Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசின் தமிழர்களுக்கு வைத்த பிசின்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசின் தமிழர்களுக்கு வைத்த பிசின்....

Actress+Asin+Photos.jpg

உதவி செய்வதை யாரும் குறை கூறவில்லை.. அதை தகுதியானவர்கள் செய்யவேண்டும் .. அத்தோடு பிரதி பலன் கருதாது உரிய காலத்தில் உதவவேண்டும்.. அவனவன் பிச்சை போடுவதற்கு ஈழ தமிழர்கள் ஒன்றும் பிச்சைபாத்திரம் அல்ல.. அதிலும் குறிப்பாக இந்த மலையாளிகள்.. அறிக்கைவிட்டு அரசியல் செய்வதாக கூறும் இவர்.. போர் நடக்கும் போது.. இனமானான மலையாள சேட்டன் நாராயணன் மற்றும் மேனன் அங்கிளுக்கு உதவாதீர்கள் என்று அறிக்கை விடவேண்டியதுதானே?போர் நடக்கும் போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்..

பிசின் அறிக்கை விட்டு அரசியல் நடத்துவதாக கூறுகிறார்... இது தமிழக அரசியல் வாதிகளை பொருத்தவரை ஒப்பு கொள்ள வேண்டிய விடயம் என்றாலும்..பெரியவர் நெடுமாறன் பொருட்களோடு படகெறி செல்லும் நிலமை ஏன் ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும்...

பெரியவர் பழ.நெடுமாறன் வாழ்நாளில் பாதியை ஈழ சிக்கலுக்கு செலவிட்டுள்ளார்.. அவர் சேகரித்த உணவு பொருட்கள் ... அனைத்தும் ... மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டன.. அடுத்து நாம் தமிழர் இயக்க தோழர் முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்கு சேகரித்த மருந்து பொருட்களுக்கும் அதே நிலைமைதான்... போதாக்குறைக்கு அவருக்கு சிறையில் களி கிடைத்ததுதான் மிச்சம்..

தயாரிப்பாளர் எடுத்த முடிவாம் அதனால் தன்னால் ஏதும் முடியாதாம்.. இத்தனைக்கும் இவர் புகழ்பெற்றது தமிழ் திரையுலகின் மூலம் ... 3 இந்தி படத்திற்கு இந்த ரவுசு.. அந்த படத்தினை விட்டு சட்ட ரீதியாக இவர் விலக முடியாதா? தமிழ் ரசிகர்கள் இவரை பார்க்க தயாராக த்தானே உள்ளார்கள் மீண்டும் அதை தமிழக சினிமாவில் சம்பாதிக்க முடியாதா?

அடுத்து விடுதலைபுலிகள் இருந்த இடமான யாழ்பாணத்திற்கு தைரியமாக சென்றாராம்... 32வருடமாக யாரும் செல்லவில்லையாம்.. எதோ கல்பனா சால்வாவிற்கு சகோதரி போல... பிலீமு... ஒண்ணாம் நம்பர் மொள்ளமாறித்தனம்.. இவர் தமிழில் நடிக்க ஆரம்பித்த 2004 வருடம் (எம்.குமரன் சன் ஆப் மகால்ட்சுமி) விடுதலை புலிகளை தமிழக திரைபுள்ளிகள் சந்தித்துள்ளார்களே ... யாரையும் அவர்கள் கடித்து குதறவில்லையே...இப்போது நீலி கண்ணீர் வடித்து ஏமாற்றுபவர் அப்போதே சென்று சேவை ஆற்றவேண்டியதுதானே? இப்போது மட்டும் பொங்கி பிளிறுகிறதோ...

கண்ணையும் குத்திவிட்டு ... பிச்சையும் போடுவார்களாம் அதையும் ஏற்று கொள்ளவேண்டுமாம்..ஐ.நா தொண்டு நிறுவனங்களையும் பாசிச ராஜப்க்ச உள்ளே விடவில்லை... இவர்களை உள்ளே விட காரணம் என்ன? பங்காளி உறவு முறைதானே? பொந்தியா மற்றும் அதன் ஏகாதிபத்திய அடிப்பொடிகளுக்களின் வாயிலாக சொம்பி சோப்பு போட்டு செய்வதுதான் முறை... அதுதான் ஈழத்தமிழர்களின் தலைவிதி... என்று பிரியவைப்பதற்கான முயற்சியே இது.

இவர் கூறிய நீலி கண்ணீர் பேட்டியை வைத்து வீடுகட்ட தமிழ் திரை உலகினர் தயாராகிவிட்டார்கள்..

ஈழத் தமிழர்களை சந்திக்க தமிழ் நடிகர், நடிகைகள் இலங்கை பயணிக்கலாம் என்று தெரிகிறது.

இதன்மூலம் நடிகை ஆசி்ன் இலங்கை சென்ற விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போத தமிழர்கள் கொல்லப்பட்டதை நடிகர் சங்கம் கண்டித்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியும் அரசிடம் அளித்தது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் முடங்கியுள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையி்ல் கடும் எதிர்ப்பை மீறி படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற நடிகை ஆசின், அதிபர் ராஜபக்சேவின் மனைவியுடன் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்குள் சென்ற அவர் தனது சொந்த செலவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்.

பெற்றோரை இழந்த சிலரை தத்தெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந் நிலையில் தன்னை சந்தித்த தமிழர்கள், எங்களைப் பார்க்க ஏன் அக்கா யாருமே வரவில்லை என்று கேட்டதாக பேட்டியும் அளித்துள்ளார்.

இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது. ஆசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்றும் அறிவித்துள்ளார்.

முகாம்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்தன் மூலம் ஆசின் தனக்கு விதிக்கப்படவிருந்த தடையை மிக விவகாரமாக கையாண்டு தப்பிவிட்டதாகத் தெரிகிறது. கேரளாவா சும்மாவா?.

நடிகர், நடிகைகள் இலங்கை சென்று தமிழர்களை சந்திப்பதால் எந்த வகையிலாவது தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா என்பது தெரியவில்லை: நன்றி தட்ஸ் தமிழ்

இதை வைத்து ராஜபக்சே அன்ட் கோவினர் தமிழர்களுக்கு தீர்வு எதுவும் தேவையில்லை அவர்கள் சந்தோசமாகவே உள்ளார்கள். இந்தா பாருங்கள் என இவர்கள் ஆடும் கூத்தினை பயன்படுத்துவார்களா மாட்டார்களா? பொந்தியா இதை சாட்டி தனது இழுப்புக்கு இதனை வைத்து கொள்ளுமா இல்லையா?

இவர் செய்யும் உதவிக்கு பின்னால் ரோ உளவு துறை இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்?அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் நிலை என்ன?

கூட்டி கழித்துபார்த்தால்..பொந்தியா ஈழதமிழர்க்ள் தமது வம்சா வளியினர் என்று கூறுவதற்கான தகுதியை இழந்து பலவருடமாகிறது.. ஒட்டு -> கொம்பு சீவுதல் ->சிங்களத்திற்கு எதிராக மோதவிடுதல்-> மீண்டும் சிங்களுத்துடன் கூட்டு-> தமிழர்களை அழித்தல்... மீண்டும்... அதே ஆரம்ப புள்ளி... மற்றுமொரு முள்ளிவாய்காலை ஈழத்தோழர்கள் கவனமாக தடுத்திடல் வேண்டும்... இரக்கத்தை கொடுத்து தமிழ்தேசியத்தை வாங்கு.. என்பதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது..பொந்தியத்தின் நிலைபாட்டுக்கு வக்காலத்து வாங்க /செயல்படுத்த தயாராகவே உள்ளார்கள் இங்குள்ள 6 கொடி அவரை கொடி உறவுகள்...என்ற பெயரில் உள்ள ஆட்டு மந்தைகள் .. :)

தமிழின விரோத மலையாள *** தமிழர் ஒதுக்க வேண்டும்.

Edited by நிழலி
அவதூறான வார்த்த நீக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.