Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அளவெட்டியில் ஒரு மூதாட்டி கழுத்து வெட்டி கொலை

Featured Replies

யாழ் அளவெட்டியில் ஒரு மூதாட்டி கழுத்து வெட்டி கொலை,புலிகள் இல்லாததை தற்போது உணர ஆரம்பித்துள்ள ஈழமாக்கள்

யாழ்மாவட்டம் அளவெட்டி பகுதியில் வீட்டில் தனித்து இருந்த மூதாட்டி ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் கடந்த திங்கட்கிழமை அன்று இடம்பெற்றபோதும் நேற்றே இவர் கொலை செய்யப்பட்டு இருந்ததை மக்கள் கண்டுள்ளனர்.

ஈழத்தில் தற்போது பல கொலைகள் கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதோடு 1986க்கு முன்பு நடந்தது போல் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் புலிகளை ஆதரிக்காமல் இருந்து வந்த பலர் தற்போது புலிகளின் தேவையை உணர்ந்துள்ளதை அவர்களே பலரிடம் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=2940:2010-03-30-19-36-23&catid=1:aktuelle-nachrichten&Itemid=18

கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

அளவெட்டியில் இனந்தெரியாத நபர்களினால் மூதாட்டி ஒருவர் படுகொலை

[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 06:06.41 PM GMT +05:30 ]

யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தி அளவெட்டி பகுதியில் தனித்திருந்த மூதாட்டி ஒருவர் இனந்தெரியாதோரால், கொலை செய்யப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

கொலையுண்டவர் பொன்னுத்துரை பகவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் சம்பவம் நேற்று பகல் தெரியவந்த நிலையில் சடலம் நேற்று மாலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மூதாட்டி கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே கொலை செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களும் சிதறிக்கிடந்ததாக தெரிவிக்கப்படடுள்ளது.

- தமிழ் வின் -

--------------------------------------------------------------------------------

மார் 30, 2010

வலிகாமத்தில் முதிய பெண்மணி கத்தியால் குத்திக்கொலை

யாழ்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய

Category: செய்தி

Posted by: vaheesan

யாழ்பாணம் வலிகாமம் அளவெட்டி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு வயோதிப பெண்மணி வதியும் வீட்டினுள் புகுந்த இனம்தெரியாத நபர்கள் அவரை கழுத்திலும் மார்பிலும் கூரிய பொருட்களினாள் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கொல்லப்பட்டவர் 77 அகவையுடைய பொன்னுத்துரை பகவதி எனத்தெரியவருகிறது. இவரை செவ்வாய் காலை காணததால் இவரது அயலவர்கள் தேடி சென்றபோது இவர் இறந்து கிடந்ததாகவும் இவரது கொலைக்கான காரணம் திருட்டு எனவும் அறியமுடிகிறது.

யாழில் தற்போது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை யாழில் பெருமளவு வயோதிபர்கள் தனிமையில் வாழ்வதாகவும் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் யுத்தம் காரணமாக அவர்களது பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

- பதிவு -

ஒரு 77 வயது மூதாட்டி, வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து வருபவரை, அவரின் இறுதிக்காலத்தில் பணத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு கேவலமாகி போய்விட்டது தமிழன் நிலைமை. கொள்ளை அடிப்பதென்றால் அடித்துக்கொண்டு போவதை விட்டு, விட்டு....... கத்தியால் குத்தி அநியாயமாக ஒரு உயிரை ஏன் பறிக்கின்றார்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.