Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவிற்கு, இந்தியா உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிற்கு, இந்தியா உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல்

திகதி: 04.02.2010 // தமிழீழம்

சிறீலங்கா அரசிற்கு இந்தியாவின் உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக இந்திய அதிகாரி அசோக்கே.காந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாரின் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான தொடருந்துப்பாதை புனரமைப்பிற்கு இந்தியா நிறுவனத்துடன் சிறீலங்கா அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்தாயக பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பலஅபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தியாவின் நிறுவனங்கள் காலூன்றியுள்ளன.

இந்நிலையில் மன்னார் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான 63 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தொடருந்து பாதையினை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீதி அபிவிருத்தி பணிகளுக்கு பத்து இலட்சத்தி 149 ஆயிரம் அமெரிக்கா டெலர் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே 26 இலட்சம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகளை இந்தியா அரசு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அபிவிருத்தி பணிகளில் இந்தியா அக்கறைகொண்டுள்ளது, போன்ற செயல்கள் ஊடாக தமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழ் மக்களுக்கு உதவிகள் வழங்குவதாக இன்று ஒருதொகுதி கூரைத்தகடுகளை இந்திய அதிகாரி அசோக்காந்தா பசில்றாஜபக்சவிடம் வழங்கியுள்ளார்.

மற்றும் தமிழ்மக்களின் கட்டுமான பணிகளுக்காக இந்தியா 08 இலட்சம் பெறுமதியான சீமேந்து பைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது. மற்றும் வடக்கில் தமிழர்தாய பகுதிகளின் வீதி அபிவிருத்திக்காக 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்கப்படவுள்ளதாகவும் சிறீலங்காவின் துறைமுகம் மற்றும் விமானநிலையம் கல்வி ஆகியவற்றின் அபிவிருத்திப்பணிகளில் இந்தியா பங்களிப்பு செய்யும் என்றும் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயக பகுதிகளில் காங்கேசன்துறை துறைமுகாம் பருத்தித்துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் பேன்ற அபிவிருத்தி பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு முழுமையாக உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

சங்கதி

வட இந்திய பயங்கரவாதிகள் மூன்றாவது தடவை - 5000 கோடி உதவி என கதை விடுகிறார்கள்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு சிலருக்குத்தான் கொஞ்ச சீமெந்தும், கீழ்த்தரமான தகரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலனவர்கள் தரமான வீடுகளில் / ஓட்டுக் கூரைகளுடன் இருந்தவர்கள்.

முன்பைவிட நல்ல நிலையில் (ஆகக் குறைந்தது முன்னைய நிலையிலாவது) வாழும் வகையில் உதவி செய்வதையே புனரமைப்பு அல்லது மீள்நிர்மாணம் என்று சொல்லலாம்.

முன்பைவிட கீழ்த்தரமான வசதிகளை திட்டமிட்டு வழங்குவது மீள் அழிப்பாகும்.

பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் சொத்துக்களை நாசப்படுத்தி வருவது அண்மையில் காணக்கூடியதாக இருந்தது.

யாழ் நகரிலோ, வன்னி பிரதேசத்திலோ மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மிக சொற்பமே. தமிழரின் உடைந்த வீடுகள், உடைந்த கடைகள், சிதைந்த வீதிகள், கோவில்கள் எல்லாம் அப்படியே இருக்க, சிங்கள பௌத்த விகாரைகள் புதிதாக முளைக்கின்றன, பயங்கரவாதிகளின் முகாம்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன, வெற்றி சின்னங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் சில உழவு இயந்திரங்களை வாங்கி தாமே வைத்து, மக்களை பிச்சைகாரர்போல் நடத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு வேலை வட இந்திய பயங்கரவாதிகள் இவற்றுக்குத்தான் உதவி செய்கிறார்கள் போல.

எனவே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு இதுவரை பாரிய உதவிகள் வழங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய்.

இன்னொரு கதையும் உலாவுகிறது - இரண்டாவது 500 கோடி ஜனாதிபதி தேர்தல் செலவுகளுக்கு - சிங்களவனுக்கு 1500 ரூபா படி வழங்க - பயன்பட்டதாக.

அப்படி என்றால் இந்த 5000 கோடி உதவி - வரும் பொதுத் தேர்தலுக்கா?

தமிழ்நாட்டு மக்கள் வழமை போல் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள்.

வட இந்திய பயங்கரவாதிகள் மூன்றாவது தடவை - 5000 கோடி உதவி என கதை விடுகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் வழமை போல் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள்.

இந்தியா எவ்வளவோ கொடுத்தாலும் இந்த சிங்களவனுக்கு தேவை சீன சரக்கு தான் என்பது வெகு தொலைவிலில்லை.

ஏன் தமிழரிடையே எல்லை கோடு போட்டு தமிழ் நாட்டு தமிழர் என்ற பேதம்.இம் முறை எம்மவர் வட தமிழீழம் தொட்டு தென் தமிழீழம் வரைக்கும் சம்பந்தரின் பூச்சுற்றலில் ஏமாந்து விடவில்லையா?

Edited by vimalk

இம் முறை எம்மவர் வட தமிழீழம் தொட்டு தென் தமிழீழம் வரைக்கும் சம்பந்தரின் பூச்சுற்றலில் ஏமாந்து விடவில்லையா?

பூசுற்றாதீர்கள்!

வட இந்திய பயங்கரவாதிகள் மீதுள்ள உங்கள் அபிமானம் நன்கு விளங்குகிறது!!

பொருளாதார அபிவிருத்தி கடனுதவி என்றபேரில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டிருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.முதலாவது,சுயலாபம் கருதிய வியாபார நோக்கு.இரண்டாவது அரசியல் இலாபம் தேடும் பிரதேச அபகரிப்பு.இரண்டு கள்ளரின் உள் நோக்கம் இதுதானேயன்றி வேறெதுவுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருளாதார அபிவிருத்தி கடனுதவி என்றபேரில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டிருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.முதலாவது,சுயலாபம் கருதிய வியாபார நோக்கு.இரண்டாவது அரசியல் இலாபம் தேடும் பிரதேச அபகரிப்பு.இரண்டு கள்ளரின் உள் நோக்கம் இதுதானேயன்றி வேறெதுவுமில்லை.

சீனா கொடுத்ததையும் ,கொடுக்க போவதையும் ஒப்பிட்டால் இது ஒரு பிச்சை காசு, இதை விகாரைகளுக்கு முன்னால் இருக்கும் பிச்சைகாரர்கலுக்கு போடத்தான் மகிந்தர் பயன் படுத்தவார், வடகிழக்குக்கு எதுவும் போகாது. :rolleyes::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சகோதரர்களின் பிரத்தியேக வங்கிக்கணக்கில் இத்தொகையை வரவு வைக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.