Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சின் பிரபல கலை இலக்கியவாதிகள் சுதன்ராஜ், கவிஞர் பாலகணேசன் தேர்தலில் போட்டி!

Featured Replies

My link

பிரபல கலை இலக்கியவாதிகளான சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது பிரான்ஸின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் களத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.

நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உலகம் பூராகவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளன.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான பின்னணியைக் கொண்ட ஒரு பல்பரிமாண வேட்பாளர்களாக இருப்பது இத்தேர்தலின் சிறப்பான அம்சமாக உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஈழவேந்தன், திரு ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் முறையே கனடா, இங்கிலாந்து நாட்டின் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

திரு ஜெயானந்தமூர்த்தி கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக தேர்தல் களத்தில் நிற்பது அமையவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு பலம் சேர்க்கும் ஒரு விடயமாகவே இருக்கும். கருணா போன்றவர்கள் கிழக்கு மாகாணத்தில் பிரதேச வாதத்தைக் கிளப்பி தேசியத்திற்கு எதிராக செயற்பட்ட வேளைகளில்கூட உயிராபத்திற்கு மத்தியிலும் தமிழினத்தின் ஒன்றுபட்ட அபிலாசைகளுக்காக உழைத்தவர். அதன் காரணமாகவே இன்று தாயகம் திரும்ப முடியாது இங்கு தஞ்சமடைய நேரிட்டதும் அறிந்ததே.

இவர்கள் தவிர பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில் நீண்ட தொடர்பைக் கொண்டிருக்கும் திரு சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் அறியப்பட்ட கலை இலக்கியவாதிகளாக உள்ளனர்.

சுதன்ராஜ் பிரான்ஸ் நாட்டிலிருந்து உருவான TTN தொலைக்காட்சியின் படலைக்குப் படலை நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர். சமூக அக்கறையோடு அவர் படைத்த இந்நிகழ்ச்சி அன்று சகலராலும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. மேலும் தரிசனம் தொலைக்காட்சியிலும் தமிழ் இணையவழித் தொலைக்காட்சி முயற்சிகளில் முன்னோடியாக அமைந்த வளரி வலைக்காட்சியின் ஊடாகவும் கலை இலக்கியத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். அண்மையில்கூட தமிழ் சமூக மேம்பாட்டுக்கான அசைவியக்கத்தின் ஊடாக ஒரு பட்டறையை நடத்தி முடிந்திருந்தார்.

கவிஞர் பாலகணேசன் (சுபாஸ்) ஒரு முன்னாள் போராளி. போராட்ட இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்த, கொக்குளாய் இராணுவ முகாம் தாக்குதல் தொடர்பான 'விடிவுக்கு முந்திய மரணங்கள்' எனும் ஒரு வரலாற்று நூலை 1985 களில் எழுதியவர். தவிர காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'வர்ணங்கள் கலைந்த வெளி' என்னும் கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். தவிர சிறுவர் நாடகங்கள் தொடர்பான பட்டறைகளை தொடர்ச்சியாக இயக்கி வருகின்ற ஒரு முன்னோடியான படைப்பாளி.

சமூக அக்கறையோடு நீண்ட காலமாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற இவர்கள் போன்ற கலை இலக்கியவாதிகள் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெறுவதும் அமையவிருக்கும் நாடுகடந்த அரசாங்கத்திற்கு ஒரு பல்தன்மை வாய்ந்த ஒரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பது உண்மை.

www.ponguthamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.