Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம், தமிழ் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழர்கள் திருப்தியடையும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமையான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலியுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங்களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக்க முனையும் வெளியுலக வலைப்பின்னலில் தமிழ்க் கட்சிகளை சிக்க வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறித்த கொள்கைக்கு மாறான செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பது, நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக ஆராயும் பொழுது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகப் பலரும் பேசிக் கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனக் கொள்வதற்கு இடமில்லை.

உலக நாடுகளிடையே தற்காலத்தில் காணப்படும் மனித சமுதாயத்தின் உரிமை மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய ஆட்சி, மொழி, சமயம், அரசியல், பிராந்தியம் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற தற்கால போக்கிற்கு அமைய சர்வதேசங்களின் அழுத்தங்களினாலேயே ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு தன்னாட்சி அமைய வேண்டும் என்ற நிலை இருந்து வருகின்றது.

இந்த வகையில்

இலங்கை நாடு இந்தியப் பிராந்தியத்திலிருந்து பிரிந்த பகுதி, இந்தியாவில் இருந்து வந்தவர்களே இலங்கை மக்கள் என்கின்ற தன்மையில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட இந்திய நாட்டுக்கு முதல் உரிமையுண்டு.

அதேபோல சங்கிலியன் ஆட்சியைப் பறித்த போர்த்துக்கல், ஒல்லாந்து, ஆங்கில நாடு ஆகியவர்களுக்கும் இலங்கையின் இறைமையைப் பாதிக்காத வகையில் தலையீடு செய்து பிணக்கைத் தீர்த்து வைக்க உரிமையுண்டு.

தமிழரது ஆட்சியை 1947 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு மூலம் பிரித்தானிய ஆட்சியாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி உரிமையை வழங்கிய அப்பாதுகாப்பு ஏற்பாடுகள் 1972ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பால் நீக்கப்பட்ட உத்தரவாதம் மீறப்பட்டு குறித்த 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பால் பெரும்பான்மை இனத்திற்கு மட்டும் சிறப்புரிமை வழங்கியமை மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பால் சிங்கள மொழி அரச மொழி என உறுதிபடக் கூறி தமிழ் மொழியும் அரச நிர்வாக மொழியாக அமையும்.

ஆனால் அதற்கான சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் என கண்துடைப்பிற்கான வாசகம் காட்டப்பட்டு அதற்கான சட்டங்களை ஆக்காது தவிர்க்கும் அதே நேரம் தமிழர்கள் விடயத்தில் மென்மைப் போக்கு கடைப்பிடிப்பதாக உலகிற்குக் காட்டி வருவதை மனிதாபிமான தன்மை யில் தட்டிக் கேட்பதற்கும் பிரச்சினையில் தலையிடவும் மேற்குறித்த நாடுகளுக்கு உரிமை கிடைக்கிறது எனலாம்.

தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது. அபிவிருத்தி என்பது எக்காலத்திலும் மேற்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அனுபவித்து வந்த தமிழர் தாயகம்,தமிழ்த் தேசியத்தை இழந்தால் அப்பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொண்டாலும் கூட உரிமைப் பாதிப்பால் அங்கு அபிவிருத்தியை அனுபவிக்க முடியாமல் வேதனை நிறைந்த வாழ்க்கையாகத்தான் தமிழர்களுடைய வாழ்க்கை அமையலாம்.

அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் இலங்கை முழுவதும் இருந்து பெறும்வரிகள், வெளிநாட்டு உதவிகள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் அதே வேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொண்டு ஓரம்காட்டாது சமநிலையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. எனவே வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்காகப் பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கு சிறுபான்மையோரின் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சி துணைபோக வேண்டும் என்பது காரணமாக அமையமாட்டாது. இலங்கை நாட்டின் பாகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் அமைவதால் அதற்குரிய அபிவிருத்தியை அரசு புரிய வேண்டிய கட்டாயநிலை இருப்பதால் அபிவிருத்திக்காக அரசுடன் நிற்க வேண்டியுள்ளதென அரசுக்கு மறைமுகமாக உதவி நிற்பது அரசையும் அதேவேளை தன் இனத்தையும் ஏமாற்றும் மாபெரும் துரோகமான செயலாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர், தாயகம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வை மழுங்கடிக்கும் நோக்கத்துக்கு மானமுள்ள எத்தமிழனும் துணைபோக மாட்டார்கள் என்பதே தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வாக அமையுமென்பதில் இருவேறுபட்ட கருத்து இருக்க முடியாது.

தற்பொழுது எதிர்நோக்கும் நாட்டின் அபிவிருத்தியா? தேசியமா ? என்ற போட்டியில் அபிவிருத்தி அணி வெற்றியீட்டின் தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் மேலைத்தேய நாடுகளும், இந்திய மாநிலமும் உறங்கிவிடும். அதன் பின் தமிழ்த் தாயகம்,தேசியம் மழுங்கடிக்கப்பட்டு விடும். தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழ்த் தாயகம் ,தேசியம் சார்பான அணி வடக்கிலும் கிழக்கிலும் வெற்றிபெறுமாயின் தமிழ னுக்கு ஒரே இலங்கைக்குள் ஆனால் தன்னைத்தான் ஆளும் கௌரவமான பூரண அதிகார ஆட்சி அமைவதற்கு வெளிநாடு களின் அழுத்தம் அமைய சாத்தியமுண்டு என்பதுடன் அபிவிருத்தியும் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதில் இருவேறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

இலங்கையில் இரு தேசியங்கள் இருதாயகங்கள் இவை இரண்டும் ஒரே நாட்டுக்குள் இணைந்த அலகுகளாக ஒரு இலங்கைக்குள் யாப்பு ரீதியாக அரசியல் தீர்வு அமைவதன் மூலமே நீண்ட, நிரந்தர அமைதியான தீர்வு அமைய முடியும். எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவே இதற்குப் பதிலாக அமையப் போகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dEgmU0ecAA0W4a4dd4Kcd3cYJ2dc2Coc2b424OS2e220Mq20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.