Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

UNHCR மீழ் குடியேறுவோருக்கு வழங்கும் பணத்தினை நிறுத்தியுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே

Featured Replies

UNHCR மீழ் குடியேறுவோருக்கு வழங்கும் பணத்தினை நிறுத்தியுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே

வவுனியா நிருபர்

வியாழக்கிழமை, மார்ச் 25, 2010

UNHCR

மீழ் குடியேறும் மக்களிற்கு என வழங்கப்படும்10,000 பணம் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. இனி 10 தகரம் மட்டுமே மீழ் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

வழமையாக மீழ் குடியேறும் மக்களிற்கு 10 தகரங்களும் 10,000 பணமும் வழங்கப்பட்டு வந்தது. இதில் தகரம் இந்தியா வழங்கியது, 10,000 பணம் யூ என் எச் சி ஆர் இனால் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கும் உதவி வழங்கும் அமைப்புக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமையினால் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் நிவாரணதிட்டங்களை செய்ய முடியாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது அரசாங்கம் வெளி நாட்டு உதவிகளை தமக்கே தரவேண்டும் என கூறுகின்றது. கூடவே அரச திணைக்களங்களும், பெரும்பான்மை இன நிறுவனங்களுக்குமே செயற்படு நிறுவனங்களாக இருக்கவேண்டும் என சட்டம் போட்டும் இருக்கின்றது. இதனால் உதவி வழங்கும் நாடுகள் வெளிப்படை தன்மை இன்மையால் உதவிகளை நிறுத்த முடிவு செய்து வருகின்றன. கடந்த மாதம் இடம்பெற்ற ISAC கூட்டத்திலும் கூட பசில் இராஜபக்‌ஷ இனிமேல் அரசாங்கமே எல்லாவற்றையும் பார்க்கும் கடுமையாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.eelanatham.net/story/unhcr-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-10-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87

  • தொடங்கியவர்

இடம்பெயர்ந்தோர் நிதியுதவி இடைநிறுத்தம்

இலங்கையில் யுத்தம் காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறும்போது, அவர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டு வந்த ஆரம்ப நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

மோதல்களால் அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்கு திரும்பும் குடும்பங்கள் தமக்குரிய இருப்பிட வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் ஆரம்ப நிதியுதவியாக வழங்கப்பட்டுவந்தது.

மோசமான நிதிப்பற்றாக்குறையே காரணம்

“தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிதிப் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் அதிகாரியாகிய சுலக்ஷனி பெரேரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

“ஏற்கனவே தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென மார்ச் மாதம் இறுதிவரையில் வழங்குவதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இதனை பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்” என அவர் கூறினார்.

மீளக்குடியமர்பவர்களுக்கு உதவுவதற்காக 2010 ஆம் ஆண்டிற்கென மொத்தத்தில் 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அடுத்தடுத்த மாதங்களில் தங்களுக்கு இந்தப் பணம் வந்து சேராமல்போனால், மீளக்குடியமர்வதற்காக இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காமல் போகக்கூடும் என்ற அச்சத்தையும் சுலக்ஷனி பெரேரா வெளியிட்டார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார வாழ்க்கை முழுமையாக அழிந்து போயுள்ள நிலையில் அவர்களுக்கு இந்த நிதியுதவி மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

இந்த ஆரம்ப நிதியுதவியில் தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் உடைகள், பாய்கள், நுளம்பு வலைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், காடுகளை அழித்து சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் போன்றவைகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டைக் கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் சுலக்ஷனி பெரேரா குறிப்பிட்டார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/03/100326_unhcrfunding.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.