Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்த் தேசியம் சிதைப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்த் தேசியம் சிதைப்பா?

தற்போதைய அரசமைப்பின் கீழ் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.

இனி சுமார் ஆறு வார காலம் பொதுத் தேர்தல் பிரசா ரம்களை கட்டப் போகின்றது. ஏப்ரல் 8 ஆம் திகதி வாக் களிப்புடன் தேர்தல் திருவிழா உச்சம்பெறும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், தமிழர் தாயகத்தில், புதிய சூழலில் நடைபெறும் பொதுத் தேர்தல் இது என்பது மறுக்கப்பட முடியாத விடய மாகும்.

தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போராட்டம் நடத்தி மிகப் பலமான சக்தியாக விஸ்வரூபம் எடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், வேரோ டும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை ஆட்சித் தலைமை மார்தட்டிப் பிரகடனப்படுத் தியுள்ள நிலையில், இத் தேர்தல் தமிழர் பகுதிகளுக்கும் சேர்த்து இப்போது நடத்தப்படுகின்றது.

அதாவது, ஆயுத ரீதியில் தமிழரின் பலம் அடித்து நொறுக்கப்பட்ட பெருமிதத்தில் தென்னிலங்கை வெற்றிக்களிப்போடு இத் தேர்தலையும் எதிர்கொள்கின் றது. வலிமையாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பு இங்கு இல்லாத நிலையில் தமிழர்கள் தங் களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் இந்தத் தேர் தலை எதிர்கொள்கின்றார்கள்.

தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் வேட்பு மனுத்தாக் கல் செய்யப்பட்டிருக்கும் போக்கே இது புலிகளின் கிடு குப் பிடியிலிருந்து விடுபட்ட பகுதிகள் என்பதை உணர்த் துவதற்குப் போதுமானது.

எண்ணிக்கையில் எதிர்பாராத அளவுக்கு, புதிது புதிதா கப் பல கட்சிகளும், பல டசின் சுயேச்சைக் குழுக்களும் அடித்துப் பிடித்துக் கொண்டு தமிழர் தாயகத்தில் கள மிறங்கியிருக்கின்றமை ஒரு புதிய போக்கே. அது ஜன நாயகப் பார்வையிலே மிக ஆரோக்கியமான விடயம்தான். அதில் குறை கூறுவதற்கோ, தவறு சொல்வ தற்கோ ஏதுமில்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் இப்படிப் பல தரப்புகளும் ஒரே சமயத்தில் தமிழர் தாயகப் பகுதி எங்கும் இலக்குவைத்துக் களமிறங் கியமைக்கு, முன்னர் எப்போதும் இல்லாதவாறு விடு தலைப் புலிகளின் பிடி இல்லாமல் போய், பலரும் குறிப் பிடும் "சுதந்திர' நிலைமைதான் காரணம் என்றால், அது வரவேற்கத்தக்கதே.

ஆனால், அப்படியில்லாமல், புலிகள் போன்ற வலு வான ஆயுத பலத்துடன் கூடிய சக்திகள் அடியோடு புற மொதுக்கப்பட்ட சூழலை பின்னணியை நல்ல வாய்ப் பாகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகவும் பயன்படுத்திக் கொண்டு, தமிழர் தேசியம் என்ற உணர்வைத் தமிழர் தாயகத்தில் சிதறடிக்கும் உள்நோக்கத்துடன், திட் டமிட்டு இப்படி ஒரு கைங்கரியம் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்குமானால் அது குறித்து தமிழர்கள் விசேட கவனம் எடுக்க வேண்டியமை மிக முக் கியமானதாகும்.

தமிழ்த் தேசிய சக்திகள் நாடாளுமன்றுக்கு வலிமை யுடன் வருவதை பிரதிநிதித்துவம் செய்வதை நீர்த்துப் போக வைக்கும் தந்திரோபாய இலக்கோடு, தென்னி லங்கையில் மையம் கொண்டுள்ள சில சக்திகளே இப்படி எண்ணிக்கையில் அதிகமான கட்சிகளை குழுக்களை பின்னால் நின்று தூண்டி, இயக்கி, தமிழர் தாயகத்தில் களமிறக்கியிருக்கின்றன என்ற நெருடலான ஒரு கருத்து சில தரப்புகளில் இருந்து வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்காகப் பல்வேறு சுயேச்சைக் குழுக்களை அரசுத் தரப்பு நிதி வழங்கி, தமிழர் தாயகப் பிரதேசத்தில் கள மிறக்கியிருக்கின்றது எனக் கூட்டமைப்பின் தலைவர் களுள் ஒருவரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருக்கின்றமை இங்கு கவ னிக்கத்தக்கது.

தமிழர் தாயகத்தில் புறக்கட்டுப்பாடுகள், அழுத்தங் கள் இல்லாத ஜனநாயகச் சூழல் ஒன்று மலர்ந்திருப்ப தாகக் கூறிக்கொண்டு

அத்தகைய வரலாற்றுப் புறநிலையை ஏற்படுத்திய சாதனையாளர்கள் தாமே என்று மார்தட்டிக் கொண்டு

பெருமை பேசுகின்ற தரப்புகளும், சக்திகளும் அத் தகைய ஜனநாயகச் சூழலை, தமிழ்த் தேசியம் பற்றிய உணர்வுகளைச் சிதறடிக்க வைப்பதற்கான சந்தர்ப்ப மாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றமை குறித்துத் தமிழ் மக் கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும்.

அதுவும், இத்தகைய குழுக்கள், அணிகள் "தமிழ்த் தேசியம்' பேசிக்கொண்டே களத்தில் இறங்கியிருக்கின்ற மையும் மிக ஆபத்தான விடயமாகும்.

"எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், அத்தகையோர் எய் வதற்கு கோடரிக்காம்பான புல்லுருவிகள் தமிழர் சமூ கத்திலிருந்தே வந்தவர்கள்தாம் என்பதால் அவர்களைத் தமிழ் மக்கள் உரிய முறையில் அடையாளம் கண்டு, தகுந்த வழியில் எதிர்காலத்தில் கையாள முன்வரவேண்டும்.

பொதுத் தேர்தல் முடிவுகள் ஊடாகச் சரியான பாடத் தைப் படிப்பிப்பதும் நல்ல வழிமுறையாகும்.

"தமிழ்த் தேசியம்' என்ற உணர்வெழுச்சி குறித்துத் தமி ழர்கள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது. தங்கள் வரலாற்று விழுமியங்களை பண்பாட்டுக் கோலங்களை சரித்திரத் தனித்துவங்களை சந்ததி ரீதியான தொடர் சிறப்புகளை தமது பிரிக்க முடியாத பிறப்புரிமைகளையும் தக்க வைப்பது தொடர் பில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய கட்டமும் இது தான்.

நன்றி - உதயன் இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியம் பேசி எல்லாவற்றையும் இழந்து இருப்பதற்கு ஜனநாயகத்தை நாடுகிறோமா?

ஒருவேளை கூட்டமைப்பில் இருந்து பிரிந்து பொய் தனிய போட்டியிட அரசாங்கம் உதவி இருக்குமோ...

இப்படியும் ஏன் நாம் சிந்திக்கக் கூடாது?

யார் நல்லவர் யார் கேட்டவர் என்று காலம் தான் பத்தி சொல்லும்.

ஆனால் திருத்திக்கொள்ளத் தான் அந்தக் காலம் அனுமதிக்காது எல்லாமே கடந்துவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனநாய் சதுரங்கம்விளையாட புலத்து கவிஞர்களும்,புலத்துமேதாவிகளும் 'லொபி' பண்ணவெளிக்கிட்டால் தேசியம்சிதையாமல் பெருக்கவா செய்யும்..?

தமிழீழமே தேவையில்லை என்று நோர்வேயில் வெள்ளையளுக்கு வகுப்பெடுத்த கவிதாமேதைகள் எல்லாம் இப்போது தேசியம்சிதைகிறது என்று ஊமைக்கோபம்காட்டுவது நல்ல முரண்தான்.

எப்படியும் எழுதி எப்படியும் மாற்றிகோல்மால் செய்துவாழநினைக்கும் இத்தகைய ஈனங்களுக்கு காலம்பதில் சொல்கிறதோ இல்லையோ காணும் இடத்தில் வருங்காலத்தில் நல்லபதில் கிடைக்கும்.

உதயன் நிர்வாகம் தங்கட வெற்றிக்கு வலுச்சேர்க்க தேவையான கட்டுரை...

ஜனநாயகம் பேசித்திரியும் அரச அடிவருடி தமிழ் குழுக்கள், தமிழ் தேசியத்தை சிதைப்பது தெரிந்த விடயம் தான்.

ஆனால், சரவணபவன் முதலில் இன்றைய கூட்டமைப்புக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு என்று தெளிவுபடுத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாரப் பிரதிநிதித்துவம் முறையில் தேர்தல் நடப்பதால், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய வீச்சின் விகிதாரம் என்னவென்று அறியலாம்தானே.



  1. ஒற்றையாட்சித் தமிழ்த் தேசியம்
  2. சமஷ்டியாட்சித் தமிழ்த் தேசியம்
  3. தனிநாட்டுத் தமிழ்த் தேசியம்
  4. ஒட்டுக்குழுத் தமிழ்த் தேசியம்
  5. இரட்டைமுகவர் தமிழ்த் தேசியம்
  6. கட்சிதாவும் தமிழ்த் தேசியம்
  7. புலத்துத் தமிழ்த் தேசியம்

என்று பலவகையில் தேசியம் பேசுபவர்களும் போட்டியில் உள்ளார்கள்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.