Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டன- கத்தரிக்காய் கிலோ நாலு ரூபாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

PN1211.jpg

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக அகதிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. அகதிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாவிரதம் இருந்த அகதிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து அகதிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி: மீனகம் இணையதளத்திற்கு

பழ .நெடுமாறன் அவர்கள் மீது நமக்கு எளிமையான மனிதர்.. ஈழத்திற்காக தனது வாழ்நாளை பெரும் பகுதியை அர்ப்பணம் செய்தவர்.. என்ற மரியாதை இருப்பினும்.அவர் செய்யும் வழிமுறைகள் நமக்கு ஒப்புமை இல்லை..செயலை கால ஒப்புமை நோக்கி செய்தல் சிறப்பு எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க ஊரே மாணவர் அமைப்புகள் வழங்கறிஞர்கள் என ஈழத்திற்காக தெருவில் இறங்கி இருக்க .. உண்ணாவிரத போராட்டம் ஊதுவத்தி போராட்டம் என நடத்துதல் அழகா? ஊர்வலத்தில் நடக்கும் இளைஞரகள் ஏதோ ஈழத்திற்காக வெட்டி(?) முறித்துவிட்டோம் எனும் திருப்தியோடு கலைந்து செல்வதை காண எரிச்சலாக உள்ளது..

கட்சி ஊர்வலத்தில் செல்லும் போது எதிர்கட்சி அலுவலகங்களை தாக்கி எரியூட்டுவது போல் .. இதற்கு காரணமான மத்திய அரசு அலுவலகங்களை தாக்கி எரியூட்ட வேண்டாமா? ஒருவேளை இவர் இதற்கு முன் காங்கிரசு கட்சியில் இருந்தால் என்னவோ இவ்வாறான சிந்தனைகள் இடம்பெற வாய்ப்புண்டு.ஆனால் அது விலை போகா சரக்கு என்பதை நெடுமாறன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுருங்க சொன்னால் கயவன் கருநாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் இவரும் கண்டித்து கடிதம் எழுதுகிறார் டெல்லி ஏகாதிபத்தியத்தில் இக்கடிதத்திற்கான ஒரே அளவுகோல் "குப்பை தொட்டி" .அடுத்து இன்னும் இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று குரல் எழுப்புவருகிறார்.. தமிழீழம் தான் பாதுகாப்பு என்ற நிலை உறுதி என அனைவருக்கு தெரிந்த பிறகு.. இன்னும் ஏன் பொந்தியா கண்டுகொள்ளவில்லை? காரணம் .. பொந்தியா தமிழர்களை மனிதனாகவே மதிக்கவில்லை என்று இவருக்கு தெரியாதா? இன்னும் ஏன் கெஞ்சல் .. கூத்தாடல்..? நம் மண்ணை மீட்க ஏன் இவர்களிடம் கெஞ்ச வேண்டும் என ஒர் உரையை இதுவரை நிகழ்த்திருப்பாரா?

எனவெ வயதில் மூத்த நெடுமாறன் போன்றோர்.. இனியும் இளைஞர்களுக்கு வழிவிடுதல் நன்று.உண்ணவிரதம் மவுன விரதம் தீப்பந்த பேரணி என்று இளைஞர்களை கிலுகிலுப்பை காட்டி காயடித்து விடாமல் அவர்களை அவர்களுடைய "பாணியில்" போராட விடுவது நனறு.. அது "எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான்" "அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு" என்ற புரட்சியாளர் தமிழீழ தேசிய தலைவரின் பாணியாகும்...அதுதான் தற்போதைய "பாணியுமாகும்"..

கண்டனம் யாரும் தெரிவிக்கலாம், அறிக்கையும் அப்படித்தான் மலிந்து போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.