Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரகசியம் பரகசியமானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

19 July 10 08:41 am (BST)

இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர்.

ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு 128 தடவைகள்கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் வழங்கியது. எனினும் அவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி அச்சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்குக் கூட அதன் பிரதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், அக்குழுவில் இலங்கைத் தொழிலாளர் .காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய தற்போதைய ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன், சிறிலங்கா. முஸ்லிம் .காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிஷாம் காரியப்பர் ஆகியோர் தமது சுயமுயற்சியாக தொகுத்த அக்குழுவின் இறுதி அறிக்கையை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வெளியிட்டனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினர் என். குமரகுருபரனும் இம்மாநாட்டில் பங்குபற்றினார்.

தற்போது அரசியலைமைப்புத் திருத்தம் குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம். இது ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்குமென நம்புகிறோம் என இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ஆர். யோகராஜனும் நிஷாம் காரியப்பரும் தெரிவித்தனர்.

இவ்வறிக்கை தமது சொந்த அறிக்கை அல்ல எனவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையே இதுவெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

"சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் ஒரேயொரு பிரதி மாத்திரமே தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை.

சர்வகட்சி பிரதிநிதிகளாகிய நாங்கள், அக்குழுவில் அங்கம் வகிக்காத பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சுநடத்திய அதன்பின் ஒரு புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவை எடுத்துரைப்பார் என எதிர்பார்த்தோம். அதுவும் நடைபெறவில்லை.

எனினும் இறுதி அறிக்கையொன்று குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதன் பிரதி கிடைக்கவில்லை. அக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகளிடம்கூட அவ்வறிக்கையின் பிரதி இல்லை.

இவ்வாறான சூழலில் இறுதிக் கலந்துரையாடல்களின் ஆவண நகல்களை அடிப்படையாக வைத்து சகல விபரங்களையும் உள்ளடக்கிய இறுதி அறிக்கையை நாம் தயாரிக்க முடிவு செய்தோம்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு 128 தடவை கூடி கலந்துரையாடியது. அக்கலந்துரையாடல் விபரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற ஹன்சார்ட் பதிவாளர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இவ்வறிக்கையில் ஓரிரு சொல் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புள்ள போதிலும், இது சர்வக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையை 99.99 சதவீதம் ஒத்தது.

சர்வகட்சி குழுவின் இறுதித் தீர்மானங்களைக்கொண்ட இறுதி அறிக்கை இதுவல்ல என எவரேனும் ஆட்சேபித்தால் நாம் அச்சவாலை ஏற்றுக்கொண்டு ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிக்க எம்மால் முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் 14 கட்சிகள் பங்குபற்றிய போதிலும் ஏனைய கட்சிகள் அரசாங்கத் தரப்பில் உள்ளதால் இவ்வறிக்கையை வெளியிடும் முயற்சிக்கு அவற்றை அழைக்கவில்லை என யோகராஜனும் நிஸாம் காரியப்பரும் கூறினர்.

இவ்வறிக்கையை வெளியிடுவது குறித்து சர்;வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் தாம் கலந்துரையாடவில்லை எனவும் ஆனால் இவ்வறிக்கை வெளியாகுவது குறித்து அவர் மகிழ்ச்சியடையக்கூடும் என தாம் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இம்முயற்சிக்கு தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் என். குமரகுரபரனுக்கும் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனுக்கும் நன்றி தெரிவிப்பதாக நிஸாம் காரியப்பரும் ஆர். யோகராஜனும் கூறினர்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27428&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.