Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசிபிக் கடலில் 8.5 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்-சிலி, பெரு, ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசிபிக் கடலில் 8.5 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்-சிலி, பெரு, ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை

சனிக்கிழமை, பிப்ரவரி 27, 2010, 10:56[iST]

சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் மிக பயங்கர நிலநடுக்கம் [^] ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று காலை சிலி அருகே உள்ள கன்செப்சியான் நகர் அருகே கடல் பகுதியில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரி்க்டர் அளவுகோளில் 8.5 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலியின் நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் மிக பயங்கரமாக குலுங்கின. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

ஜப்பானிலும் கடும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை வாபஸ்

அதே போல ஜப்பானின் ருயூக்சு தீவுகளில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடு்த்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

ஜப்பானின் தெற்கில் உள்ள ஒகினோவா தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 புள்ளிகளாகப் பதிவானது.

கடந்த 100 ஆண்டுகளில் இப் பகுதியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பல மணி நேரத்தக்குப் பின்னரும் அலைகள் ஏதும் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து 2 பேர் காயமடைந்தனர். மற்றபடி பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
படங்களைப் பார்வையிட...
  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்வையிட...

இயற்கையின் சக்திக்கு முன் மனிதனின் ஆட்டம் விட்டில் பூச்சியாட்டம். மனிதன் எத்தனை ஆண்டுகள் காலங்கள் வலுக்களை செலவழித்துக் கட்டியவை ஒரு நொடியில் இயற்கையால் சிதைத்து சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளதும் அன்றி அதுவே அவனுக்கு மரணப் புதைகுழிகளையும் கிண்டிவிட்டுள்ளது. இதற்குப் பிறகும்.. மனிதனுக்குள்ள இறுமாப்பும்.. கொடுமைத்தனங்களும் மாறுமா என்ன..??!

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் துயரில் இருந்து விரைந்து வெளிவர உதவ இயற்கையை மண்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உலக மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.