Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது.

மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இருக்காதென கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் திறப்பதன் மூலம் இந்திய நிதியுதவியுடன் வடபுலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நேரடியாகக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன், பாக்கு நீரிணைக்கு இரு மருங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் துணைத் தூதரகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தனது தூதரகத்தை கொழும்பிலும் துணைத் தூதரகம் ஒன்றை கண்டியிலும் இந்தியா கொண்டுள்ளது போல டெல்கியில் தனது தூதரகத்தையும் சென்னை, மும்பாய் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இலங்கை வைத்திருக்கிறது.

தற்சமயம், வடபுலத்தில் நிலக்கண்ணி அகற்றும் ஆறு இந்திய அணியினர் செயற்பட்டு வருகின்றனர்.

ஓமந்தையில் இருந்து பளை வரைக்குமானதும் மடுவிலிருந்து தலைமன்னார் வரைக்குமானதுமான இரு முக்கிய ரயில் பாதைகளை மீள்கட்டமைக்க இந்திய ரயில்வே அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பொது முகாமைத்துவ கம்பனி மூலம் 425 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தை இந்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

கொழும்புக்கு அடுத்ததாக இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சிவில் மற்றும் இராணுவ விமான நிலையமான யாழ். பலாலி விமான நிலையம், ஐந்து வருடங்களுக்கு முன், யுத்தத்தில் பலத்த தேசத்துக்குக்குள்ளான போது அதனை மீள் புனரமைக்கும் பாரிய பணியினை இந்தியா செய்துள்ளது.

www.TELOnews.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 00:16 GMT ] [ கார்வண்ணன் ]

யாழ்ப்பாணத்தில் தூதரகத்தை [Consulate] அமைக்க இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து குறுகிய காலத்தில் இந்தியா இந்த விருப்பத்தையும், வேண்டுகோளையும் சிறிலங்காவிடம் முன்வைத்துள்ளது.

வடக்கில் மீள்கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் நெருக்கமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த வேண்டுகோளுக்கு இதுவரையில் சிறிலங்காவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

http://www.puthinappalakai.com/view.php?20100124100366

சிறிலங்கா அரசின் பதிலுக்காக இந்தியா காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.குடாநாட்டில் இந்தியா பல்வேறு மீள்கட்டுமான மற்றும் அபிவிருத்தி பணிகளில் இந்தியா ஈடுபட்டிருப்பதால், இந்திய அரசின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா நிராகரிக்கமாட்டாது என்று புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தூதரகத்தை அமைத்தால் அங்கு இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களைக் கண்காணிப்பது இந்திய அரசுக்கு இலகுவாக இருக்கும் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா, கொழும்பில் உயர்தூதராலயத்தையும், கண்டியில் துணை தூதராலயத்தையும் கொண்டிருக்கின்றன.

இதற்கு மேலதிகமாகவே யாழ்ப்பாணத்தில் தூதரகம் ஒன்றை அமைக்க இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை இந்தியாவில் புதுடெல்லியில் உயர்ஸ்தானிகரகத்தையும், சென்னையில் துணை உயர்ஸ்தானிகரகத்தையும், மும்பையில் தூதரகம் ஒன்றையும், கொல்கத்தாவில் கௌரவ நிலைத் தூதரகத்தையும் சிறிலங்கா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

விசாவை இலகுவாக வழங்கினால் திருத்தல யாத்திரை பிசினஸ் பணம் பொழியும்.

கொழும்பில் தூதரகத்தின் இந்திய கலாசார மையம் மூலம், செம்மொழியான தமிழையும் புறக்கணித்து, ஹிந்தி திணிக்கப்படுவது போல, யாழிலும் ஹிந்தியை திணிக்கும் முயற்சியா தெரியவில்லை?

இந்திய பயங்கரவாதிகள் அமைதிப்படை என்ற பெயரிலும், உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்ற பெயரிலும் தமிழருக்கு இழைத்த இமாலய கொடுமைகளை ஈழத் தமிழன் என்றும் மறக்கமாட்டான்.

விசாவை இலகுவாக வழங்கினால் திருத்தல யாத்திரை பிசினஸ் பணம் பொழியும்.

யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்பு போகாமல் தமிழ் நாடு போக வசதியும் கப்பல் சேவையும் செய்து தந்தால் இன்னும் நல்லா இருக்கும் இல்லை... ???

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் சீனாக்காரனும் தூதரகம் திறந்திடுவான்.யாழ்ப்பாணம் தலைந(க)ர(க)மாயிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.