Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த

திகதி: 30.05.2010 // தமிழீழம்

இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவருகிறது). ஆயுத கொள்வனவு என்பது இராணுவ தீர்மானமாகும்.

இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவித்ததாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிடம் இருந்து அனுகூலமான அனைத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எவர் தமக்கு அவசரமாக ஆயுதங்களை விநியோகித்தார்களோ. அவர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போதும் அதனை அவர்கள் நிராகரித்தனர். இதன் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க நேரிட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்து விட்டது என தாம் நினைக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர், அவர்களின் அனுதாபிகள் இருக்கிறார்கள். அவர்களின் உறங்கும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். எனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது எனக்கூற முடியாது என மஹிந்த ராஜபக்ச தமது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வன்னியின் இறுதி யுத்தத்தில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது,

பிரபாகரனின் தாய் தந்தை உட்பட்ட பொதுமக்களை பாதுகாத்த போது எவ்வாறு தாம் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்க முடியும் என ஜனாதிபதி வினவினயுள்ளார். இடம்பெயர்ந்திருந்த மூன்று லட்சம் பேரை 180 நாட்களில் மீள்குடியேற்றப் போவதாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவரிடம் கேட்டபோது, இந்தவருட முடிவின் போது முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக குறைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்

சீனாவுடனான உறவு தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றவில்லை.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு உயர்ந்த நிலையில் உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவை, இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் பெரிய சகோதரர் நாடாக (பிக்பிரதர் Big Brother) பார்க்கவில்லை.

எனினும் இந்தியா சிறிய சகோதரி (Little sister) நாடாக இலங்கையை பார்க்கவேண்டும் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

எதிர்வரும் 8 ஆம் திகதி தாம் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம், பிராந்திய அரசாங்கங்களின் பொலிஸ் கட்டுப்பாடுகளை கொண்டிருக்காமை உட்பட்ட பல்வேறு பிழைகளை எம்மால் உணர்ந்துக் கொள்ளமுடிகிறது. 13 வது திருத்த சட்டத்தின் கீழ் இலங்கையின் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமைக்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிடடுள்ளார்

இந்தியா, பெரிய நாடு அதனை இலங்கையுடன் ஒப்பிட முடியாது. இதன் அடிப்படையில் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, மும்பாய் தாக்குதலின் போது கொமாண்டோ படையினரை வரவழைக்க எந்தளவு கோரிக்கைகளை தேவைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியிருந்தது. தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்தது. எனவேதான் இலங்கையில் பொலிஸ் அதிகாரம் மத்தியமயப்பட்டிருக்க வேண்டும் என தாம் கூறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்களது ஆட்சி குடும்ப ஆட்சியாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனனவே எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, மக்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தவதை தாம் எவ்வாறு தடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் பாரிய வெற்றியை பெற்றார். (பசில் ராஜபக்ச, நான்கு லட்சம் என்ற விருப்புத் தெரிவு வாக்குகளால் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிப் பெற்றமையை குறிப்பிட்டுள்ளார்) இது மக்கள் தீர்மானமாகும். என்று மக்கள் தமக்கு இவர்கள் தேவையில்லை என நினைக்கிறார்களோ அன்று அவர்களை புறந்தள்ளிவிடுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நன்றி - சங்கதி இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.