Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக அமைச்சை பொறுப்பேற்ற மகிந்த தனது ஆலோசகராக விக்டர் ஐவனை நியமிப்பு?

Featured Replies

ஊடக அமைச்சை பொறுப்பேற்ற மகிந்த தனது ஆலோசகராக விக்டர் ஐவனை நியமிப்பு?

.அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடமிருந்து ஊடக அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அரசதலைவர் மகிந்த தனது புதிய அமைச்சின் அதன் சிரேஷ்ட ஆலோசகராக ராவயவின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவனை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச ஊடகமொன்றின் பிரதானியொருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அரச ஊடக பிரதானிகள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு அரசதலைவரின் செயலாளர், மற்றும் ராவய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விக்டர் ஐவன் இதன்போது ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்கும் தடைகள், இடையூறுகள் குறித்து பேசினார். குறித்து குறிப்பாக லங்கா பத்திரிகையின் ஆசிரியர் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தவறானது என்று தெரிவித்துள்ளார்.

எனினும், லங்கா பத்திரிகை ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருப்பதைத் தான் அறிந்திருக்கவில்லையென மகிந்த கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறை மா அதிபரைத் தொடர்புகொண்ட மகிந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் குறித்து விசாரித்து அவரை விடுவிக்குமாறு அறிவித்துள்ளார்.

விக்டர் ஐவனின் விமர்சன ரீதியான கருத்துக்களை அடுத்து எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டால் அதுகுறித்து தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என காவல்துறை மா அதிபருக்கு மகிந்த உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்க ஊடகங்கள் ஓரளவேனும் பக்கசார்பின்றி செயற்படுவது முக்கியமானது என வலியுறுத்தியுள்ள விக்டர் ஐவன், சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், காவல்துறையினர் மற்றும் வன்முறையாளர்களினால் சீர்குலைக்கப்படுவது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட மகிந்த, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்க வேண்டாம் என காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடுமாறு தனது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு அறிவித்துள்ளார்.

நன்றி

ஈழநேசன்

__________________________________________

எல்லா அமைச்சு பொறுப்புகளையும் இவரே ஏற்றுக்கொண்டால்

எந்தப்பிரச்சினையும் இல்லையல்லோ

ஒரு காலத்தில் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகையாளராக இருந்த விக்ரர் ஐவன் இன்று ஒரு சர்வாதிகாரிக்கு ஆலோசகராக போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகையாளராக இருந்த விக்ரர் ஐவன் இன்று ஒரு சர்வாதிகாரிக்கு ஆலோசகராக போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கின்றது.

நிழலியவர்களே உண்மைதான். என்னாலும் நம்பமுடியவில்லை.

இதைவிட இன்னும் யார்யாரோ ........................ நாளை சம்பந்தரையாவே அரசுத் தலைவரின் ஆலோசகராகினாலும் ஆச்சரியப்பட முடியாது.ஆலோசகராகி உலகிலேயே மகிந்தவே சிறந்த தலைவர் என்றாலும் ஆச்சரியப்பட முடியாது. இன்று பொது நலன் , மக்கள் நலன் என்பதெல்லாம் என்னவிலை என்ற நிலையே சிறிலங்காவில் நடைமுறையாகிவருகிறது.

இன்னும் யார் யாரைக் காணப் போகிறோமோ எதற்கும் எமது மனங்களைத் தயார்படுத்திக் கொள்வேண்டியதே.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.