Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்

Featured Replies

சார்,ரயில்ல விழுந்து சாகுறதுக்கு எங்கம்மா கூட்டிட்டுப் போனாங்க. அம்மாவை மட்டும் ரயில் அடிச்சுப் போட்டுருச்சு. எம்மேல அடிபடலை. தம்பிக்கு என்ன ஆச்சுனு தெரியலை. எங்கூட வந்து பாருங்க’’ஒரு நள்ளிரவில் சாலையில் தென்பட்டவர்களை ரத்தக்கறை படிந்த சட்டை சகிதம் வழிமறித்து இந்த உதவியைக் கேட்டவன் ஓர் ஒன்பது வயதுச் சிறுவன்.

சமீபத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் வட்டாரத்தைத் திகைக்கவும் கண்கலங்கவும் வைத்துள்ள நவீன் என்ற அந்தச் சிறுவனைச் சந்தித்தோம்.

செங்கல்பட்டு அருகே உள்ள நத்தத்தில் நவீனின் வீடு இருக்கிறது. ஒற்றை அறை வீடு. ஒரு சாக்லெட்டை தனது மூன்றரை வயது தம்பி சுரேஷுடன் பங்கு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் நவீன். சுரேஷ் அடிக்கடி முனகுகிறான். பின்தலையில் தையல் தெரிகிறது.

“சின்னவன் அம்மா சேலையைப் பிடிச்சிகிட்டே வளர்ந்தவன். அம்மாவை விட்டா, அவனுக்கு அண்ணனைத்தான் தெரியும். இந்தப் பாசம்தான் ரெண்டு பேரையும் காப்பாத்தியிருக்கு’’ என்கிறார் நவீனின் தாத்தா. இவரது மகள் ஜெசிந்தாதான் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ரயிலுக்குள் விழுந்தது.மகள் இறந்த சோகம் பெரியவர் முகத்தில் அப்பியிருக்கிறது.

எல்லா பிரச்னைக்கும் ஆரம்பம், ஜெசிந்தாவின் சிக்கலான திருமண வாழ்க்கை. பத்து வருடங்களுக்கு முன்னால் கட்டுமான வேலைக்குப் போன இடத்தில் ஜெசிந்தாவுக்கும் ரவி என்ற மேஸ்திரிக்கும் ஏற்பட்ட பழக்கம் எல்லை மீறித் தொடர்ந்திருக்கிறது. ரவி ஏற்கெனவே திருமணமானவர்.இருந்தாலும் ஜெசிந்தாவையும் முறையாகத் திருமணம் செய்து, தனியாக குடி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சர்ச்சில் வேலை பார்த்துக் கிடைத்த பணத்திலும், கணவர் கொடுத்த பணத்திலும் ஜெசிந்தாவின் குடும்ப வாழ்க்கை சிக்கல் இல்லாமலேயே கழிந்தது. காலப்போக்கில் ரவியால் முன்புபோல ஜெசிந்தாவை கவனிக்க முடியாத நிலைமை. வீட்டில் நிலவிய வறுமையும் விரக்தியும் கடைசியில் ஜெசிந்தாவின் தற்கொலையில் முடிந்துவிட்டது.

”அன்னிக்குக் காலையில என்னையும் தம்பியையும் கூட்டிகிட்டு அம்மா வீட்டை விட்டுக் கிளம்புனாங்க. எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு இடமா பார்த்துப் பார்த்து அலைஞ்சாங்க. தம்பி அம்மா தோள்லயே தூங்கிட்டான். ‘எங்கேம்மாபோறோம்?’னு கேட்டேன். ‘இந்தப் பொழைப்பு வேணாம்டா. நாம எல்லோரும் செத்துரலாம்’னு சொன்னாங்க. எனக்கு பயமா இருந்துச்சு. கடைசியா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். அப்போ நைட் ஆகிடுச்சு.ஸ்டேஷன்லயே கொஞ்ச நேரம் சுத்திவந்தோம். மூணு ட்ரெயின் போயிடுச்சு.எங்கம்மா தண்டவாளத்துல இறங்குனாங்க. தண்டவாளக் கம்பியில தலையை வச்சு அம்மா குறுக்கால படுத்துக்கிட்டாங்க.நானும் தம்பியும் தண்டவாளத்துக்குள்ள படுத்துக்கிட்டோம்.நான் கல்லை எடுத்துப்போட்டு,கையாலயே பள்ளம் தோண்டி அதுல படுத்துக்கிட்டேன்.தம்பி அப்பவும் தூங்கிட்டுத்தான் இருந்தான். நாலாவது ரயில் வந்துச்சு. ரயில் வந்த வேகத்துல அம்மாவை அடிச்சு, இழுத்துக்கிட்டே போயிடுச்சு. ரயிலோட சத்தத்தோட சேர்ந்து, அம்மா கத்துற சத்தமும் கேட்டுச்சு. நான் தம்பியை கெட்டியா பிடிச்சுகிட்டேன். என் சட்டை முழுக்க அம்மாவோட ரத்தம். அம்மா எங்களை விட்டு தூரத்துல கிடந்தாங்க. ரயில் போறப்போ, தம்பி லேசா தலையைத் தூக்கிட்டதால, ரயில் கம்பி உரசி அவன் தலையிலேர்ந்து ரத்தம் வழிஞ்சது. அவனும் செத்துப்போயிட்டான்னு நெனைச்சேன். ரயில் போனதும் எழுந்தேன்.ரொம்ப பயமா இருந்துச்சு.அழுகிதுட்டே ஓடினேன்.ஒரே இருட்டு. யாரையாவது கூப்பிட்டு வரலாம்னு பஸ் ஸ்டாண்டு பக்கம் வந்தேன். அங்கே ஒரு அங்கிள் வந்துட்டிருந்தார். அவர் என்னை ஆட்டோவுல ஏத்தி, போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வச்சார். திரும்பி வந்து பார்த்தா, தம்பி தூக்கத்துலயே எந்திரிச்சுப் போய் செத்துப்போய் கிடந்த எங்கம்மாகிட்ட படுத்துருந்தான். தம்பி உயிரோட இருக்கான்ங்கிறது அப்போதான் தெரிஞ்சது’’என்று தற்கொலைக்கு முயன்ற கதையை தங்குதடையின்றிச் சொல்கிறான். அவனுக்கு நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை. ‘செத்துரலாம்டா’னு அம்மா அன்று முழுவதும் சொன்னது மட்டும் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்கிறான்.

“பசங்களை இவங்க அப்பா இதுவரை நல்லாதான் பார்த்துக்கிட்டார். அவரோட வீட்டுக்கு இவங்களைக் கூட்டிட்டுப் போக முடியாதுங்கிறதுதான் பிரச்னை. நவீன் முந்தி படிச்ச ஸ்கூல்லயே ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்குறதா இப்போ சொல்லியிருக்கார். நாங்களும் இருக்கோம்’’ என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் நவீனின் தாத்தா.இவருடைய மற்ற பிள்ளைகளும் ஆதரவுக்கு இருக்கிறார்கள்.அவர்கள் நிலைமையும் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான்.

”நல்லா படிக்கணும், டாக்டராகணும். ஏழைகளுக்கெல்லாம் உதவி பண்ணணும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க’’ என்று நம்மிடம் பேசிக்கொண்டேயிருக்கும் நவீனின் பார்வை அரசு டி.வி.யில் நிலைக்கிறது. “சுரேஷ், இதோ யானை பாரு’’, தம்பிக்கு ஆசையாக டிஸ்கவரி சேனலைச் சுட்டிக்காட்டுகிறான்.

விதியே, இந்தப் பிஞ்சுகளை என்ன செய்யப் போகிறாய்?.

நன்றி குமுதம்

படங்களைப் பார்வையிட.....

http://www.thedipaar.com/news/news.php?id=17623

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதை கேட்டு நெஞ்சம் கனக்கிறது. இரக்கமுள்ளவர்கள் யாராவது இவர்களை

தொண்டு நிறுவனங்களில் சேர்த்து வாழ வைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.