Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டை தேடி வந்து சுகம் விசாரிச்ச காலம் போய்... வீடு தேடி வந்தே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி விட்டு போறாங்கள்... இதை உடனே நிறுத்து.

Featured Replies

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுனாமியின்பின்னும், பாரிய யுத்தத்தின் பின்னருமான மீள்குடியேற்றத்தின் போது பெண்களின் கருத்துகளும், அவர்களுடைய விசேட தேவைகளும் கருத்தில் கொள்ளப்படாமல் பல செயற்பாடுகள் நடைபெறுவது எம்மால் அவதானிக்கப்பட்டது. மனதை வருத்துவது யாதெனில் முப்பது வருட காலத்திற்கும் மேற்பட்ட போர் வரலாறு, 2004 மார்கழியில் ஏற்பட்ட ஆழி பேரலை அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில், மீள்குடியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட கற்பினைகளில் பெண்களால் குரல் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள், ஒரு தடவையல்ல, இரு தடவையல்ல பற்பல தடவைகள் சீரான முறையில் சிந்தை தவறிவிட்டன. பெண்களின் தேவைகள்ஃஉரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டன. மீண்டும் ஒருமுறை மறந்து மறுக்கப்பட்டவற்றை சிந்தையில் கொள்வோம்!

சாராம்சம்

எமது கோரிக்கை

• என்டை காணியை திருப்பி என்னட்டையே தாங்கோ

• நிவாரணம், அபிவிருத்தி திட்டங்கள் எண்ட பேரில சொந்தங்களைப் பிரிக்காதீங்கோ

• வீட்டை தேடி வந்து சுகம் விசாரிச்ச காலம் போய்... வீடு தேடி வந்தே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி விட்டு போறாங்கள்... இதை உடனே நிறுத்து.

• வீடு...? இதின்ரை அர்த்தம் இப்ப மாறிட்டுது. குறைஞ்சது பூட்டுப் போடக் கூடிய கதவும் யன்னலுமாவது தாங்கோ.

• ஐயோ சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போனம் எதைச் செய்ய முதலும் எங்கடை விருப்பத்தையும் அக்கறையையும் கேளுங்கோ

• போர் முடிஞ்சுதாம். ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்முறை இன்னுமே நிக்கலை. இதெல்லாம் நிக்கும் வரை எங்கடை பிரச்சனை தீராது. நிப்பாட்ட வழி செய்யுங்கோ.

• எங்கடை பிள்ளைகளைக் காணலை. உயிரோடை இருக்கினமாம். தயவு செய்து பிள்ளைகளை எங்களிட்டை விட்டுடுங்கோ.

• எங்கள வாழ விடுங்கோ! எங்கட தொழில் வாய்ப்புகளை பறிமுதல் செய்யாமல் அதிகரிக்க நடவடிக்கை எடுங்கோ.

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் வடக்குக் கிழக்குப் பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற துன்பங்கள். அவர்கள் முன் வைத்த பிரச்சினைகளை மற்றும் தேவைகளை அவர்கள் கூறிய பேச்சு மொழியிலும் பாணியிலும் உங்களுக்குத் தருகின்றோம்.

பெண்கள் அனுபவித்துக் கொண்டிருப்பவற்றின் காத்திரத் தன்மை மற்றும் அவலம் நேரடியாகவே உங்களைச் சென்றடைய வேண்டும் என்ற அவாவே இதற்குரிய காரணமாகும். பெண்களால் முன் வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான பூரண தொகுப்பு ஓர் அறிக்கை வடிவில் தயாரிக்கப்பட்டள்ளது. அவ்வறிக்கையின் சாராம்சமே இப்பரிந்துரை ஆகும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சேவை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கும் இடையே ஓர் தொடர்பினை ஏற்படுத்துகின்ற ஊடகமாகவே இப்பரிந்துரை அமைகின்றது. ஆரம்பத்தில் கூறப்பட்டது போல, இதுவரை காலமும் மறந்து மறுக்கப்பட்ட பெண்களின் குரல்களுக்கு மீண்டும் ஒருமுறை உயிர் கொடுப்பதே இப்பரிந்துரையின் நோக்கமாகும். இவர்களது கோரிக்கைகளை ஒரு சில அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களோ அல்லது தனி நபர்களோ மட்டும் கவனத்தில் கொண்டு செயற்படுதல் போதாது. சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக் கேட்பதுடன் அதனை நிறுத்தவதற்கும் பொருத்தமான சேவைகளை வழங்குவதற்கும் ஆவன செய்ய வேண்டும். நீதியை வேண்டி பெண்களால் நியாயமாக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு சம்பந்தப்பட்ட அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் சமூக சேவையாளர்களிடமும் சமூகத்திடமும் பரிந்துரை செய்கின்றோம்.

வடக்குக் கிழக்கு பெண்கள் அமைப்பு:‐

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=30347&cat=10

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.