Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கையில் உறுதியும் புலமையும் உள்ளவர்களை நாடு கடந்த அரசிற்குத் தெரிவு செய்யுங்கள் - ஈழவேந்தன்

Featured Replies

மே மாதம் 2ம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கொள்கையில் உறுதியுடன் செயற்படக் கூடியவர்களையும் அரசியற் புலமையுள்ளவர்களையும் தெரிவு செய்யும்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் போட்டியிடுபவருமான ஈழவேந்தன் தெரிவித்திருக்கிறார்.

ஈழம் வெப் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் அச்சத்துடனும் உலக நாடுகள் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தலின் வெற்றி என்பது புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனக் குறிப்பிட்ட ஈழவேந்தன் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குக்களைச் செலுத்தி திறமையும் தமிழுணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மிகச் சிறந்த தெரிவாக இருப்பது நாடு கடந்த தமிழீழ அரசே என்று குறிப்பிட்ட ஈழவேந்தன் புதிதாய் முளைவிட்டிருக்கும் இந்த முயற்சியை பெரு விருட்சமாக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவை நனவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜெனிவாவிற்குப் பயணம் செய்வதற்கு தமக்கு அனுமதி கிடைக்குமா என்பது குறித்து எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்கள் குறித்துக் கருத்துக் கேட்ட போது நல்ல சிந்தனையுடனும் நோக்குடனும் எமது மக்களிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடும் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதன் போது ஏற்படும் எதிர்வினைகளை அது ஏற்படும் போது சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் ஈழவேந்தன் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருபவர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஈழவேந்தன் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு திட்டம் என்றும் இதன்போது தவறுகள் நிகழ்வது இயல்பு என்றும் இந்தக் குறைகளைக் களைவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளை இதை முன்கொண்டு செல்ல அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

SOURCE: http://www.eelamweb.com/

நாடு கடந்த அரசுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் இலங்கைக்கு கொலிடே போய் குறித்த காலத்துக்குள் திரும்பி வராமல் இருந்து அதுக்கு தகுந்த காலத்தில் தகுந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து தமது உருப்புரிமையையும் ஈழவேந்தனையாபோன்று இழக்காமல் இருக்கவேண்டும்.

முடியாதவர்கள் தயவு செய்து முடிந்தவர்களுக்கு இடத்தை விட்டுக்கொடுத்து விலகி விடவும்.

மே மாதம் 2ம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கொள்கையில் உறுதியுடன் செயற்படக் கூடியவர்களையும் அரசியற் புலமையுள்ளவர்களையும் தெரிவு செய்யும்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் போட்டியிடுபவருமான ஈழவேந்தன் தெரிவித்திருக்கிறார்.

உங்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு ஒரு சதத்துக்கு உதவாத வீம்பு அறிக்கைகள் விடுபவர்கள் இல்லது இருந்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.