந்து மாற்றியாச்சு... சண்டை தொடங்க எங்கட வீடுக்கு பக்கத்தில செல்விழுந்து பக்கத்து வீடுக்காரக்கு தலையால இரத்தம் ஓடுது...(அப்ப பகல் நேரம் ஊரடங்கு சட்டம் வேற...என்னிடம் உதவி கேட்டார்கள்/ நான்தான் ஒரே ஒரு பொருத்தமான ஆள் அந்த நேரத்தில்) ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போக வெளிக்கிட அதே சென்ரியில எனக்கு அடித்தவன் கிட்டதட்ட 1 - 2 வருடத்துக்கு பிறகு எண்டு நினைக்கிறேன்....அன்று நான் பயந்த பயம் ...என்னவோ திரும்பி தனிய வரும்போதும் அவன் ஒன்றும் செய்யவில்லை...அப்ப யோசித்தது சிங்களம் தெரியும் என நினைத்து அவனோட வாக்குவாதபட்டு கடைசியில் அவனிடமே உயிர்பிச்சை கேட்டதுதான் மிச்சம்.....

பல சந்தர்ப்பங்களில் "பயம்" என்பது எங்களை பயப்படவைத்து தடுமாற்றமடைய வைக்கின்றது என்பது உண்மை, சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதற்கேற்றவாறு அமைந்து விடுகின்றன. என்ன செய்வது..........?????????

ஆனாலும்... எனக்கு இப்படியான சூழ்நிலை ஏற்படும்போது, எனக்கு தைரியம் கொடுப்பது எமது மாவீரர்கள்தான்.

அவர்களின் நினைவுகள் ஒன்றே போதும்! இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடங்கள் எம் இனம் வாழும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.