Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

90 நாட்களில் மீள்குடியேற்றம் முடிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90 நாட்களில் மீள்குடியேற்றம் முடிவு?

இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

போரின் இறுதி கட்டத்தில் வெளியேறி முகாம்களில் அனுமதிக்கப்பட்டவர்கள்

இந்த ஆண்டு மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளதாக மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அகதிகள் நலன்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் தெரிவிக்கிறார்.

மக்கள் அனைவரும் எந்த குறிப்பிட்ட நாளுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

பிரச்சார உத்தியல்ல என்கிறது அரசு

மானிக் பார்ம் முகாம்-பழைய படம்

இந்தப் பிரச்சினை தொடர்பில், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும் போது இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு, அந்த அழுத்தத்திலிருந்து வெளிவர இலங்கை அரசு முயல்கிறது என்கிற விமர்சனத்தியும் அவர் மறுக்கிறார்.

அரசின் திட்டம் பிரச்சார நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை அல்ல, மக்கள் மீதுள்ள பற்றின் காரணமாகவே ஜனாதிபதி மூன்று மாதத்தில் மீள்குடியேற்றம் நிறைவு செய்யப்பட வேண்டும் என்கிற ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து, கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் போன்ற பகுதிகளில் இருக்கும் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றமும் அரசின் கவனத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சம்பூர் பகுதியிலிருந்து அகதிகளானவர்கக்ள்

இந்த முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினை ஒரு மாறுபட்ட பிரச்சினை எனவும் கூறும் அவர், அவர்களை மீள்குடியேற்றுவது என்பது வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதாகத்தான் இருக்கின்றது என்றும் கூறுகிறார்.

அவர்கள் தங்கியிருந்த பகுதியில் நான்கு கிராம சேவகர்கள் பிரிவு அபிவிருத்திக்காக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக அந்த மக்கள் குடியேறுவதற்கு அளிக்கப்பட்ட மாற்று இடங்களை அவர்கள் ஏற்கவில்லை என்று துணை அமைச்சர் முரளிதரன் தெரிவிக்கிறார்.

எனினும் அம்மக்கள் எந்தக் காணிக்கு செல்ல விரும்புகிறார்களோ அந்தக் காணிகளுக்கு செல்ல வழி செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100526_resettlementin90days.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.