Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருனாநிதியின் செம்மொழி மாநாட்டையொட்டி ஈழத்தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருனாநிதியின் செம்மொழி மாநாட்டையொட்டி ஈழத்தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர்.

தமிழகத்தில், சமீபத்தில் விடுதலைப் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாலும், கோவையில் இன்று துவங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, அகதிகள் முகாமில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதாலும் தூத்துக்குடியில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு புதிதாக யாரேனும் வந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தங்கியுள்ளவர்கள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது

நன்றி தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவலாக எங்கட ஊர் பேராசிரியர் திரு சிவத்தமபி அவர்களும் அங்க உள்ளார், அவர் என்ன கூறுகிறார் எண்டால், டாட் காம் எனும் வார்த்தைக்குச் சரியான தமிழ் சொல் இல்லையாம,; கருனாநிதி குழுவுக்கு இதுக்கு எங்க நேரம் இருக்குது, இண்டைக்கு இளங்கோவன் வேற தேர்தல் கூட்டணிபற்றி சோணியா தமிழ்நாட்டில இருக்கும்போதே புதுக்குண்டை போட்டுட்டான,; செம்மெழி மாநாட்டோட எல்லாத்தையும் ஊத்திமுடிப்போட்டு அடுத்த அலுவல் கவனிக்கப்போய்பிடுவாங்கள். ஆகவே புலத்தில யாராவது டாட்.காம் என்பதற்கு என்னத்தையாவது கண்டுபிடிச்சு பேராசிரியருக்கு அறிவியுங்கோ உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். பேராசிரியரையும் மு.க நல்லாக் கவனிச்சிருப்பார் அவருக்கும் இனிமேல் அந்த அன்புக்குளிப்பில இருந்து விடுபட்டுவர கனநாள் ஆகும் ஆக, அவராலும் இதுக்கு ஏதாவது சொல்லைக் கண்டுபிடிக்க நேரமிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

.

டாட்.காம் தமிழ் இல்லையா?

டாட்.காம் தமிழ் தான், அதை இங்கிலீஸ்காரன் களவெடுத்துப் போட்டான் என்று செம்மொழி மாநாட்டிலை அதிரடியாய் அறிவிச்சால் என்ன...

.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள தமிழீழ மக்களுக்கு... அவசர அறிவித்தல்

tamilnadu.jpg

தமிழீழம் சிங்களத்திடம் வீழ்ந்த பின்பு எமது உறவுகள் பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி வெளிக்கிட்டார்கள்.

அப்படி தஞ்சமடைந்த நாடுகளில் தமிழ் நாடும் அடங்கும். பல நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆகவே அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிங்கள அரசு கேட்டு வருவது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை தமிழக அரசிடமும் சிங்கள அரசு கையளித்திருக்கின்றது.

அவர்களில் பெரும்பாலானோர் சென்ற ஆண்டு மே17ம் திகதிக்குப் பிறகு வந்தவர்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சிங்களம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தற்சமயம் செம்மொழி மாநாடு நடைபெறுவதால் இப்போதைக்கு ஏதும் செய்து தொலைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தபடி உள்ளன.

அதே கட்டளையை தமிழக அரசு தனது காவல்த் துறைக்கும் அறிவித்திருக்கின்றது. நேற்று முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம் என பத்து பக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு மறைந்து போன ஓவியக்கல்லூரி மாணவனின் மரணமும் மூடி மறைக்க தமிழக காவல்த்ததுறை முயல்வதாக தெரிகிறது.

ஆகவே செம்மொழி மாநாட்டிற்குப்பிறகு தமிழ் நாடு வழமையில் இருந்து மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள உறவுகளே ஏற்கனவே பல துரோகிகளையும் புலனாய்வாளர்களையும் தமிழகத்தில் சிங்கள அரசு அனுப்பியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஊடாகவே பலரது தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். துரோகிகளது வேலைகள் முடிந்து இப்போது பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அனைவரும் தங்களது பாதுகாப்புக்களை உறுதிசெய்யுமாறு நாம் வேண்டுகின்றோம்.

http://eelam-puthiyavan.blogspot.com/2010/06/blog-post_3324.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.