Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவை புறக்கணி' பரப்புரை சுற்றலாத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை: சுற்றுலா துறை இயக்குனர்

Featured Replies

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.

பொதுவாகவே சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி மாதத்தில் 32 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் மேற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது.

எனவே போரையும் கணக்கில் கொள்ளாது தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரஸ்ய சுற்றுலாப் பயணிகளிலேயே சிறிலங்காவின் சுற்றுலாத் துறை தங்கி இருக்க வேண்டி வந்தது.

எது எப்படி இருந்தாலும், போர் முடிந்த பின்னர் வந்துள்ள முதல் குளிர் காலத்தில் சுற்றுலாத்துறை குறிப்பிட்டளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் சஞ்சிக பெரேரா. பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் சுற்றுலாச் சபையின் இயக்குநர் அவர்.

அண்மையில் நடந்து முடிந்த குடியரசு அதிபர் தேர்தல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பெரேரா சொன்னார்.

“சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகவே தமது பயணங்களை 4-5 மாதங்களுக்கு முன்பதாகத் திட்டமிட்டுப் பதிவு செய்து விடுவார்கள். எனவே நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை அவர்களது முடிவுகளில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தாது. போரோ தாக்குதல்களோ நடக்கவில்லை என்பது தான் சுற்றுலாப் பயணிகளை நம்பிக்கையடன் ஊக்கப்படுத்துகிறது” என்கிறார் அவர்.

சிறிலங்காவின் அந்நியச் செலாவணி வருமானத்தில் குறிப்பிட்ட அளவு பகுதி சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது.

பிரித்தானியாவின் கீத்ரோ மற்றும் கேட்விக் வானூர்தி நிலையங்களில் இருந்தே பெரும்பாலான பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள் என்பது பெரேரா தரும் தகவல்.

வெளிநாட்டுத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட 'சிறிலங்காவைப் புறக்கணி' பரப்புரை சுற்றலாப் பயணிகளின் வருகையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிறிலங்காவுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பிரித்தானியாவின் வெளிவிவகாரத் துறை மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகம் ஆகியன விடுத்த அறிவிப்புக்களே சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் காரணமாக யால தேசிய பூங்கா மற்றம் அறுகம் குடா பகுதிகள் முன்னர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்தன. இப்போது அவை திறந்து விடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் இருந்தான சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புக்கு மற்றொரு காரணம், பிரிட்டனில் வசிக்கும் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்ப்பதற்குச் செல்வது என்கிறார் பாலா பத்மபாஸ்கரன். லண்டனில் உள்ள ‘ஸ்கைவிங்’ வான் பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்.

இருப்பினும், சிறிலங்காவிற்குச் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் எதனையும் தங்களால் அவதானிக்க முடியவில்லை என்று கூறுகிறார் தொம்சன். பிரித்தானியாவின் சுற்றுலாப் பயண ஒழுங்குபடுத்தல் நிறுவனம் ஒன்றின் அதிகாரி அவர்.

அதே சமயம் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு இருக்கின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

http://www.puthinappalakai.com/view.php?20100220100541

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.