Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

Featured Replies

தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்

செட்டிகுளம் முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் இலங்கைப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலினைத் தாங்கமுடியாத மக்கள் தப்பி ஓடியுள்ளனர். மக்கள் ஓடும்போது அவர்களைப் பார்த்து நடைபெற்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்திருக்கின்றீர்கள். எனவே அவர்களிடமே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கத்தியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலும் தண்ணீர், உணவு, மருந்து உட்பட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த படை அதிகாரி காட்டுமிராண்டித்தனமாகக் கத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலப்பகுதி கடும் வெப்பமான காலப்பகுதி என்பதாலும் அங்கு இலட்சக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதாலும் குடிநீருக்கு கடந்த பல மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் உழைத்தே வாழ்ந்து வந்தோம். எங்களுக்கான நிலத்தில் நாங்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் நாங்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் கையேந்தி யாரிடமும் அடி உதை வேண்டிய தேவை எமக்கில்லை. எங்களை இப்போதே எங்களது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நாங்கள் உடனடியாகவே வெளியேறுவோம் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=30252

மன்னாரிலை வெற்றி கொண்டாட்டம் செய்பவர்களுக்கு உது தெரியும்.?

வெண்டாச்சு. தேர்தலில் வெற்றி விழா. பின்னர் கொழும்பு 6 மாதம் இந்தியா 6 மாதம். வேறென்ன கவலை.

சிங்கள ராணுவம் வீட்டுக்கு போகலாம். தமிழ் கூட்டமைப்பு அவர்களை பார்த்துக் கொள்ளட்டும்.

வெண்டாச்சு. தேர்தலில் வெற்றி விழா. பின்னர் கொழும்பு 6 மாதம் இந்தியா 6 மாதம். வேறென்ன கவலை.

கடத்தல் தொழில் செய்தவர்கள் அதையும் தொடரலாம்.

கடத்தல் தொழில் செய்தவர்கள் அதையும் தொடரலாம்.

சைக்கிள் ஓட்டிய தமிழர்கள் எங்கே....

  • தொடங்கியவர்

சைக்கிள் ஓட்டிய தமிழர்கள் எங்கே....

மக்கள் முகாமுக்கை இருக்கும் போது வீட்டுக்கை இருந்தவை இப்ப மகிந்தவுடன் கூட்டுக்கு தயாராம்... அமைச்சு பொருப்பு பெறுவதில் அக்கறையோ...??

சைக்கிள் ஓட்டிய தமிழர்கள் எங்கே....

டக்ளசை விட கேவலமான இந்திய அடிவருடி சம்பந்தன் எங்கே?

கூட்டமைப்பு தமிழர் நலனில் அக்கரையற்றது என்பதையும், சம்பந்தன் இந்திய தூதரக துணையுடன் மகிந்த காலில் விழுந்து மீள்வாக்களிப்பு கேட்டதையும் தெரிந்த சிங்கள ராணுவம் முகாமில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கூட்டமைப்பு தமிழர் நலனில் அக்கரையற்றது என்பதையும், சம்பந்தன் இந்திய தூதரக துணையுடன் மகிந்த காலில் விழுந்து மீள்வாக்களிப்பு கேட்டதையும் தெரிந்த சிங்கள ராணுவம் முகாமில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட..சண்டைக்காரன் காலிலாவது விழுந்து ....நம் உறவுகளை மீட்கட்டும் அந்த கொடிய வாழ்கையிலிருந்து...தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்....

  • தொடங்கியவர்

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட..சண்டைக்காரன் காலிலாவது விழுந்து ....நம் உறவுகளை மீட்கட்டும் அந்த கொடிய வாழ்கையிலிருந்து...தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்....

அப்ப இவ்வளவுகாலமும் ஏன் விழாமல் இருந்தவை... அமைச்சு பொறுப்பு ஒருவருடம் வகிக்க வேண்டி இருக்கும்,.. குறைத்தமிழரை வைத்து சில ஆசனங்களை பெற்று முழுமையாக ஒரு 5 வருசம் அமைச்சிலை இருப்பம் எண்டோ...?

எனக்கு விளங்குது கடந்த ஒருவருடமாக முகாமுக்க இருந்த சனத்தை பாக்க கூட போகாதவை இப்ப மகிந்தவுக்கு ஆதரவு குடுத்து மீட்க்க போகினம் எண்டது எப்பிடி எண்டு..

Edited by தயா

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட..சண்டைக்காரன் காலிலாவது விழுந்து ....நம் உறவுகளை மீட்கட்டும் அந்த கொடிய வாழ்கையிலிருந்து...தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்....

அது தான் சம்பந்தன் இவ்வளவு காலமும் முகாம் மக்களை, விடுவிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவில்லை?

அது தான் சம்பந்தன் இவ்வளவு காலமும் முகாம் மக்களை, விடுவிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவில்லை?

பார்க்க போவதற்கு இராணுவம் அனுமதி தரவேண்டும் ஐயா?? பல முறை முயற்சி செய்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க போவதற்கு இராணுவம் அனுமதி தரவேண்டும் ஐயா?? பல முறை முயற்சி செய்தார்...

முயற்சிகள் தோற்றபோது ஐ.நா.விடம் அல்லது பிறநாட்டுத் தூதரகங்களில் முறையிட்டவர் என்றும் சொல்லுங்கோ..

  • தொடங்கியவர்

முயற்சிகள் தோற்றபோது ஐ.நா.விடம் அல்லது பிறநாட்டுத் தூதரகங்களில் முறையிட்டவர் என்றும் சொல்லுங்கோ..

ஆனால் கனடா, அமெரிக்கா, பிரித்தானியா எண்டு போய் இதைத்தானே செய்தவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.