Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொ‌ட்டிக‌ள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொ‌ட்டிக‌ள்!

சமீபகாலமாக மதுரையை பல அநாமதேய சுவரொட்டிகள் மிரட்டுகின்றன. ''எட்டு பிட்டு” சுவரொட்டிகள்.. அதாவது எட்டு சுவரொட்டிகளை ஒட்டினால்தான் அது ஒரு சுவரொட்டியாகி, முழு விபரம் அதில் தெரியும். அதுதான் “எட்டு பிட்டு” சுவரொட்டிகள்!

இந்த சுவரொட்டிகள் எதிலும் அச்சகத்தின் பெயர் இருக்காது. அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அடிக்கக்கூடாது என்பது மதுரை காவல்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. அச்சக உரிமையாளர்களை மிரட்டும் இந்த சுற்றறிக்கை, சமீபகாலமாக மதுரையில் ஒட்டப்படும் சிலரது சுவரொட்டிகளுக்கு பொருந்தாது! காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள்வரை இந்த “மிரட்டல்” சுவரொட்டிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுவார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.

அச்சகத்தின் பெயர் இல்லாமல், தனிப்பட்ட நபரை, அமைப்பை மிரட்டும் பாணியில் உள்ள சுவரொட்டிகள் இந்த காவல்துறையின் கண்களுக்கு புலப்படாது. அதேவேளையில், பத்திரிகையில் வந்த “கார்ட்டூன்” படத்தை முறையாக அச்சகப்பெயருடன் அச்சடித்து சுவரொட்டியாக ஓட்டினால் மட்டும், இதே காவல்துறை ஒட்டியவர்கள் மீது வழக்குபோடும். சுவரொட்டிகளை காவல்துறையே கிழிக்கும். இத்தகைய கேவலத்தை சமீபகாலமாக மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று... மதுரை “தினபூமி” நாளிதழில் மதுரையிலுள்ள கல் குவாரிகளில் நடக்கும் வரி ஏய்ப்பு குறித்தும்,அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்தும், அரசின் ஆட்சியாளர்களுக்கு முறையீடு செய்து எந்த வித நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்தும் செய்திகள் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது.

20.7.10 அன்று கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பெரியசாமி என்பவர் மதுரை தென்மண்டல காவல்துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கசொல்லி, மதுரை தல்லாகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகநாதனுக்கு அனுப்ப, உடனடியாக 21 அன்று அதிகாலை தினபூமி உரிமையாளர், அவரது மகன், வேலைக்காரன் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகையாளர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பால் அவர்கள் மறுநாள் பிணையில் வெளிவந்தனர்.

இதற்கிடையில் தினபூமி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த மதுரை காவல்துறை அனுமதி வழங்கி, தினபூமி இதழை நடத்துபவர்களை தரக்குறைவாக ஒலிபெருக்கி மூலம் சிலர், சில கட்சிகள் விமர்சித்தன. காங்கிரஸ், ஜனதாதளம், கம்யூனிஸ்ட், தி.மு.க, பார்வர்ட் பிளாக் என மதுரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம் நடத்திய இடம் மதுரை காவல்துறையால் போராட்டங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று அல்ல!காவல்துறை சில இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டுமென முடிவு செய்துள்ளது. அங்குதான் எந்த அமைப்பும் நிகழ்ச்சி நடத்த முடியும். ஆனால் தினபூமி அலுவலகம் அருகில் போராட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதி கொடுத்தது? யார் கேட்பது?அந்த போராட்டத்தை ஒட்டி, அச்சகப்பெயர் இல்லாமல், மிரட்டல் பாணியில் பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இரண்டு... கடந்த 4.8.10 அன்று தி.மு.க இளைஞர் அணி சார்பில் மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவின் நீதிமன்ற புறக்கணிப்பை மையப்படுத்தி, வழக்கை தள்ளிப்போடும் செயலைக் கண்டித்தும், நீதிமன்ற கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மதுரை தல்லாகுளம் அஞ்சலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த இடமும் காவல்துறையால் போராட்டங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று அல்ல!. அந்த இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியை மதுரை நகர காவல்துறை அனுமதிக்காது. ஆனால் அந்த இடத்தில் தி.மு.க.வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை யார் கேட்பது?

இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலருமான ஜெயலலிதாவை கண்டித்து, தனிப்பட்ட முறையில் விமர்சித்து தரங்கெட்ட வார்த்தைகளால் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன.

உதாரணமாக “அறிவுகெட்ட ஜெயலலிதாவே” எனும் வாசகம் அடங்கிய சுவரொட்டி இருந்தது. பல சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர் இல்லை! காவல்துறையின் அனுமதி ஆணையில் “தனிப்பட்ட யாரையும் தரக்குறைவாக பேசுவது, சுவரொட்டி அடித்து ஓட்டுவது, பிளக்ஸ் போர்டு வைப்பது கூடாது” என்ற விதிமுறை உள்ளது. ஆனால் மதுரைக்கு அது பொருந்தாது. மதுரை காவல்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் “சிலர்” மீது மட்டும் எடுக்காது.இதேபோல வேறு கட்சி,அமைப்புகள் செய்தால் வழக்கு,கைது என நடவடிக்கை எடுக்கும்!

மூன்று... ஜுனியர் விகடன் வார இருமுறை இதழில் கழுகு பகுதியில் சில வாரங்களுக்கு முன்பாக மதுரை அரசியல் பிரமுகர் பற்றி தவறான செய்தி வெளியிட்டதாகவும் அதை கண்டிப்பதாகவும் அச்சகப்பெயரில்லாத சுவரொட்டிகள் பல்வேறு அமைப்பு, தனிமனிதர்கள் பெயரில் 10.8.10 மதுரை நகர எங்கும் ஒட்டப்பட்டுள்ளது. ஜுனியர் விகடன் இதழ் மற்றும் அதில் பணிபுரியும் நிருபர்கள் பெயரைப் போட்டு சுவரொட்டி மிரட்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதே தென்மண்டல காவல்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காவல்துறை ஆணையர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் இப்படிப்பட்ட சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டுதானே செல்கின்றனர்? அச்சக பெயரில்லாத, தனிமனித மிரட்டல் சுவரொட்டிகளை அச்சடித்த, ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

ஊடகங்களின் மீதான மிரட்டல் தி.மு.க ஆட்சியில் தொடர்கதையாகி வருகின்றது. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின், தினபூமி உரிமையாளர் மணிமாறன், இப்போது ஜுனியர் விகடன் நிருபர் குள.சண்முகசுந்தரம், சரவணன் என குறிப்பிட்டு மிரட்டும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. மதுரை காவல்துறையும் அதற்கு துணை போகிறது.இது சரிதானா?

அரசுக்கு “ஜால்ரா” போட்ட அதிகாரிகள் பின்பு என்ன ஆகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றோம். அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க தலைவர் கருணாநிதியை கைது செய்த காவல்துறை முகமது அலி, முத்துக்கருப்பன், சங்கராச்சாரியை கைது செய்த பிரேம்குமார், தி.மு.க ஆட்சியில் சுடுகாடு பேர ஊழல் என சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அமைச்சர்கள் மீது புகார் செய்த உமாசங்கர்.... இப்படியான பட்டியல் தொடரும். ஆனால் சுடுகாட்டு ஊழலில் சிக்கிய அமைச்சர் செல்வகணபதி, இப்போது கட்சிமாறி தி.மு.க.வின் மா‌நில‌ங்களவை உறுப்பினர்! ஆனால் அதில் சிக்கிய அதிகாரிகள் இன்னும் நீதிமன்ற படிக்கட்டுகளில்!

அரசியல் வாதிகளுக்காக சட்டவரைமுறையை மீறும் அதிகார வர்க்கம் தண்டனையிலிருந்து தப்பாது. யாருக்காக அந்த வரம்புமீரலை செய்தார்களோ அந்த அரசியல் பிரமுகர் கட்சி மாறி குற்றம்சா‌ற்றப்பட்டவர்களால் “ஞானஸ்நானம்” பெற்று அரசியல் பதவிஅடைந்து விடுவார்கள்! அரசு அதிகாரிகள் இதை எச்சரிக்கையாக புரிந்துகொள்ளட்டும்!

இதழ் உரிமையாளர்களுக்காக பாடுபடும் சில பத்திரிகையாளர்களுக்கும் சில பாடங்கள்... தினமலர் இதழுக்கு எதிராக தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கையை கண்டிக்க பலர் முன் வராத நிலையில் உணர்வுள்ள பத்திரிகையாளர்கள் தினமலருக்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆனால் 10.8.10 தேதி தினமலரில் ஜுனியர் விகடனுக்கு எதிராக விளம்பரம் போட்டது பத்திரிகை தர்மமா? பத்திரிகையாளர்கள் கட்சி ரீதியாக பிளவுபட்டு நிற்பதும், சலுகைகளுக்காக கையேந்தி நிற்பதும், உரிமைக்காக போராட துணிவில்லாத சங்கங்களை கொண்டிருப்பதும் இத்தகைய மோசமான நிலைக்கு காரணங்கள்! சாதி அமைப்புக்கள் பெயரால் “சுவரொ‌ட்டி மிரட்டல்” விடுவது மீண்டும் தென்மாவட்ட சாதிக்கலவரத்துக்கு வித்திடுவது ஆகாதா?

அரசியல்கட்சிகளை மிரட்டுவது....கைது ..சிறை.. அதிகார வர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு ஊடகங்களை மிரட்டுவது...கைது..சிறை... தமிழகத்தின் தென்மாவட்டம் சோதனையில் சிக்கி சீரழிகிறது!

நன்றி : வெப்துனியா

மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொ‌ட்டிக‌ள்!

“அறிவுகெட்ட ஜெயலலிதாவே”

ஒரு பாக்க உண்மையை சொல்லும் சுவரொட்டிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.