Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஜனநாயகம் இல்லை - ஓய்வு பெற்ற பிரதம நீதி?யரசர்

Featured Replies

இலங்கையில் ஜனநாயகம் இல்லை என ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ விசாரணைக்குட்படுத்துவது சட்டத்திற்கு முரணானது என பல தடவைகள் குறிப்பிடும் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் இலங்கையில் ஜனநாயகம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் ஜனநாயகம் இல்லாமல் போனது எப்போது என்பதை அவர் தெரிவிக்காதது வேதனைக்குரியது.1958களில், 1983களில் தமிழ் மக்களின் குருதியை பேரினவாதம் குடித்துக் கூத்தாடியபோது இலங்கையில் ஜனநாயகம் இல்லாமல் போனதா?

அல்லது 2008ஆம் ஆண்டு வடக்குக்கிழக்கைப் பிரிப்பதாக பிரதம நீதியரசராக இருந்த சரத் என்.சில்வா அவர்கள் தீர்ப்பு வழங்கியபோது, ஜனநாயகம் இல்லாமல் போனதா? அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் விளக்கம்- விசாரணை எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் நாட்டில் ஜனநாயகம் அற்றுப்போனதா?

இதற்கும் மேலாக, வன்னியில் தமிழ் மக்கள் ஐயகோ! என்று அழுது துடித்து தங்கள் உயிரை காப்பாற்ற முடியாமல் மாய்ந்த போது ஜனநாயகம் மாண்டுபோனதா? வன்னிப் போரில் எல்லாவற்றையும் இழந்து உறவுகளையும் பறிகொடுத்து தலைவிரிகோலமாக அடைக்கலம், அடைக்கலம், இறைவா! அடைக்கலம் என்று கண்ணீரில் நனைந்து வந்தவர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்த கொடூரத்தில் ஜனநாயகத்தை நாடு இழந்தா?

இதில் இலங்கையில் ஜனநாயகம் எப்போது இல்லாமல் போனது? ஜனநாயகத்தை இழப்பதற்கு இலங்கையில் அது எப்போதாவது இருந் ததா? மரியாதைக்குரிய ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா அவர்களே! ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசு கைது செய்து இராணுவ முகாமில் தடுத்து வைக்காதவரை, இலங்கையில் ஜனநாயகம் இருந்ததாக நீங்களும் கருதியிருக்கிறீர்கள் அல்லவா?

இப்போது தெரிகிறதா! தமிழ் மக்கள் அன்றே சொன்னார்கள், இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்று. இந்த உண்மையை நீங்கள் பதவியில் இருந்த போது உணர்ந்திருந்தால், வடக்குக்கிழக்கு இணைப்பை பிரியுங்கள் என்ற தீர்ப்பை கால தாமதம் செய்து ஒத்திவைத்திருப்பீர்கள்.

என்ன செய்வது! இந்த நாட்டில் இருக்கக் கூடிய மிகப்பெரிய துரதிர்ஷ்டம் பதவியில் இருக்கும் போது பலர் உண்மையை புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.

http://www.pathivu.com/news/6021/54/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கை பிரிக்கும்போது எங்கு போனது இந்த உண்மை....அந்தவேளையில் நீங்கள் பாவித்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எம்மை எவ்வாறு வேதனை கொள்ள வைத்ததை எந்த தமிழனாலும் மறக்க முடியாது....இப்ப உங்களுக்கு உறைக்கையில் நாம் அமைதியாக அளுகின்றோம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.