Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை

இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும்.

1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள்

2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள்

3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள்

4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள்.

5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள்

6. ஈழத்தமிழர் வரலாறே முழுமையாகத் தெரிந்தவர்கள்

7. கருணாவைச் சிறைபிடித்து பின் விடுதலை செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்கள்

இப்படி இவர்களின் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் திடீர் திருப்பமாக மேற்;கூறப்பட்ட அறிவிப்பு எதற்கும் சம்பந்தம் இல்லாதவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகவும் ஈழமாகவும் ஆணித்தரமாகவும் சிந்தித்து செயலாற்றவேண்டும்.

புலிகளுக்கான தடை அகற்றப்படவில்லை. எப்படிப் புலிகள் சரணடையமுடியும்? அப்படிச்சரணடைந்தால் அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்படி தான் சிறையில் அடைக்கப்படும்.

இந்த அறிவிப்பானது எஞ்சியுள்ள புலிகளைக் கூண்டில் அடைக்க ஒரு தந்திரமான சதியாகவும் இருக்கலாம் அல்லவா?

சர்வதேசம் புலிகள் என்ற விடயத்தில் ஓர் அணியாகத்தான் இன்றும் இருக்கின்றனர் என்பதைத் தமிழ்மக்கள் யாவரும் மறந்துவிடக்கூடாது.

ஒரு பக்கம் எதிர்பபும் மறுபக்கம் அணைப்பும், இன்னொரு பக்கம் ஆதரவுமாக சர்வதேசம் தமிழ்மக்களைப் பலவழிகளில் பொறி வைக்கின்றது.

உதாரணமாக தமிழர்களின் உரிமைப்போராட்டம் என வர்ணித்த ஜேர்மனி புலி உறுப்பினர்களைக் கைது செய்தது யாவரும் அறிந்த விடயம்.

எனவே இந்த அறிவிப்பில் ஏதோ ஒரு பாசாங்குத்தன்மை ஒளிந்திருக்கின்றது. இவற்றைத்தமிழ்மக்கள் சரியா எடைபோடவேண்டும்.

சில புலி உறுப்பினர்கள் தஞ்சம் அடைந்தால் அவர்கள் மூலமாக புலிகளின் தற்கால செயற்பாடுகளையும், யுக்திகளையும் உள்ளடிவாறுகளையும் அறியலாம் என்ற உள்நோக்கங்களும் இருக்கலாம்.

இந்த அறிவிப்பானது ஒரு பொறியாக இருக்கலாம். புலிகள் உறுப்பினர்கள் ஏன் இங்கு வந்து அகதி கோரவேண்டும்?

எச்சரிக்கை மிகவும் தேவையான நேரமிது.

சிலர் சிரிப்பது போலே சிரிப்பார். சிலர் அழுவது போலே அழுவார். எது உண்மை எது பொய் ஆராய்வது தமிழர் கடமை. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுதிச்சுதாம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் MI5 என்ற பிரித்தானிய உளவு நிறுவனம் செய்திருந்த விளம்பரம் ஒன்றில் பகிரங்கமாக தமிழ் தெரிந்த உளவாளிகளுக்கு விண்ணப்பம் கோரி இருந்தது. இது பிரித்தானியா தமிழர்களுக்குள் எந்தளவு ஆழ ஊடுருவி இருக்க விரும்புகிறது என்பதைக் காட்டி நிற்கிறது.

அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் மேற்குலகின் கவனத்துக்குள் அத்துணை பெரிதாகப் படவில்லை. ஆனால் அமெரிக்காவின் கவனம் இருந்து கொண்டே இருந்தது. 1987 கரும்புலித் தாக்குதல் மற்றும் இந்தியத் தலையீடும் மேற்குலகின் கண்களை அகல விரித்துக் கொண்டதோடு புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கையும் மேற்கு நாடுகளில் கணிசமாக அதிகரித்து விட்டிருக்கிறது .

இந்த நிலையில் புலிகளை அடையாளம் காணவும்.. தமிழர்களின் நடவடிக்கைகளை மிக கூர்ந்து கவனிக்கவும் மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. ஏனெனில் இன்று மேற்குலகிற்கு சவாலாக இருக்கும் தற்கால வடிவிலான தற்கொலை தாக்குதல்களை திறம்பட திட்டமிட்டு உருவாக்கியவர்கள் புலிகள். அவர்களின் மீளெளுகை என்பது சிறீலங்கா இந்தியாவிற்கு மட்டுமல்ல.. மேற்குலகின் கணக்குகளிற்கும் பாதிப்பை உண்டு பண்ணலாம் என்ற பயம் அவர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் புலிகளை ஆசை காட்டி அடக்குதல். அடையாளம் கண்டு கொள்ளுதல். வன்முறையால் அழித்தல். சிறையில் பூட்டி வைத்தல் என்று பல்வேறு அடக்குமுறைகள் மூலமும் இல்லாது அழித்துவிடவே மேற்குலகமும் விரும்புகிறது. அதன் பின்னணிதான் இவை எல்லாம். பயங்கரவாத முலாம் புலிகள் மீது பூசப்பட்டதும் இந்தப் பின்னணியில் தான்.

ஆனால் நாமோ இன்னும் மேற்குலகம் மனிதாபிமானத்தை கட்டிக்காக்கிறது என்று போலியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் மனிதாபிமான உச்சரிப்பை கொண்டு மக்களின் மனம் உணராத வண்ணம் அவர்களை அடக்குமுறை செய்து கொண்டிருக்கிறார்கள். சிங்களவன் நேரடியாக வன்முறை கலந்து செய்வதை.. இவர்கள் மனிதாபிமானம் என்பதன் பெயரால் மென்முறையில் செய்கின்றனர். அவ்வளவும் தான் வித்தியாசம். :unsure:

Edited by nedukkalapoovan

புலிகளைப் பிடிக்க இப்படியும் ஒரு வலையா ?

அங்கு தஞ்சம் கேட்பவர்கள், தாங்கள் புலிகள் என்று அறிவித்து கேட்குமளவுக்கு விவேகமற்றவர்களாக இருக்கமாட்டார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டம்மான தேடிமாம்....இங்கின எங்கயோ செய்தில வாசிச்சன்.

அதின்ட தெடர்சியோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.