Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை முயற்சி

Featured Replies

அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்

படத்தை ரசித்து பார்த்த

அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமாக கூறிய வச னத்தை

திரும்ப திரும்ப தனக்காக கூறியது போல் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தான்.திரையில் வேறு காட்சியும் ஓடியும் அவனுக்கு அந்த காட்சியும் வசனமும் தான் தொடர்ச்சியாக ஓடி கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் இருந்த நண்பனுக்கு ஆச்சரியம்..அழுவதுக்கு ஒன்றுமில்லை அப்படி அழுவதென்றாலும் ஏன் இந்த படத்துக்கு வந்தோமோ என என்று நினைத்து அழத்தான் ஒன்று இருக்கிறது ..உன்னையும் அவனுக்கு பிறந்த உன் பிள்ளையையும் ஏற்று கொள்ளுகிறேன் என்னுடன் வந்துவிடு...என்ற வசனம் வந்த இடத்திலிருந்து அவன் மோகன் அழுது கொண்டிருக்கிறான் என்பது அவனுடன் வந்தவனுக்கு தெரியாது மட்டுமல்ல . அந்த வசனம் வந்ததே தெரியாத மாதிரி தான் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்

..

கடல் நோக்கி ஓடும் ஆறு மாதிரி கன்னங்களில்இரு பக்கங்களிலும் கண்களிலிருந்து ஒழுகும் கண்ணீர் தங்கு தடையின்றி ஒழுகி கொண்டிருந்தது.அந்த வழியும் கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பி இதை தான் அவளிடம் கேட்டேன் என்று அவளிடம் யாசித்ததை பொருத்தி இவனிடம் ஒப்புக்கொடுத்தான்.அவனின் நண்பன் அவனின் அந்தரங்கங்களை நன்கு அறிந்தவன் ,,அதையும் மீறி அதையெல்லாம் அசிங்கங்களாக நம்புகிறவன் கூட ..அதனால் அவர்களிடேயே அடிக்கடி விவாதம் நடைபெறும் ....அதனூடாக நட்பு என்ற போர்வையில் அவர் அவர்களின் தனித்தன்மை அழிக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதுண்டு ..அதே போல் இப்பொழுதும் அப்படி ஒரு தர்க்கம் தொடங்கி விட்டது .படம் முடிந்ததது என்று தெரியாமால் விவாதத்தினூடாக நடக்கிறார்கள் வெளியேறுகிறார்கள் .ஆத்திரபடுகிறார்கள் பரிதாபப்படுகிறார்கள் ..படம் பார்க்க வந்தவர்கள் மூணு மணி நேரம் போனது முப்பது மணி நேரம் போனது மாதிரியான உணர்வுட ன் வெளியேறுகிறார்கள். வெளியே வெப்பம் தகித்து மதியத்தை கொதி தண்ணியாக்கி அத்தெருவில் போகிற வருகிறவர்களை குதிக் காலில் நடக்க வைத்து பரத நாட்டிய கலையை உருவாக்கி கலை சேவை செய்து கொண்டிருந்தது. இந்த எந்த பிரச்சனை எதுமின்றி அவர்களின் பிரச்சனையே மையமாகி உரத்த குரலில் தர்க்கம் செய்து கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.பஸ் நிலையம் வந்தது கூட தெரியாமால் பஸ்ஸில் ஏறுகி றார்கள்

.

உள்ளுக்குள் அழுது பொருமி உருகி குமைந்து கொண்டிருந்த மோகனின் உணர்வுகளை .இந்த பஸ் கூட தாங்கமாட்டாமாலோ என்னவோ முக்கி முனகி தான் நகர்ந்து கொண்டிருந்தது. திருவிழாவில் காணமால் போன குழந்தை மாதிரி அவனது மனதும் தனித்துவிட அங்கும் இங்கும் தாவியது. .நண்பன் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றது கூட தெரியாமால் மனது எதிரும் புதிருமாக நின்று யுத்தம் செய்து கொண்டு இருந்தது. தீடிரேன்று ஏதோ முடிவு வந்து விட்ட மாதிரியும முகத்தில் அப்ப அப்ப இடைக்கிடை சில ரேகைகள் வந்து மின்னல் வேகத்தில் வந்து மறைந்து கொண்டிருந்தன. முடிவை நிறை வற்ற நினைக்கும் மனதின் வேகத்துக்கு பஸ்ஸின் வேகம் ஈடு கொடுக்காததை நினைத்து இப்ப ஒரு புதிய வேதனையுடன் அவனது முகம் தவித்து கொண்டிருந்தது.

ஆளை மயக்கும் கவர்ச்சிகரமானவாக இருந்தாலும் இயல்பாகவே கூச்சம் சுபாவம் உடையவன், அவனோட்டை பொடியன்களிலும் வித்தியாசமாகவே இருந்தான் .உணர்வு தரும் இலக்கணங்களையெல்லாம் இலக்கியமாக்கி கொள்ளுபவன் . அவனும் கவிதை என்ற பெயரில் ஏதோ ஏதோ எல்லாம் கற்பனை பண்ணி கிறுக்கி வைப்பான். கவிஞர்கள் வர்ணிக்கும் வர்ணணை கற்பனைகளை எல்லாம் நிஜம் என கற்பனை பண்ணி கொண்டிருந்தான் ..அது போலவே காதலையும்...அதையும் மனதில் விக்கிரகபடுத்தி ஆலோபனை செய்து பூஜை செய்து தெய்வீகபடுத்தி வைத்திருந்தான் கனகாலமாக..இவன் மேல் மன்மத கணைகளை எறிந்த அவனுக்கு ஒத்த பெண்களை கூட அலட்சி படுத்தியே இருந்தான் . ஏனோ தெரியவில்லை...அவனுக்கு அவனிலும் பார்க்க வயதுக்கூடிய பெண்களை பார்க்கும் போது மனதில் பூ பூக்கும் ...அதை கூட நேரிடையாக கூட பார்க்க முடியாத கோழையாக இருந்தான்.

அவன் பாடசாலையை விட்டே நாள்கள் மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன..பொதுவாக மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் சோம்பலை கொன்று தூக்கத்திலிருந்து எழும்பி வீதியில் சென்று பல காலமாகி விட்டது. அதனால் அவனது மூன்று வீடு தள்ளி புதிதாக வாடகைக்கு கூடியேறிய அவளை காண அவனுக்கு காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பள்ளி செல்லும் நேரத்தில் அவள் வீட்டுக்கு முன் நிற்பாள் தனது மகனை பள்ளிக்கு அனுப்பு நோக்குடன்.அவளது கணவன் திருமணம் செய்து சுகத்தை அறிமுக படுத்திவிட்டு மிகுதி சுகத்தை கடிதம் மூலம் வெளிநாடு ஒன்றிலிருந்து கொடுத்து கொண்டிருந்தான் .அவளின் அழகான விழிகளில் பொய்யான சுக அனுபவிப்பு தெரிந்து கொண்டு இருக்கும்....அவளது இளமையின் உணர்வுகளை கொல்லும் இந்த சமூக கோட்பாடு கவசகங்ளுடன் காலத்தையும் துரத்தி கொண்டு இருந்தாள்.....

அன்று ஒரு நாள் பள்ளி செல்லும் நேரம் சைக்கிளில் செல்லும் போது அவளது மகனை ஏற்றி செல்ல கேட்ட பொழுதிலிருந்து அவனுக்கு அவளின் அறிமுகம் கிடைத்தது...இயல்பாக பழகுவது மாதிரி பழகினாலும் இரண்டு பேரும் வெவ்வேறு தளத்தில் நின்று வெவ்வேறு கோணத்தில் அணுகி கொண்டிருந்தனர்.அவனோ காரணம் தெரியாமேலே இவள் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு இவ்வளவு காலமாக பூட்டி வைத்த விக்கிரகத்துக்கு ஆராதனை செய்து காதல் என்று பெயரிட்டு திருவிழா கொண்டாடி கொண்டிருந்தான். அவளோ தனது தனிமையை போக்க குற்ற உணர்வு என்ற வெடி குண்டை கட்டி கொண்டு இவன் மூலம் இனிமையாக்க முயன்று கொண்டிருந்தாள்.

கடிதத்தில் இவ்வளவு காலமும் சுகம் அனுப்பிய அவளின் கணவன் நெடுகவும் வெளிநாட்டில் திரவியம் தேடி கொண்டிருக்க முடியமா ...நாடு திரும்ப போகும் செய்தி வந்தது. அவள் அவன் தன்னிடம் விலகி நிற்குமாறு கேட்ட பொழுது நடந்த உரையாடலின் போது தான் .....அந்த திரை பட உரையாடல் போன்ற தொனியில் இவன் அவளை பார்த்து கேட்டிருக்கிறான் ...அப்போது தான் அவனது வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அவன் கட்டிய காதல் கோட்டையை பற்றி தெரிந்தது ...அவன் அவளை வெறுக்க வேணும் என்பற்க்காக ...அப்படியொரு தொனியில் அந்த கடைசி சந்திப்பில் பேசியிருக்கிறாள்....அப்பிடியொரு இழி பேச்சை வாழ் நாளில் அவன் கேட்டிருக்க மாட்டான்.

அவன் தனது வாழ்நாளை முடிக்கும் நோக்குடன் பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டிருந்தான். அந்த பஸ்ஸும் அவனுக்கு யமலோக அழைப்பாணையை கொடுத்து விட்டு சோகத்துடன் செல்லுவது போல் அவனை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது தான் தொலைக்காட்சி அறிமுகமான காலம் . அதுவும் சில வீடுகளில் தான் இருக்கும் அந்த வீடுகளும் பனை உயர அன்ரனாக்களை கட்டி தொலைக்காட்சி இருப்பதை பறைசாற்றி கொண்டிருக்கும்....அவளது வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி .அவ்வூர் அரைவாசி சனங்களும் அங்கு பிரச்சனம் .அது போல அவனது வீட்டிலும் யாருமில்லை .அவனது முடிவுக்கு அனுக்கூலமானது..விட்டத்தில் விவாசய பயன்பாட்டுக்காக தொங்கி கொண்டிருந்த பொலிடோல் என்ற நச்சு திரவாகத்தை தன்னை அழிக்க பயன் படுத்தி கொண்டான் அவளது வீட்டில் கும்மாளமும் குதுகாலமும் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இங்கு அவன் அரை குறை உயிரில் துடித்து கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரி கட்டில் துடித்து கொண்டிருக்கிறான் .இப்பொழுது உயிர் தப்ப வேணும் என்று துடித்து கொண்டிருக்கிறான்.. கடைசி நேர உயிர் ஆசையில் தன்னை எப்படியும் காப்பற்றும் படி டாக்டர் நர்ஸ் பார்த்து கெஞ்சி கொண்டிருக்கிறான்...பொலிசார் சூழ இன்னுமொரு தற்கொலை முயற்சி செய்த பொடியனை கொண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த பொடியனோ டாக்டரிடமும் இரகசியமாக கூறுகிறான் தன்னை இறக்க விடும்படி ....என்னவோ தெரியாது அந்த அரசியல் பொடியன் இறந்து விட்டான் இவன் மோகன் எப்படியோ என்னவோ தெரியாது தப்பி விட்டான்.

காற்று வாக்கில் அவளிடம் செய்தி மாறி போனது ....தற்கொலை செய்ய முயற்சி செய்த பொடியன் இறந்து விட்டான் என்று .மோகன் தான் இறந்து விட்டான் என்று தனது குற்ற உணர்வு டன் அவளும் ஒரு தற்கொலை முயற்ச்சி எண்ணத்துடன் அதற்க்கான ஆயத்தங்களை செய்யும் போது ...பாடசாலை சென்று திரும்பிய மகனின் அம்மா என்று விளிக்கும் குரல் கேட்கிறது..அதே நேரம் பின்புலத்தில் இவ்வளவு நடந்து இருக்கு என்று எதுவும் தெரியாத அவளது கணவன் சந்தையிலிருந்து திரும்பி வந்து அவளை வாஞ்சையுடன் கூப்பிடும் குரலும் கேட்கிறது.

தூங்கி சாவதுக்கு சுருக்கு கயிறுடன் நிற்கும் அவள் தூங்குவாளா இல்லையா என்பது இந்த கணம் மாறி அடுத்த கணம் வரும் போது தெரியும்.

http://mithuvin.blogspot.com/2010/03/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொன்ன விதம் அழகு.கதையின் கரு பற்றி கருத்து சொல்ல முடியவில்லை.

  • தொடங்கியவர்

கதை சொன்ன விதம் அழகு.கதையின் கரு பற்றி கருத்து சொல்ல முடியவில்லை.

கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றி சகீவன்

Edited by நாகேஷ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.