Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக் குறியாக மாறியிருக்கும் சரத்பொன்சேகாவின் எதிர்காலம்

Featured Replies

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருந்த சரத் பொன்சேகாவின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகியி ருக்கிறது . தேர்தலுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார். அத்துடன் அவரது அரசியல் எதிர்காலமே இப்போது கிட்டத்தட்ட சூனியமாகி விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இது தற்காப்பு ஏற்பாடு என்றும் ஆயுதப் புரட்சியைத் தடுக்கின்ற நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியது. ஆனால் சரத் பொன்சேகாவோ தன்னைக் கைது செய்வதற்கு கொலை செய்வதற்கான முயற்சி என்று அபாயக்குரல் எழுப்பினார்.

பெரும் பிரயத்தனங்களின் பின்னரே அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேற முடிந்தது. சரத் பொன்சேகா தன்னைச் சுற்றி பாதுகாப்பு அதிகாகளாக வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிய படையினர் என்று அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

அவர்களில் பத்துப் பேரை படையினடம் ஒப்படைத்த பின்னரே சரத் பொன்சேகா அரசியல் புள்ளிகளின் பாதுகாப்புடன் வெளியேற முடிந்தது.

அரசாங்கம் எதற்காக அவர் மீது இத்தனை கண்டிப்புடன் நடந்து கொண்டது என்ற கேள்வி எழுகிறது.இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைப் பிடிப்பது என்ற பேச்சு தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே தீவிரமாகியிருந்தது.

அதாவது அரசியலில் இராணுவம் தலையிடலாம் என்ற கருத்து பரப்பப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால் அவர் இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முனைவதாக எதிர்க்கட்சித் தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

அதேவேளை சரத் பொன்சேகா அப்படியானதொரு முயற்சியில் இறங்கியிருப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்தது. அதாவது இராணுவத் தலையீட்டின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எதிர்த்தரப்பு முனைவதாக இரு தரப்பினரும் கூறிவந்தனர்.

தேர்தல் தினத்தன்று கொழும்பு நகரின் முக்கியமான இரு ஹோட்டல்களில் சரத் பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முகாமிட்டமை அரசாங்கத்துக்குப் பெரிதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த ஹோட்டல்களில் குறித்த தினத்தன்று 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது அரசாங்கத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே அரசாங்கம் திடீர் நடவடிக்கையாக சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவத்தை அனுப்பி சுற்றிவளைத்தது.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறும் வரைக்கும் பலத்த இழுபறிப் போராட்டங்கள் நடந்தன.

சரத் பொன்சேகாவை வெளியே செல்ல அனுமதித்ததற்கு சர்வதேச ரீதியாக எழுந்த அழுத்தங்கள் காரணம் என்றும் ஒரு தகவல் பரவியது.

ஆனால் அரசாங்கமோ அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குடும்பத்துடன் கொன்று விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முற்பட்டதாக கூறுகிறது.

இப்போது சரத் பொன்சேகா தான் எங்கு தங்கியிருக்கிறேன் என்பதைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.

விரைவில் அவடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. பெரும்பாலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது அவரது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பாதுகாப்பு அதிகாகளின் பிரதானி பதவியில் இருந்து விலகிக் கொண்ட சரத் பொன்சேகா பிரசாரங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார்.

அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

தன்னை வெளிநாடு செல்ல முடியாத வகையில் விமான நிலைய அதிகாகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகாவே கூறியிருந்தார்.

ஆனால் அதை அரசாங்கம் நிராகத்துள்ளது. அதேவேளை சரத் பொன்சேகா மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அக்குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டுமெனவும் எனவே அவர் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது எனவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா வெளிநாடு செல்ல முனைந்தால் அது அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.இத்தகைய கட்டத்தில் சரத் பொன்சேகா அரசாங்கத்தின் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்வதை விட வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றால் அது மிகப் பெய நெருக்கடிகளை அவருக்கு ஏற்படுத்தும். அவரைத் துரோகியாகக் காண்பித்து அரசாங்கம் இன்னம் பெரியளவிலான பிரசாரங்களை ன்னெடுக்கும்.

அதேவேளை பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்குத் தனியான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது.

இந்தநிலையில் அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அவருக்காக குரல் கொடுக்க எத்தனை கட்சிகள் முன்வரும் என்பது சந்தேகம். சரத் பொன்சேகா அரசியலில் நிலைத்திருக்க விரும்பினால் அவர் பல்வேறு அக்கினிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.

சரத் பொன்சேகா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைக் பொறுத்தே அரசாங்கத்தின் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையப் போகின்றன.

http://www.thinamurasam.com

Edited by இளைஞன்

இந்தநிலையில் அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அவருக்காக குரல் கொடுக்க எத்தனை கட்சிகள் முன்வரும் என்பது சந்தேகம். சரத் பொன்சேகா அரசியலில் நிலைத்திருக்க விரும்பினால் அவர் பல்வேறு அக்கினிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.

http://www.thinamurasam.com

சம்பந்தர் அய்யாவிடம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்தால் நன்றாகவிருக்கும்..

சம்பந்தர் அய்யாவிடம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்தால் நன்றாகவிருக்கும்..

சரத் பொன்சேகாவை கூட்டமப்பின் தலைவர் ஆக்கினால் என்ன எண்டு மக்கள் கருத்தறிய கூட்டம் ஒண்ட வச்சு முடிவு எடுக்க வேணும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.