Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர்

Featured Replies

தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர்

இந்தியா எங்களுக்கு ஆதரவாக உள்ளது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையிலான தமிழகமும் எங்களுடன் உள்ளது, எனவே மனித உரிமை பிரச்சனைகளை காட்டி மேற்குலகம் அளிக்கும் அழுத்தங்களை நாங்கள் சமாளிப்போம் என்று சிறிலங்க சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டிய செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

“இன்று சில மேற்குலக நாடுகள் (மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக) எமக்கு எதிராக செயற்பட்டுவருகின்றன. இவ்வாறான சதித்திட்டங்களுக்கு எதிராக எதிர் வரும் எட்டாம் திகதி இந்த நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள்.ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் இலங்கைக்கு பாரிய அழுத்தங்கள் வந்தன. அவற்றை சமாளிப்பது குறித்து நாங்கள் சிந்தித்து வந்தோம்.

ஆனால் இன்று தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது.

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது. எனவே இந்தியா மற்றும் தமிழகத்தின் அழுத்தங்களை சமாளித்த எங்களுக்கு மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை சமாளிக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அல்லது வேறு எந்தப் பிரிவிலும் இலங்கைக்கு எதிராக ஏதாவது யோசனைகள் கொண்டு வரப்பட்டால் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இலங்கை தோற்கடிக்கும்.

சீனா, ரஷ்யா, இந்தியா, தென்னாபிக்கா போன்ற நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன” என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிட முடியாது

ஐக்கிய நாடுகள் சபையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம் பெறவேண்டிய காலம் வந்துள்ளது. அது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டு வருகின்றது. ஐ.நா.வுக்கு எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

“ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய நிலைமையில் கட்டமைப்பு ரீதியான மாற்றம் தேவைப்படுகின்றது. இது செய்யப்பட வேண்டிய விடயமாக உள்ளது.விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இடம் பெறவுள்ளது. இதில் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்கை வெற்றி பெறவைப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே ஆசிய நாடுகள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து விடயங்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்குமா என்பது கேள்விக்குறியாகும்.

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உள்ள சில நாடுகள் வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றன. இது தடுக்கப்படவேண்டும். எனவேஐ.நா.வின் கட்டமைப்பில் மாற்றம் தேவை என்கிறோம். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் அதிகமானவற்றின் ஆதரவு இலங்கைக்கு உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அல்லது வேறு எந்த பிரிவிலும் இலங்கைக்கு எதிராக ஏதாவது யோசனைகள் கொண்டுவரப்பட்டால் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம்.

ஏற்கனவே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டத் தீர்மானத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினால் தோற்கடித்தோம். மேலும் உறுப்பு நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட முடியாது. அவ்வாறு தலையிடுவது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் செயலாகும்” என்று அமைச்சர் ரணவக்க கூறினார்.

http://uyarvu.com/

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு அமைச்சர் அவர்களே...முதுகெலும்பற்ற ....அந்தப் பாவிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள்...அல்லது என்னமும் கொடுக்க வேண்டுமா....சூடு சொரணை அற்றவர்கள் இதையும் செய்வார்கள்...

மேதகு அமைச்சர் அவர்களே...முதுகெலும்பற்ற ....அந்தப் பாவிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள்...அல்லது என்னமும் கொடுக்க வேண்டுமா....சூடு சொரணை அற்றவர்கள் இதையும் செய்வார்கள்...

மேதகு.... என்ற சொல்லுக்கே தகுதையற்ற அமைச்சர் அவர். புத்தர் சொல்லாத கொலையை புரிந்துவரும் இனதுவேசிதான் இந்த சம்பிக்க ரணவக்க.

கருணா நிதி சொல்லவா வேண்டும் நிதியானந்தருடன் அவ்ர் படும் பாடு. சொனியா சொறியா..................என்று சுகமாய் இருந்த மனுசனை இந்த சண் டி வி குழப்பிவிட்டான்,

அது சரி தமிழகம் ஒரு வல்லரசு அதன் முதலமைச்சர் அமேரிக்கா ஜனதிபதிக்கு நிகரானவர் அவர் உங்களுடன் இருப்பது உங்களுக்கு பெருமைதான்

அவரே வடக்கின் முந்தானைக்கு அடிமை அவர் உங்களோடு இருந்தா என்ன இல்லாட்டி என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.