Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் மண்டல கப்பல் படை தளபதி சாவில் மர்மம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலையில் குண்டு பாய்ந்து பலி

தென் மண்டல கப்பல் படை தளபதி சாவில் மர்மம்

போர் பயிற்சியின் போது நடந்தது என்ன?

கொச்சி, ஜுலை.8-

கொச்சியில், கப்பல் படை வீரர்களின் போர் பயிற்சியின் போது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான தென் மண்டல கப்பல் படை தளபதியின் சாவில் மர்மம் நீடிக்கிறது.

போர் பயிற்சி

கேரள மாநிலம் கொச்சியில் "ஐ.என்.எஸ். துரோணாச்சாரியா'' என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கப்பலில் நேற்று காலை 10.30 மணிக்கு வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியை, தென் மண்டல கப்பல் படை தளபதி அட்மிரல் சத்யேந்திரா சிங் ஜாம்வால் பார்வையிட்டார்.

பயிற்சியின் போது வீரர்கள், சிறிய ரக துப்பாக்கியால் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சுட்டனர். அப்போது குண்டு தவறுதலாக தளபதி ஜாம்வாலின் தலை மீது பாய்ந்து விட்டது.

பரிதாப மரணம்

இதனால் பலத்த காயம் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். உடல், கொச்சி நகர ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இவரது மரணத்தை இந்திய கப்பல் படை செய்தித் தொடர்பாளர், நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

எந்த வீரர் தவறுதலாக சுட்டார்? எத்தனை குண்டுகள் தளபதியின் மீது பாய்ந்தன? என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார். இந்த சம்பவம் பற்றி இலாகாபூர்வ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தற்கொலையா?

இந்த சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து என்று கூறியுள்ள கப்பல் படை, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

துப்பாக்கி குண்டு ஜாம்வாலின் தலையில் பாய்ந்து உள்ளது. இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; இது ஒரு தற்கொலை சம்பவம் போல் தெரிவதாகவும், குடும்ப பிரச்சினை இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை கொச்சி கடற்படை வட்டாரங்கள் மறுத்தன. ஜாம்வால் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால், அவர் பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும், மற்ற அதிகாரிகளுடன் அவர் அங்கு வந்திருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மர்மம் நீடிப்பு

அஜய்குமார் என்ற ராணுவ அதிகாரி கூறுகையில்; தானும் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்யப் போவதாக ஜாம்வால் கூறி இருந்ததாகவும், அதன்படி அவர் முதலில் ஒரு துப்பாக்கியின் மூலம் சுட்டதாகவும் பின்னர் 9 மில்லி மீட்டர் ரக கைத்துப்பாக்கியை அவர் பயன்படுத்த முயன்ற போது அது எதிர்பாராத விதமாக 2 முறை வெடித்தாகவும் தெரிவித்தார். அப்படி 2 முறை ஏன் வெடித்தது? என்பது பற்றி அவர் பரிசோதித்த போது அந்த துப்பாக்கி மறுபடியும் வெடித்ததால் ஜாம்வால் மீது குண்டு பாய்ந்ததாகவும் கூறினார்.

தளபதி ஜாம்வால் எப்போதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கக்கூடியவர் என்றும், அவர் விரக்தியுடன் இருந்து பார்த்ததே இல்லை என்றும் எனவே இது தற்கொலை சம்பவமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அஜய்குமார் கூறினார்.

இப்படியாக இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து மர்மம் நீடிக்கிறது.

காஷ்மீரை சேர்ந்தவர்

மரணம் அடைந்த கப்பல் படை தளபதி ஜாம்வாலுக்கு 51 வயதாகிறது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் கீதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

1980-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி கப்பல் படையில் அதிகாரியாக சேர்ந்த ஜாம்வால், நீர்மூழ்கி கப்பல் போர் முறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர். கொச்சியில் தென் மண்டல கப்பல் படையின் 2-வது உயர் அதிகாரியாக இவர் பணியாற்றி வந்தார்.

தராகிரி, ஆதுல், ராஜ்புத், ரான்விஜய் போன்ற போர்கப்பல்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். கோவாவில் உள்ள கப்பல் படை அகாடமி, கொச்சியில் உள்ள கப்பல் படை பயிற்சி பள்ளி ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=578783&disdate=7/8/2010

இந்திய பயங்கரவாதியின் இழப்பு மகிழ்ச்சியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.