Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உலகத்தமிழர் எழுத்தாளர் மகாநாடு -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

91301369.jpg

கொழும்பில் மாநாட்டை நடத்தி தமிழர்களின் பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கிறது இலங்கை அரசு என்ற குரல் உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளிடம் இருந்து எழுந்துள்ளது.

இவ்வளவு எதிர்ப்புக்குக் காரணம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் முருகபூபதி என்பவர் கொழும்பு நகரில் ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது தான்.

‘‘உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல. மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது.மாநாட்டை இலங்கையில் நடத்துவதைவிட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.பிரச்னைகளை சுதந்திரமாக விவாதிக் கலாம்’’என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

‘‘சிங்கள அரசின் நயவஞ்சக எண்ணத்தைப் புரிந்துகொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் போலிப் பகட்டு மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்’’ என்று எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர் சுதாங்கன் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் மாநாட்டைப் புறக்கணிக்க காரணங்கள் என்ன என்று, மித்ரா பதிப்பக உரிமையாளரும்,எழுத்தாளருமான எஸ்.பொ.விடம் பேசினோம்.

‘‘கலை-இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப்படுத்தும் ராஜபக்ஷேவின் திட்டம்தான் உலக எழுத்தாளர் மாநாடு! சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம்.

இலங்கையில் அரசு அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுத்து தங்களுடைய வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்ளும் ஒரு சாராரும், தமிழ் முஸ்லிம்களில் ஒரு சாராரும்,ஈழப்போரில் தொடர்பில்லாத மலைவாழ்த் தமிழர்களும், மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த்தேச மறுப்பாளர்களான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரும் சிங்கள இனவெறி இலங்கை அரசுக்கு துணை போகிறார்கள்.

தமிழினத்தை அழித்து மாநாடு என்ற பேரில் அரைத்த மிளகாயை தமிழர்களின் அடிக்காயத்தில் தடவப் போகிறார்கள். இதை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கப் போகிறது!

1970-களில் 4-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கை அரசு கொழும்பில் நடத்த முடிவு செய்தது. அதை எதிர்த்து தமிழர்கள் பூமியான யாழ்ப்பாணத்தில் அம்மாநாட்டை நடத்தினார்கள். அன்று தோற்றுப் போனவர்கள் இன்று இந்த மாநாடு மூலம் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் எதிர்த்து எழுதிய என் மீது மாநாட்டின் அமைப்பாளரான முருகபூபதி 10கோடி ரூபாய் மான நஷ்ட வழக்குப் போடுவதாக மிரட்டுகிறார். 60 ஆண்டுகளாக எழுதி வருகின்ற எனக்கு கருத்துச் சொல்ல உரிமை கிடையாதா?

ஜெயகாந்தன், பொன்னீலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்கள்.எழுத்தாளர்களாக மக்கள் மத்தியில் அறியப்பட்ட படைப்பாளிகள் எவரும் அதில் கலந்து கொள்ளப்போவதில்லை. எதையாவது எழுதி முகவரி தேடியலையும் ஒரு கூட்டம்தான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போகிறது’’என்று கொந்தளித்தார், எழுத்தாளர் எஸ்.பொ.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திடம் பேசினோம்.

04aq.jpg

‘‘ஐ.நா. சபையில் நடக்கும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை தொய்வடைச் செய்ய இலங்கை அரசுக்கு இம்மாநாடு பயன்படும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்’’ என்று முடித்துக்கொண்டார், செயப்பிரகாசம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழகம் மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு விசா, இலவச வானூர்தி பயணச்சீட்டு, இலவச தங்குமிடம், இலங்கையை சுற்றிப் பார்க்கும் வசதி வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

‘இலவசங்களைக் காட்டினால் தமிழன் மண்டியிட்டு மயங்கி விடுவான்’ என்ற ரகசியம் கடல் கடந்து ராஜபக்ஷேவையும் அடைந்திருக்கிறது என்று கிண்டலாக சொல்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

படங்கள் : ம.செந்தில்நாதன், கணேஷ்.

- வேலு.வெற்றிவேல்

-குமுதம் ரிப்போட்டர்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அடப்போங்கைய்யா, நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கப்போவதில்லை. தமிழனின் சுடுகாட்டின் மீது இருந்துதான் நாங்கள் இலக்கியம் பேசப்போகிறோம். எசமான் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். புட்டியும், சேர்த்துக் குட்டியும், குட்டிக்குக் காசும் தரும்போது இனமாவது மண்ணாவது.

சிட்னியில் தியாகி திலீபனின் நினைவஞ்சலியின் பொழுது பட்டிமன்றம் வைக்கலாம் ,கை தட்டலாம் , அகிம்சை போதனையும்,காந்திப் புராணம் பாடலாம் என்றால் ....கொழும்பில் மாநாடு வைக்கிறது தப்பில்லையுங்கோ

‘‘உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல. மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது.மாநாட்டை இலங்கையில் நடத்துவதைவிட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.பிரச்னைகளை சுதந்திரமாக விவாதிக் கலாம்’’என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

கருணா நிதிக்கு இன்னுமொரு பாராட்டுவிழா நடத்துறதுக்கோ!!!!

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.