Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் வட பகுதியில் செயற்பட முடியாத நிலைமை

Featured Replies

உள்நாட்டு,வெளிநாட்டு உதவி வழங்கும் முகவரமைப்புகள் வட பகுதியில் இயங்க முடியாத முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் வேலைகளை பரிசீலனைக்குட்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் நிலுவையாகவிருப்பதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் இந்த முகவரமைப்புகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.

இந்த விடயம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மட்டத்தில் பொறுப்பாக கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், சிறந்த நிர்வாகத்தை விரும்பும் உதவிப் பணியாளர்கள் தமது பணிகளைப் பரிசீலனை செய்வதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உதவி வழங்கும் அரசசார்பற்ற தன்னார்வ அமைப்புகளிலுள்ள செயற்படாத மற்றும் பயனற்ற அமைப்புகள் தொடர்பான பரிசீலனையை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்து உதவி வழங்கும் அமைப்புகள் மத்தியில் காணப்படுகிறது.

வடக்கில் பணிபுரியும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஜனாதிபதி செயலணிப் பிரிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலணிப் பிரிவூடாக பாதுகாப்பமைச்சிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் என்றும் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் உதவிப் பணியாளர் ஒருவர் எக்ஸ்பிரஸுக்கு கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து புதிதாக அனுமதியைப் பெறாவிடின், வன்னிக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதற்கென எம்மிடம் அதிகளவு பொருட்கள் உள்ளன. புதிய கோரிக்கையில் அவற்றை விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. பதிவுக்காக ஜூன் 30 இல் நாம் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், இதுவரை எமது விண்ணப்பங்கள் நிலுவையாகவுள்ளன என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. செயற்திட்ட அடிப்படையில் எமது அலுவலர்களின் முறைமை தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பொன்று வந்தது. மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாக நான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரம் ஏன் தேவைப்படுகின்றது என்பது தொடர்பாக அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பல ஆச்சரியப்படுகின்றன. ஆனால், இந்த விவகாரம் "பாதுகாப்பு%27 சம்பந்தப்பட்டதல்ல என்றும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணிகளை மதிப்பீடு செய்வதே அவசரத் தேவையெனவும் இதனை அறிந்தவர்கள் கூறுகின்றனர். யுத்த அகதிகளுக்கு சிறியளவில் செலவழித்துக் கொண்டு அதிகளவு பணத்தை தமது சொந்தச் செலவுக்கு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பல பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதேவேளை, இந்தத் தொண்டர் நிறுவனங்களின் பணியாளர்கள் மூன்றிற்கு ஒன்று என்ற விகிதத்தில் வாகனங்களை வைத்திருப்பதாக நன்கறியப்பட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனக் குழுமமொன்றின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவை சொகுசு வாகனங்கள் என்றும் அவை தீர்வைச் சலுகையுடன் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. நிர்வாகச் செலவுகள், குறிப்பாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பாரிய தொகை செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் வீட்டு வாடகைக்கு 3 இலட்சம் ரூபாவைச் செலுத்துவதாகவும் சொகுசு வாகனத்தில் சென்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பல தொண்டர் நிறுவனங்களின் பணிகளின் தரங்குறைந்த மட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம், காலவரையறையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் காணப்படுகிறது. 2010 ஜூலையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய செயல்திட்டம் 2010 ஜூலையிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=4040&catid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.