Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தற்போது கைத்தொலைப்பேசி வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ‐ உண்மையா? வதந்தியா?

Featured Replies

இலங்கையில் தற்போது கைத்தொலைப்பேசி வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ‐ உண்மையா? வதந்தியா?

08 May 10 01:37 am (BST)

கைத் தொலைப்பேசிக்கு அறிமுகமில்லாத புதிய தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புக்கள் வருவதாகவும் இந்த அழைப்பினை ஏற்று கதைத்தவுடன் கதைக்கும் நபர் ஒரு வகையான வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குறித்த இடத்திலேயே மரணிப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய மாவாட்டங்களில் வேகமாக பரவிய இந்த வைரஸ் அச்சம் தற்போது இலங்கையில் தலைநகர் கொழும்பிலும் பரவியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் பலர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பல பள்ளிவாயல்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் மக்கள் தெளிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், வவுனியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்றே கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

தற்போது கொழும்பின் மாதம்பிடிய பகுதியில் இரு யுவதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இதனை உறுதிபடுத்துவதும் சிரமமாகவே உள்ளது. குறிப்பாக இந்த கைத்தொலைப்பேசி வைரஸினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் எங்கும் பதிவுசெய்யப்பட்டதக இல்லை.

இது தொடர்பில் இலங்iகியல் செயற்படும் தொலைபேசி வலையமைப்புக்களிடம் ஜீ.ரீ.என் தொடர்பு கொண்டு கேட்ட போது சிலர் இவ்வாறான தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும், சில வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிமுகமில்லாத தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறான கைத்தொலைப்பேசி வைரஸ் தொற்று செய்திகள் பரவுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுகுறித்து ஜீ.ரீ.என் கொழும்புச் செய்தியாளர் பொலிஸாரிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது இது தொடர்பில் தமக்கு எதுவிதமான முறைப்பாடுகளோ தகவல்களோ வரவில்லை எனக் குறிப்பிட்டனர்.

இலங்கையில் பாரிய பரபரப்பை ஏற்படுத்திய கைத்தொலைபேசி அச்சம் ஓர் வதந்தியாக இருக்கலாம் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

சிலர் போட்டி காரணமாக இந்த வதந்தியை பரப்பியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த வதந்தியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில கிராமங்களில் மக்கள் முழுமையாக தமது கைத்தொலைபேசியைப் இயங்கவைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24094&cat=1

மாபெரும் வதந்தி.

இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை = ௦.

  • தொடங்கியவர்

மாபெரும் வதந்தி.

இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை = ௦.

Ultrasound மாறுபட்ட அளவான ஒலிக்கற்றைகள் மூலம் உங்களின் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்து மூளையை செயலிளக்க வைத்து கொல்ல முடியுமாம்.... :lol: ஆனால் அப்படியான ஆபத்தான ultrasound அலைகளை அனுப்பும், பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட கைபேசிகள் இலங்கையில் இருக்கின்றனவா...?? :)

Edited by தயா

Ultrasound மாறுபட்ட அளவான ஒலிக்கற்றைகள் மூலம் உங்களின் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்து மூளையை செயலிளக்க வைத்து கொல்ல முடியுமாம்....

இருக்காது.. மொபைல் ஸ்பீக்கருக்கு அவ்வளவு சக்தியில்லை.

ஆ அப்படியா! உடனே ராஜபக்சவுக்கு ஒரு போன்போடுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.