Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் அமைய ஈழத்தவர் செய்யவேண்டிய உடனடி அறிவிப்புகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அமைய ஈழத்தவர் செய்யவேண்டிய உடனடி அறிவிப்புகள்..

பல ஈழசொந்தங்கள் ஈழ போரின் போது தமிழகம் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்றும் சந்தியாவை தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறைபாடு உள்ளது.. கீழ் பட்டியலில் உள்ளவற்றை இப்போதாவது செயல்படுத்துவதாக அறிவிப்பு செய்யுங்கள்..

இனியாவது உங்களுக்கு ஆதரவாகவும் தமிழ் ஈழத்தை ஆதரித்தும் இந்தியாவில் தமிழகத்தில் ஆட்சியில் அல்லது முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் உடனடியாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி செயலிலும் இறங்க வேண்டுமா? இதோ கீழே இருப்பது போல் அறிவிப்பை தலைவர் பிரபாகரனை அறிவிக்க சொல்லுங்கள்.

தமிழ் ஈழம் மலர முதலில் குரல் கொடுத்து ஆதரவு திரட்டும் முதல் 10 தலைவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படும் என்று சொல்லுங்கள்..

மாநில கட்சிகள்

1) தமிழ் ஈழத்தில் முதல்வர் பதவி ஒன்று ஏற்படுத்தப்பட்டு அது உங்களுக்கே வழங்கப்படும். இதில் இருக்கும் சிறப்பு அம்சம் அவருக்குபின் அந்த பதவி எந்த சிக்கலும் இன்றி மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ வழங்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருப்பின் ஈழத்தை தனியாக பிரித்து இரு முதல்வர்கள் பதவி வழங்கப்படும்.

2) தமிழ் ஈழத்தில் அமையவிருக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் எள்ளு பேரன்களுக்கோ அல்லது கொள்ளு பேரன்களுக்கோ வழங்கப்படும்.

3) வானொலி சேவை, DTH சேவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும்.

4) தினசரி செய்திதாள்கள் அச்சகங்கள் தொடங்க அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.

5) கப்பல் போக்குவரத்து துறை தங்கள் சகாக்களுக்கே வழங்கப்படும். அத்தோடு ஆனையிறவு கடலுக்கடியில் கேது-ராமர் கால்வாய் வெட்டும் பணிக்கான டெண்டர் தங்களுக்கே!

6) கண்டியில் இருந்து கிண்டிக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் விடும் பொறுப்பு உங்களுக்கே வழங்கப்படும்

7) அனைவருக்கும் இலவச டீவி வழங்கப்படும். அதில் மானாட மாராட நிகழ்ச்சி ஓளிபரப்படும்.

8) தொலை தொடர்பு துறை தாங்கள் கைகாட்டுபவருக்கே வழங்கபடும்.ஸ்பெட்கரம் பேரத்தில் யாரும் தலையீடாக்கொள்கை ஒன்று தங்களுக்காக தனியாக வகுக்கபட்டு செயல்படுத்தபடும்.

9) தமிழீழ சினிமா தயாரிப்பின் மொத்தகுத்தகையும் தங்களின் எள்ளுக்கு எள்ளுபேரன்களுக்கே வழங்கபடும். விநியோக உரிமையும் . தொலைக்காட்சி உரிமமும் தங்கள் கைக்காட்டுபவருக்கே வழங்கபடும்.

10) திராவிடம் தமிழ் தமிழினம் போன்ற சொற்கள் தங்களுக்கே உரியது என்ற தனிசட்டம் கொண்டுவரப்படும்..

11) ஐ.நா சபையில் தமிழீத்தின் சார்பில் தமிழ் இனத்தலைவர் என்று முடிசூட்டி கொள்ள முன்மொழிவு செய்யப்டும்

இவை அனைத்தையும் அறிவித்தால் ஒரு கட்சியினரின் அமோக ஆதரவு உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.

1) முல்லைத்தீவில் திராட்சை தோட்டத்தோடு கூடிய 10000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த எஸ்டேட் பங்களாவும் அதில் அமர்ந்து தினம் மக்கள் பணிகளை செய்ய ஏதுவாக 2 ஹோம் தியேட்டர் வசதியோடு பங்களா ஒன்று வழங்கப்படும்.

2) தமிழீழ அரசு அலுவலகங்கள் , அரசு கல்லூரி பள்ளிகள் உட்பட அனைத்தும் பச்சை நிற வண்ணத்திலே இருக்கும் படி பார்த்து கொள்ள படும்

3)முல்லைதீவு அம்மன் கோயிலில் நடைபெற இருக்கும் கம்பமேளா நிகழ்வின் போது தாங்கள் குளிக்கும் அழகை காண ஊர் நாட்டில் இருந்து அனைவரும் லாரியில் ஏற்றி வர வழைக்கபடுவார்கள்..

4) அரசு ஊழியர்.. சாலைபணியாளர் போன்ற துறைகள் தங்களுக்கு வழங்கபடும் . யாரும் இதில் தலையிடா கொள்கை ஒன்று தங்களுக்காக வகுக்கபட்டு செயல்படுத்தபடும்

5) போதை பொருள் தடுப்புசட்டம் கஞ்சா உட்பட அனைத்தையும் தாங்கள் உபயோக்கிக்க முழு சுதந்திரம் வழங்கபடும்.

6)அமைய இருக்கும் தமிழீழ நாடாளுமன்றத்தில் தங்க்ளின் புகழ்பாடி துதிக்க முதல் 1 மணி நேரம் தனியாக ஒதுக்கபடும் அதற்கு முன் ஒரு மணிநேரம் தங்களின் காலில் விழுந்து வணங்க ஏற்பாடு செய்யபடும்

7)தமிழீழ அரசு நிலமான கான்சி தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும்

8) அடுக்குமாடி கட்டத்திற்கான சட்டங்கள் தங்களினால் வரையறை செய்யபடும்.அதை தாங்கள் எந்த நேரத்திலும் திருத்தி அமைக்கலாம்

9) தமிழீழ அரசு மதுபான கடைகளில் தங்களின் தோழியான கிடாசின் கம்பனி சரக்குகளே விற்க ஏற்பாடு செய்யப்படும் .. யார் வாந்தி எடுத்தாலும் பேதி ஆனாலும் அவர்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கபடும்

இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவு உங்களுக்கு நிச்சயம்.

1) சுகாதார துறை அமைச்சர் பதவியும், இரயில்வே துறை அமைச்சர் பதவியும் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.

2) சிங்களர்களால் வெட்டப்பட்ட மரங்கள் நட மரக்கன்றுகள் வாங்கும் டெண்டர் உங்களுக்கே வழங்கப்படும்.

3) தமிழீழ அரசு பணிகளிலும் அரசு கல்லூரிகளிலும் தங்கள் சார்ந்திருக்கும் சாதியினர் 99% சதம் நிரப்படுவார்கள் மீதம் உள்ளவர்களுக்கு நீங்களே பார்த்து அளித்தால் தான் உண்டு.

4) தேர்தலுக்கு முன்பு தாங்கள் தனியாக ஆலோசனை செய்ய வன்னிகாடுகளின் நடுவில் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் நவீன வசதிகளுடன் கூடிய மாளிகை ஒன்று கட்டிதரப்படும் அத்தோடு தோட்டத்தில் ரப்பர் மரம் வாழைமரம் ஆகியவை நடப்பட்டு அதில் குரங்குகள் விடப்படும்

இப்படி சொன்னால் அடுத்த கட்சியின் ஆதரவும் உங்களுக்கு ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது அடுத்த அதிபர் தேர்தலில் ங்கோத்தாபய ராஜபக்சேவுடன் கூட்டணி வைக்கும் அபாயம் இருக்கிறது.

1) தமிழ் ஈழத்தில் அனைத்து கல்யாணமண்டபங்களும் கட்டிக்கொள்ள தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். (சாலை விரிவாக்கத்தின் பொழுது கூட இடிக்கபடமாட்டாது.)

2) தமிழ் ஈழத்தில் தயாராகும் படங்கள் அனைத்திலும் தாங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

3) தங்கள் படங்களை பொறுமையாக கண்டு விட்டு வெளிவருபவர்களுக்கு தங்கபதக்கமும் அத்தோடு தியேட்டர்கள் அருகில் மருத்துவமனையும் கட்டி தரப்படும். இடைவேளையின் போது வெளியேறுபவர்கள் மீது தனி சட்டம் பாயும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும்

4) தாங்கள் கத்துவதற்கு எச்சிலை உறிஞ்சும் வண்ணம் ஸ்பெஷல் மைக் ஏற்பாடு செய்யபடும்..

3)” பார்”கவுன்சிலும் அமைத்து தரப்படும்.

இப்படி சொன்னால் அடுத்தகட்சியின் ஆதரவும் தங்களுக்கு நிச்சயம்.

இனி தேசிய கட்சிகள்..

1) பீரங்கி வாங்க முழு டெண்டர்களும் தங்களுக்கே வழங்கபடும். அதில் இடைதரகராக பாத்த்ரோச்சி நியமிக்கபடுவார்.

2) கவுஸ்ராந்து நாட்டு பேங்கில் தங்களின் வருவாயை வைப்பீடு செய்ய அர்த்த ராத்திரியிலும் தமிழீழ அரசு நிதிதுறையை அணுகலாம்.

2) நொடிந்து போன தங்களின் கார் கிரீமியர் தொழிற்சாலை தமிழீததில் புத்துணர்ச்சியோடு செயல் பட அனுமதிக்கபடும்

3) தங்களுக்கு கிலியூட்டும் இனம் .மொழி. தன்னாட்சி சுயநிர்ணய உரிமை அகியவை தமிழீழம் அமைந்த பிறகு முற்றுலுமாக தமிழீழத்தில் இருந்து நீக்கப்படும் .. கனவில் அச்சொற்களை நினைப்பவர் மீது தனி சட்டம் பாயும்..

4) அடுத்தவரின் பெயரை சொந்தி என்பதை தங்களின் குடும்ப சொத்தாக அறிவிக்க ஏற்பாடு செய்யபடும்

5) தமிழீழத்தின் பெட்ரோல் இறக்குமதி குறித்து கவனிக்கும் பொறுப்பு தங்களுக்கே வழங்கபடும்

இப்படி சொன்னால் ஒரு தேசிய கட்சியின் ஆதரவு அரைகுறையாக கிடைக்கலாம்

1) தமிழீழத்தில் ராமர் நடந்துவந்த இடங்கள் அனைத்தும் தமிழீழ தேசிய சின்னங்களாக அறிவிக்கபட்டு அங்குள்ள மக்கள் அடித்து வெளியேற்றபட்டு புதியதாக கோயில்கள் கட்டபடும்

2) தமிழீழ ராணுவத்தின் சவபெட்டி வாங்கும் பேரம் தங்களிடம் ஒப்படைக்கபடும்

3) சமஸ்கிருதம் தமிழீழத்தின் தேசிய மொழியாக அறிவிக்கபடும். இந்துமதம் தழைத்து ஓங்க வழிவகை செய்யப்படும்.

4) வருணாசிரம கொள்கை தமிழீழத்தின் தொழிற்கொள்கையாக பேணப்படும்.

இப்படி சொன்னால் அடுத்த தேசிய கட்சியின் ஆதரவு கட்டாயம் தங்களுக்கு உண்டு!

நன்றி தோழர் குசும்பன் சில கருத்துகளை எடுத்தாண்டமைக்காக...

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்களை வைத்து நல்லா காமெடி செய்கின்றீர்கள்

இதற்காவது நாம் உதவுகின்றோமே

சந்தோசம்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களை வைத்து நல்லா காமெடி செய்கின்றீர்கள்

இதற்காவது நாம் உதவுகின்றோமே

சந்தோசம்

நன்றி

என்ன தோழர் விசுகு டென்சன் ஆகி போட்டீர்கள்.... ஆதாயம் இல்லாமல் இங்கு எவனும் எந்த சிக்கலிலும் காலை வைப்பதில்லையே....

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம்

ரத்தமும் சதையும் எலும்பும்கலந்தது

எந்தவித சுயலாபங்களுமற்றது

அதன் அருமையை அறிவது கடினம்

உணரவேண்டும்

ஆனால் அதை தாங்கள் உணரவேண்டும் என்று நான் கேட்கமாட்டேன்

ஏனெனில் அது அவ்வளவு கொடூரமானது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட முக்கியமானது

எமது போராட்டம் தமிழீழத்துக்கானது

இன்னொரு தமிழ் நாட்டுக்கானது அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட முக்கியமானது

எமது போராட்டம் தமிழீழத்துக்கானது

இன்னொரு தமிழ் நாட்டுக்கானது அல்ல.

உமக்கு ஒரு கொள்கை இருந்தால் எமக்கும் ஒரு கொள்கை உண்டல்லவா தோழர் விசுகு......

தமிழருக்கு உலகில் இரண்டு நாடுகள் அது தமிழர் நாடு மற்றும் தமிழீழம்..

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.