Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை?

Book-21.jpg

வளையாபதியின் சிறப்பு;

வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகைபடுத்தி கூறுகிறது..

"சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்

கந்தா மணிமேகலை புனைந்தாந்=நந்தா

வளையாபதி தருவான் வாசவனுக்கு ஈந்தான்

திளையாத குண்டலகேசியாம்"

இதில் சீவக சிந்தாமணி, சிலபாதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றும் முழுதாக கிடைக்கபெற்றுள்ளன. வளையாபதியும் குண்டல கேசியும் முழுமையாக கிடைக்கவில்லை ஆழி பேரலையால் (சுனாமி) அழிந்து போய்விட்டது.. 72 பாடல்களே இப்போது உள்ளன..முழுமையாக கிடைக்காமையால் இப்போது வைத்துள்ள பெயர் வளையாபதி என்பது ஒரு ஊக பெயரே.. வேறும் ஊகத்தை வைத்து கொண்டு மற்ற நூல்களில் அதை பற்றிய குறிப்புகளையும் ஆராய்வதில் எந்த அளவிற்கு உண்மை கிட்டும் என்பதும் கேள்விக்குரியே..

"உலகம் மூன்றுடன் ஒருங்குடன் ஏத்துமாண்

திலகமாய திறல் அறிவான் அடி

வழுவுஇல் நெஞ்சோடு வாலிதின் ஆற்றவும்

தொழுவல் தொல்வினை நீக்குக என்றுயான்"

என்று வரும் கடவுள் வாழ்த்துபாடல் யாப்பருங்கல விருத்தியுரையிலும் காணபடுகிறது..இளம்பூரணர் உரையிலும் காணபடுகிறது ஆனால் அதன் அதன் ஆசிரியரோ அல்லது அதற்கு உரை எழுதிய இளம்பூரணரோ இந்த பாடல் எந்த நூலை சார்ந்தது என்று குறிப்பிடவில்லை.. ஆயினும் தொல்காப்பியத்திற்கு உரை பகன்ற நச்சினார்கினியர் மட்டும் இது வளையாபதியை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்..

வளையாபதி சிறப்பு

வளையாபதி மிகச்சிறந்த காப்பியம் என்பதில் சிறிதும் ஐயத்திற்கு இடமில்லை. காப்பிய இலங்க்கியத்திற்கெற்ப அனைத்து ஒழுங்குகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு சில..

நாட்டு வருணனை பாடல்

"செந்நெல் அம் கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்

கன்னலம் கரும்புதான் கமுகைக் காய்ந்து எழும்

இன்னவை காண்கிலன் என்று புகழும்

முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே"

இல்வாழ்க்கை

" மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்

தக்கது அறிந்தார் தலைக்குணம் என்ப

பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு

துய்த்து கழிப்பது தோற்றம் ஒன்று இன்றே

மற்ற நூல்களின் கருத்துகளை எடுத்தாளும் வளையாபதி

யாகாவா ராயினும் நாகாக்க: காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு

எனும் திருக்குறள்(127) கருத்தினை பின்வரும்

வளையாபதி பாடலில் காண்க.

ஆக்கப் பருக்கும் அருந்தாளைவாய்ப் பெய்விக்கும்

போக்கப் படுக்கும் புலைநரகத்து உய்ப்பிக்கும்

காக்கப் படுவன இந்தியம் ஐந்தனுள்

நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே

கற்பு குறித்து

தெய்வம் தொழாள் கொழுநற் றொழுதுஎழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்ற திருக்குறளின் (55) விரிவாக்கம் வளையாபதியில் காணபடுகிறது.

நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்

பீடுறும் மழை பெய்யெனப் பெய்தலும்

கூடல் ஆற்றுவர் நல்லது கூறுங்கால்

பாடுங்கால் மிகு பத்தினிக்கு ஆவதே

இவ்வாறு திருக்குறளை எடுத்தாலும் பல பாடல்களை வளையாபதியில் காணலாம்

குறுந்தொகையும் வளையாபதியும்

காமம் கொள்ளாமை குறித்து வளையாபதியில் வரும்

மாவென்று உரைத்து மடலேறும் மன்றுதோறும்;

பூவென்று எடுக்கின் இணர் சூடுப;புன்மை கொண்டே

பேயென்று எழுந்து பிற்ர் ஆர்ப்பவும் நிற்ப்; காம

நோய் நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயின் அக்கால்

என்ற பாடல் கீழ் வரும் குறுந்தொகை பாடலுடன் ஒத்துவருவதை காணுங்கள்..

மாஎன மடலும் ஊர்ப: பூ எனக்

குவி முகழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப;

பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே

வளையாபதியும் திருமந்திரமும்

புல்லறிவாண்மை எனும் அதிகாரத்தில் இப்படி ஒரு பாடல் காணபடுகிறது

அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல் ஒக்கும்

முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்

நன்கறி வில்லான் அது அறியாதவற்கு

இன்புறு வீட்டின் நெறி சொல்லு மாறே

இது

குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி

குருடும் குருடும் குழிவீழு மாறே

என்ற திருமந்திர பாடலை நினைவுபடுத்துகிறது அல்லவா?

வளையாபதியும் வைசிய புராணமும்

வைசிய புராணத்தில் வரும் "வைர வாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்" என்னும் பகுதியை அடிப்படையாக கொண்டு ஒரு கதை வழங்கபடுகிறது..

புகார் நகரில் வைசிய மரபில் தோன்றிய நாராயணன் எனும் வைரவியாபாரி 9 கோடி பொன்னுக்கு அதிபதி ஆதலால் அவன் நவகோடி நாராயணன் என அழைக்கபட்டான்; சிவனை வழிபடுபவன்; இரு பெண்களை மணந்தவன்; முதலில் மனைவி வைசிய குலத்தினள் இரண்டாம் மனைவி தாழ்ந்த குலத்தினள்.. ஊர் எதிர்ப்பு காரணமாக 2 மனைவியை தள்ளிவைத்தான். அந்த சமயத்தில் அவள் கருவுற்று இருந்தாள்.பெரும் செல்வம் உடைய நவகோடி நாராயணன் முதல் மனைவியுடனே வாழ்ந்து வரலானான்..

வறுமையால் துன்பமுற்ற இரண்டாம் மனைவி ஊர் ஒதுக்குபுறத்தில் உள்ள காளி கோயிலில் வாழ்ந்து வரலானாள்.தினமும் காளியை மீண்டும் தனது கணவன் கிடைக்க வழிபட்டு வந்தாள். அவளுக்கு பிறந்த மகன் பள்ளியில் படித்துவரலானான் ஒரு நாள் மாணவர்களுக்கிடையான பூசலில் ஒரு மாணவன் தந்தை பெயர் தெரியாதவன் என்று அவனை ஏசினான் அதனால் மனமுடைந்த அவன் தன் தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்று கொள்ளுமாறு வேண்டினான் காளியின் அருளால் இரண்டாவது மனைவியையும் அவனது மகனையும் ஏற்று கொண்டு மீண்டும் நவகோடி நாராயணன் வாழ்ந்து வரலானான்..

இப்படி ஒரு வைசிய புராண கதையை வளையாபதி எனும் காப்பியத்தோடு இணைத்து அதுதான் இது.. இது தான் அது ..என்கின்றனர். அடிப்படையில் வளையாபதி ஒரு சமணக்காப்பியம்.. அக்காப்பிய தலைவன் அருகபெருமானை தவிர வேறுயாரையும் வணங்க மாட்டான்.. ஆனால் வைசிய புராண கதையோ சிவபக்தன் என்று கூறுகிறது.. சமண காப்பியங்களை உற்று நோக்கினால் ஒன்று புலப்படும். அது காப்பிய தலைவனின் துறவினை பற்றி பேசும். இறுதியில் காப்பியத்தலைவன் வீடுபேற்றை அடைவான். ஆனால் வைசிய புராண கதையோ பெரும்பாலன தமிழ் சினிமா போன்று மனைவியுடன் உல்லாசமாக வாழ்ந்தான் என்று முடிகிறது.. இது வைசிய புராண கதையை ஒட்டியதா? அல்லது உண்மையான சமண இலக்கியமான வளையாபதி தானா? தோழர்கள் யாருக்காவது தெரியுமா?

தமிழ் மொழி குறித்த பகுதிகளில் ஒரு பதிவையும் காண இயலவவில்லை..என்பதால் இப்பகுதியில் இணைக்கபடுகிறது.... தூக்கி விடாமல் இருந்தால் நன்று....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.