Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் விற்பனைக்கு- சிங்கள ஆரிய கூட்டமைப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விற்பனைக்கு- சிங்கள ஆரிய கூட்டமைப்பு

f0den8.jpg

ஆந்திரா

5nnhat.jpg

தமிழ்நாடு

தமிழர்கள் தமிழர் நிலங்களில் இருந்து அடிமைகளாக ஏற்றுமதி செய்யபடுவது இன்று நேற்றல்ல வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. ஒப்பீட்டளவில் ஆந்திர தெலுங்கர்களுக்கு அடுத்து நாம் தான் உள்ளோம்.. நாம் இங்கே கூறவருவது அலுவலக வேலைகளை அல்ல. கூலி வேலை செய்பவர்களை பற்றியே..

மலேசிய சிறைகளில் தமிழர்கள் அவதி..

சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலாளர்கள் பலி..

வெளிநாட்டு வேலை என்று கூறி ஏஜண்ட் ஏமாற்றினார்..

இது நாளாந்தம் செய்திதாள்களில் வாசிக்கும் நிகழ்வுகள்.அதிலும் மோசம் நம்மவர்கள் வெளிநாட்டில் இறந்த உடல்களை எடுத்துவர டெல்லி வாலாக்களிடம் சொம்பி சோப்பு போடும் பரிதாப நிலை.

ஆரிய கோட்பாடு

ஆரிய மனுதர்ம கோட்பாட்டின் படி . ஒன்று ஒர் இனத்தை போர் செய்து அழிக்கவேண்டும் அல்லது அவர்கள் பாணியில் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து நயவஞ்சகமாக அழிக்க வேண்டும்.. இதில் சிங்கள-ஆரிய கூட்டமைப்பு ஈழதமிழர்களிடம் தேர்ந்தெடுத்தது முதலாவது வழிமுறையாகும். நம்மவர்களிடம் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழிமுறையாகும்..

ஏ.டி.ம் மிஷின்களாகும் தமிழக தமிழர்கள்..

d2a4b72754672b8c4c5d4378e5c8-grande.jpg

உள்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக தமிழர்களின் வாழ்வாதரமான் நீர் நிலம் ஆகியவறை அண்டை தேசிய இனங்களை தூண்டி திட்டமிட்டு பறித்து கொள்ளுதல் மூலமும் மற்ற இனத்தவரை தமிழர் நாட்டில் அதிகமாக குடியேற்றுவதன் மூலமும்.நாகரிகத்தில் சிறந்து விளங்கும் தமிழர்களை அடையாளமற்றோர் ஆக்குவதுதான் தற்கால ஆரியத்தின் புதிய திட்டம்..

நதிகளை தேசிய மயமாக்குவது என்ற சட்டம் பல முறை கொள்கை அளவில் விவாதிக்கபட்ட போதும் இன்னும் ஏன் அதை பொந்திய அரசு அதை முன்மொழியவில்லை? காரணம் எளிது காரணம் நாம்தான்.விவசாய கூலிகள் பலர் நதி நீர் சிக்கல்களால் இன்று ஒட்டகம் மேய்க்கவும் ஒட்டடை அடிக்கவும் கக்கூசு கழவவும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றனர்.இவர்கள் சுகமாக வாழ்வதற்கு அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பது டில்லி ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தேவை.

ஆனால் அவ்வாறு தமிழர்களை ஏற்றுமதி செய்யும் அதேவேளை மறுபுறத்தில் பீகார் வாசிகள் மற்றும் குஜராத் காரர்கள் தமிழ்நாட்டில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்தி வருகின்றனர்.. இதில் குஜராத்தியர்கள் ஒன்றை பத்தாக்க கூடியவர்கள் என்ற பழமொழி உண்டு.. தமிழ்நாட்டில் உழைக்காமல் வந்து குந்திகொண்டு எப்படி ஒன்றை பத்தாக்க முடியும்? காரணம் எளிது. இடை தரகர் வேலையும் வட்டிக்கு விட்டு ஏழை தமிழர்களை உறிஞ்சும் தேர்ந்த தொழில் முறையே காரணம்.இவர்களை அடித்து வெளியேற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு.

டில்லி ஏகாதிபத்திய முதலாளிகளின் உள்நுழைவு.

தமிழர் நிலங்களை கூறு போட்டு விற்கும் முத்தமிழ் விற்ற கருணாநிதி முன்பு தூத்துகுடிக்கு அருகில் தமிழர் நிலங்களை விற்க துணிந்தார்.. தமிழ்தேசிய உணர்வாளர்கள் போராட்டத்தால் பின்னுக்கு வாங்க நேரிட்டது.அதிலும் ஒர் சூசகமான அறிவிப்பை வெளியிடுகிறார் இனி தமிழக அரசு இந்த விடயத்தில் தலையிடாது. அது வாங்குபவர்க்கும் விற்பவர்களுக்கு உள்ள பிரச்சனை.ஆக கூட்டி கழித்து பார்த்தால் இவருடைய தொண்டரடி பொடிகள் மூலம் அதாவது கட்டை பஞ்சாயத்து மிரட்டல் உருட்டல் மூலம் வாங்கலாம் எனபதே அந்த அறிவிப்பு.

பன்னாட்டு தொழில் முதலாளிகளை தொழில் தொடங்க வா.. வா.. என கூவி அழைக்கும் தமிழக அரசு அந்த தொழிற்சாலைகளில் தமிழர்கள்தான் முதலிடம் என்று சட்டம் இயற்றவேண்டாமா? அந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு போராடும் தொழிற்சங்கங்களை அமைக்க அந்த பன்னாட்டு பெருமுதலாளிகளின் இசைவை பெறவேண்டுமா வேண்டாமா? இன்று ஹோண்டா கார் கம்பனியில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் நடுத்தெருவில்..

ஒருங்கிணைந்த போராட்டம் சாத்தியமா?

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா.? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்த போது அதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது "இந்தி" யா தானே..?

தமிழீழ தோழர்களின் நிலை.

காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை..

இந்தியா இலங்கை பெட்ரோலியம் கார்பரேசன்..

சம்பூர் அனல் மின் நிலையம்..

பசுமை புரட்சி திட்டம்..

மன்னார் எண்ணை அகழ்வாராய்ச்சி..

தமிழ்நாட்டில் இருந்து கேபிள் வழியாக சிங்களவனுக்கு மின்சாரம்..

இந்திராகாந்தி பல்கலை கழகம்..

யாழ்பாணத்தில் துணை தூதரகம்..

தொடர்வண்டி தொழிற்சாலை..

அசோக் லைடேண்டு..

நாம் முன்பு எழுதிய கட்டுரையில் இந்தியத்தின் தலையீடுகள் பற்றி தெளிவாக விளக்கி இருந்தோம். இன்று தன்னுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்தை ஈழத்தில் பொந்தியா செய்துவருகிறது. இதை செய்பவர்கள் இந்திய அரசு என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் அவர்களுடைய அடிப்பொடிகள் ஏகாதிபத்திய முதலாளிகள் செய்யவிருக்கிறார்கள். எனவே அங்கும் இந்திக்காரர்களின் அட்டகாசம் விரிவடைய வாய்ப்புள்ளது. எனவே ஈழத்திற்காக குரல் கொடுக்கும் ஈழத்தோழர்கள் முதலில் செய்யவேண்டியது.. இந்தியாவே வெளியேறு! என்ற குரல் தான் முதன்மையாக ஒலிக்கவேண்டும்.சிங்களவனை பிறகு பார்த்து கொள்ளலாம் .அவன் நேரடியான எதிரி. இந்த நயவஞ்ச எதிரியை வீழ்த்துதல் இங்கு முக்கியமானது அத்தோடு தமிழக தமிழர்களை தாங்கள் வாழும் நாடுகளில் எங்காவது காண நேரிட்டால்.எதாவது உதவி தேவை என்றால் செய்து கொடுப்பதோடு இந்தியத்தின் வஞ்சகம் குறித்தும் தமிழீழத்தோடு தனிதமிழ்நாட்டுக்கான அவசியம் குறித்து எடுத்து உரையுங்கள்..

தமிழினத்தின் இன்றைய தேவை.

அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் "இந்தி"யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும் தான் என உணர வேண்டும். அதற்கேற்ப தங்களின் போராட்ட வடிவங்களையும் .. அதன் சார்பான முழக்கங்களையும் எழுப்பவேண்டும்..

அதாவது தமிழ் நாட்டை நம்பி காலை வைக்க முடியாது ,அவர்கள் விழித்துக்கொள்ள இன்னும் 50வருடங்களாகும்.இந்தியனை விரட்ட

நாயோடோ பேயோடோ சேர்ந்து வட இந்திய நாய்களை அடித்து விரட்ட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழ் நாட்டை நம்பி காலை வைக்க முடியாது ,அவர்கள் விழித்துக்கொள்ள இன்னும் 50வருடங்களாகும்.இந்தியனை விரட்ட

நாயோடோ பேயோடோ சேர்ந்து வட இந்திய நாய்களை அடித்து விரட்ட வேண்டும்.

ஆம் தோழர் sitpi எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டை தமிழீழத்தவர் கடைபிடிக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.