Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியை கலக்கிய ஜெயலலிதாவின் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்.

Featured Replies

post-7835-024242100 1279064002_thumb.jpg

"தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தற்போது 5-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இது தேர்தல் ஆண்டு.

எப்போது வேண்டுமானாலும் தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். உங்கள் ஜனநாயக கடமையாற்ற தேர்தலுக்கு நீங்கள் தயாராக வேண்டும். யாருடைய வாக்குரிமையையும் இழக்க நாம் தயாராக இல்லை.

18 வயதுடைய அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பிறகு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு சரியான கட்சிக்கு சரியான வேட்பாளருக்கு நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அரசின் சாதனைகள் அனைத்தும் மாயத்தோற்றங்கள். மனிதன் உணவின்றி வாழமுடியாது. சாப்பிட அரிசி மட்டும் இருந்தால் போதாது. பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா, காய்கறிகளும் தேவை. இவற்றை சமைக்க மண்ணெண்ணெய் அல்லது எரிவாயு தேவை. இவற்றின் விலை நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துவிட்டது. உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் 17 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள், தற்போது 240 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த அளவுக்கு விலைவாசி ஏன் உயர்ந்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன.விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை பம்பு மூலம் இறைக்க மின்சாரம் இல்லை. விவசாயப்பணிகள் முறையாக நடைபெறாததால், விவசாய தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகருக்கு செல்கிறார்கள்.

அரசியல்வாதிகள் பலர் வருவார்கள். அவர்கள் குறித்து தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு தக்க தருணம் இதுதான்.

தி.மு.க. அரசு சாதனைகளை நீங்கள் இப்போது எடைபோட்டு பார்க்க வேண்டும். தி.மு.க. அரசு செய்துள்ளதாக கூறப்படும் சாதனைகள் அனைத்தும் வெறும் மாயைதான். இந்த அரசின் திட்டங்கள் தோல்விதான் அடைந்துள்ளன.

நாம் உணவு சாப்பிட வேண்டும் என்றால் அரிசி மட்டும் போதாது. உப்பு, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள் எல்லாம் தேவை. அவற்றை சமைக்க மண்எண்ணை அல்லது சமையல் கியாஸ் தேவை. இந்த பொருட்களின் விலை எல்லாம் கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது.

உணவு பண வீக்கம் 17 சதவீதம் அதிகரித்து விட்டது. நீங்கள் 100 ரூபாய் செலவு செய்தால் கூடுதலாக 35 ரூபாய் இழக்க வேண்டியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விற்ற பொருட்கள் தற்போது ரூ. 240க்கு விற்கப்படுகின்றன.

தன் விளைவாக விவசாய பணிகளும், உற்பத்தியும் குறைந்துவிட்டன. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழகம், இப்போது தரம் தாழ்ந்துவிட்டது. தமிழகத்தை பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிகிறது. இந்நிலை மாறவும், தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கவும், வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளியுங்கள்; கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

இதனால் விவசாய தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதன் காரணமாக விவசாய உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு தி.மு.க. அரசு எந்த தீர்வும் காணவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் பங்கை தடுக்க யாருக்கும் உரிமையில்லை. காவிரி தண்ணீர் கிடைப்பதற்கு தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரி தண்ணீருக்கான பங்கை பெறுவதற்கு கிடைத்த உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிட செய்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கடந்த 3 1/2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் நிலையும் இப்படிதான் உள்ளது. கேரளாவில் பாம்பாற்றின் குறுக்கேயும் தற்போது அணை கட்ட முயற்சி செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வுக்கு 2-வது காரணம் பதுக்கல். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சிலர் பதுக்கி செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்கள். தேவை அதிகரித்ததும் மீண்டும் விற்று கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இந்த சமூக விரோதிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

திமுக அரசின் தோல்விகளே ஏராளம். சாதனைகள் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்லாமல் அவை வெறும் மாயத் தோற்றங்கள்தான். இந்த அரசின் முதல் தோல்வி அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு. அடுத்ததாக, மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டைக் கட்டாயமாக மக்கள் மீது திணிக்க வேண்டிய அளவுக்கு மின்உற்பத்தியில் பின்னடைவை தமிழகம் சந்தித்து வருகிறது.விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு திருப்பூர் ஜவுளித் தொழில் முதல் சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத் தெரிகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செ.மீ. மண் இயற்கையாக உருவாவதற்கு 200 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இப்போதைய நிலையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய 10 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது.

அடுத்து ஆன்லைன் வர்த்தகம் காரணமாகவும் விலைவாசி உயர்கிறது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சந்தை விலையை மாற்றுகிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் லாபம் கிடைப்பதில்லை. நீங்கள்தான் பாதிக்கப்படுகிறீர்கள். இதையும் தடுக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எரிபொருட்கள் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இவற்றின் உயர்வால் சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்து மக்கள் மீது சுமை ஏற்றப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச் சரவையில் அங்கம் வகிக்கிற தி.மு.க.வும் பொறுப்பு ஆகும். அ.தி.மு.க. ஆட்சி காலத் தில் மின்சாரம் உற்பத்தி உபரியாகி மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்கப்பட்டது. இப்போது மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததே முக்கிய காரணமாகும்.

அ.தி.மு.க., நடத்திய கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற இக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராமன் 5 கிலோ எடையில் உருவாக்கிய வெள்ளிச் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ஜெயராமன் கூறியதாவது: கடந்த 1986 ம் ஆண்டு ஜூலை 13 ம்தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா செங்கோல் வழங்கினார்.

அந்த செங் கோலை அவர் வைத்துக் கொள்ளாமல் மீண்டும், ஜெ.,விற்கு திரும்ப வழங்கினார்.அந்த நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அதே தேதியில் அதே போல செங்கோலை, நான் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.,க்கு செங்கோல் வழங்குகிறேன், என்றார். வீரவாள்: எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி பொதுச்செயலாளர் கே.ஆர்.ஜெயராம், வெள்ளியில் தயாரிக்கப் பட்ட வீரவாளை ஜெ.,விற்கு பரிசாக வழங்கினார். இது மூன்று கிலோ எடை கொண்டது. வாள் தனியாகவும், உரை தணியாகவும் இருந்தது. இரண்டரை அடி நீளம் கொண்டது.கூட்டத்தாரை நோக்கி வீரவாளை உயர்த்தி காண்பித்து வெற்றி நமதே என்று கூறினார், ஜெ.,

ஜெயலலிதாவின் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கூட்டத்தை உளவுத்துறை மூலம் அறிந்த கருணாநிதி கதிகலங்கி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=15985

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்
அந்த செங் கோலை அவர் வைத்துக் கொள்ளாமல் மீண்டும், ஜெ.,விற்கு திரும்ப வழங்கினார்.அந்த நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அதே தேதியில் அதே போல செங்கோலை
:):lol:

கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை

ஜெயலலிதாவின் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கூட்டத்தை உளவுத்துறை மூலம் அறிந்த கருணாநிதி கதிகலங்கி இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

:lol::lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.