Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரபுத்தி வேண்டாம், தலைவர்களே...!

Featured Replies

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான தமிழ்க்கட்சி களின் கூட்டு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தனது அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. அதனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதி கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தேடிச் சென்று சந்திக்கவும் தயாராக இருப்பதாக அறிவித் துள்ளார்கள். தமிழ் மக்களின் அமோக ஆதரவு பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதனை கடந்த பொதுத்தேர்தல் தெட்டத் தெளிவாகக் காட்டி உள்ளது. அதனால் கூட்டமைப்பைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்க் கட்சிகளின் அரங்கத் துக்கு. இதனைத் தமிழ் மக்கள் எவரும் புரிந்துகொள் வர்.

ஒற்றுமையே பலம். ஆகையால், தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் ஒலித்தால், அரசாங்கத்தை இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குமாறு அசைக்க முடியும் என்று த.க. அரங்கம் நினைப்பதில் தவறு காணமுடியாது. ஆனால் தமிழ் மக்களுக்கு எந்த வகையான தீர்வை அது அரசிடம் கேட்கப்போகிறது என்பதுதான் பெரும் தேடுதலுக்குரியது.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற நிலையை தமிழ்த் தலைவர்கள் எய்துவது அத்தியா வசியமே. ஆயினும் தமிழ் மக்களின் பிரச்சினைக் கான தீர்வில் ஆதார சுருதி எங்கிருந்து உற்பவிக்க வேண் டும் என்பது குறித்துத் தீர்க்கமான, உறுதியான பார்வை யும் நிலைப்பாடும் தேவை.

முதற்கோணல் முற்றும் கோணலாகிவிடும். ஆகையால் சரியான புள்ளியிலிருந்து தமிழர் பிரச்சி னைக்கான தீர்வு முயற்சி ஆம்பிக்கப்பட வேண்டும்.

தந்தை செல்வா காலத்தில் இருந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் ஒன்று சமஷ்டி அமைப்பின் கீழ் இந்த நாட்டில் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை அடித்தளமாக வைத்தே வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இலங்கைத் தமிழர்களிடையே புகுந்தன.

தமிழ் மக்களின் தேசியம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சி அதிகாரம் ஆகியனவே நிரந்தரமான ஒரு தீர்வின் அத்திபாரமாக அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன் றைய அரசியல் அபிலாசையும் ஆகும். தமிழ்க் கட்சி களின் அரங்கம் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறதா இல்லையா என்பது இதுவரை வெளிப்படுத்தப் படவில்லை.

இத்தகைய ஒரு சூழலில், தமிழ்த் தேசியம் என்பது ஒரு மாயையே என்று வர்ணித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையில் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தமிழர்களை அரசியல் ஓட் டாண்டிகள் ஆக்கிட வேண்டும் என்று வலைவிரித்து வைத்திருக்கும் மஹிந்த அரசு, கிள்ளிப் போடும் அர சியல் சலுகைகளுக்காகவா கூட்டமைப்பைத் தம் மோடு சேர்த்துக்கொள்ளப்பார்க்கிறது...?

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டுவிட்ட பின்னணியில் தமிழர் பிரதேசங்களை இராணுவமயமாக்கி, பாதுகாப்பு முன்னேற்பாடு என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களை சிங்கள மக்கள் பிரதேசமாக்கியதன் பிற்பாடு, தான் நினைத்ததைக் கிள்ளித் தெளிக்கக் காலத்தைக் கடத்தும் வியூகத்தை அமைத்திருக்கிறது அரசு.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் சேரவைத்து, தான் கிள்ளித் தெளிக்கும் அரசியல் வலுவற்ற அற்ப சொற்பத்தைத் திணித்து விடும் திட்டத்தின் ஓர் அங்கமே, தமிழர் பிரச்சினைக் குத் தீர்வு காண்பது "நூடில்ஸ்' சமைப்பது போன்ற தல்ல என்பதன் சூட்சுமம்.

அத்தகைய அரசுடன், இணக்க அரசியல் நடத்தியே தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியும் என்ற சித்தாந்தம். இந்தக் காலகட்டத்தில் ஒவ்வாத ஒன்று தமிழ் மக்களின் தேசியம், இனத்தனித் துவம், தாயகம் என்ற கோட்பாடுகளை கரைத்துக் கரியாக்கி விடுவதற்கு கண்ணுக்குப் புலப்படாதவிதத் தில் செயற்படுகிறது அரசு. தமிழர்களின் ஐக்கியம் என்ற போர்வைக்குள் அதனைச் செய்து முடிக்கும் திட்டத்தோடு, அரசின் ஏஜென்சிகளாக எல்லாத் தமிழ் அரசியல் கட்சி களையும் ஓரணியில் சேர்த்து ஏப்பம் விட அது போட் டுள்ள சதியில் சிக்காதிருக்க தமிழ்க் கட்சிகள் அரங்கம் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டும். இதுவே நொந்து நொடிந்து போயுள்ள தமிழ் மக்களின் வேணவாவும் நிபந்தனையும் ஆகும். தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் பிரமுகர்களும் இது குறித்து ஆற அமர இருந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் இன்றைய நிலை நாடி அதுவே பொருத்தம். அவசர புத்தி வேண்டாமே!

[ உதயன் ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.