Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணுக்குப் புலப்படாத ஆதரவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குப் புலப்படாத ஆதரவு?

[ உதயன் ] - [ Sep 29, 2010 04:00 GMT ]

இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்க படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே அக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது; எவ்வித சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார் குறிப்பிட்ட நிபுணர் குழுவின் விசாரணை தொடர்பாக இலங்கை அரசும் அதன் தலைவரும் வீணே அச்சம் கொள்ளத்தேவையில்லை; அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை அதிபருக்கு ஆறுதல் கூறுவது போன்ற தொனியில் அமைந்துள்ளது அவரது கருத்து.

பான் கீ மூனின் ஆறுதல் வார்த்தை இந்த விடயத்தில் இலங்கை அதிபரும் அவரின் அரசினரும் எந்தளவுக்கு அச்சம் கொண்டிருந்தனர் என்பதனைப் பிரதி பலித்ததை அவதானிக்கலாம்.

வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது நடைபெற்றதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் கடமை இலங்கைக்கு உண்டென்றும், அது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தபோது, இலங்கை அதிர்ச்சியில் உறைந்தது. அத்தகைய ஒரு நிலை ஏற்படாமல் தடுத்துவிட தன்னால் இயன்ற மட்டும் தலையால் நடந்து அதில் வெற்றியும் கண்டது அரசு.

இந்த வெற்றியின் பின்னால் பான் கீ மூனுக்குப் பெரும் பங்கிருந்ததாகப் பரவலாகக் கருதப்பட்டது; குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணைக் குழுவை நியமிப்பதில் தாமதம் காட்டி, குறிப்பாக அதற்கு அணி சேரா நாடுகள் இயக்கம் போன்றவற்றின் ஆதரவையும் பெற்றுக்கொடுப்பதற்கு திரைக்குப் பின்னால் கருமாற்றியவர் செயலாளர் நாயகமே என்றும் கூட சர்வதேச ராஜீக வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன.

எப்படியோ, இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட பெரிய விவகாரத்தை அமுக்கிவிடுவதில், இவருக்கு மறைமுகமான பங்கு உண்டு என்று பேசப்பட்டதை மறந்துவிடுவதற்கில்லை. போரில் மக்கள் அழிந்து போவதைத் தடுப்பதில் இலங்கை அரசை உறுக்கிப்பேசி போரை நிறுத்தச் செய்வதில் பான் அசட்டைத்தனமாக இருந்தார் என்ற குற்றச் சாட்டும் உண்டு.

அவரின் இலங்கை விஜயம் உள்நோக்கத்துடனேயே காலம் கடந்து இடம்பெற்றது என்ற சந்தேகமும் அவ்வேளை பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டது. காலம் கடந்த விஜ யத்தின்போதும் அவரும் ஜனாதிபதி மஹிந்தவும் இணங்கிக்கொண்ட மனித உரிமைகளை மீறியதான குற்றச் சாட்டுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட இறுக்கமாக நிற்காமல் தாமதம் காட்டப்பட்டது என்பது யாவரும் அறிந்த ஒன்று.

இத்தகைய பின்னணியில், நிபுணர்குழு நிய மனத்தை தாமதித்ததும் போதாமல் பிரச்சினைக்குரிய விடயத்தில் அதாவது இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை தமது நிபுணர் குழு விசாரிக்காது என்று உறுதி படத் தெரிவித்து மஹிந்தவை மனமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்! பான்.

நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்துவிட்டார் என்ற தகவல் வெளிவந்ததும் இலங்கை அரசு துள்ளிக் குதித்ததும் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டதும் அமைச்சர் ஒருவர் உண்ணாவிரத நாடகம் நடத்தியதும் அதன் பொருட்டு உலக நாடுகள் பலவற்றின் ராஜதந்திர வட்டாரங்கள் கண்டனம் வெளியிட்டதும் கூட பான் கீ மூனின் காதில் உறைக்கவில்லை.

இலங்கை ஜனாதிபதியை ஆசுவாசப்படுத்துவதிலேயே மூன் முழுஅளவில் செயற்பட்டிருக்கிறார் என்று பல தரப்புகளும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தன.

இத்தகைய ஒரு பின்னணியில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற ஒரு குழுவை நியமித்தால், அதன் மூலம் ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்க்க உதவும் என்ற ஆலோசனையை பான் கீ மூனே நட்புறவுடன் அந்தரங்கமாகத் தெரிவித்திருப்பாரோ என்று இப்போது பல தரப்பாரும் சந்தேகம் வெளியிடும் நிலை தோன்றியுள்ளது.

இலங்கையில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் முழுவீச்சில் நடைபெற்று வரும் இன ஒடுக்கலைத் தடுக்க முடியாத இயலாமைக்கு ஐக்கிய நாடுகள் சபை தள்ளப்பட்டிருப்பது, இவரைப் போன்ற உயர் அதிகாரி களின் பக்கச்சார்புப் போக்காக இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் சந்தேகம் கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

மொத்தத்தில் இலங்கை ஜனாதிபதியின் நியூ யோர்க் ஐ.நா. விஜயம், அரசாங்கத்தைப் பொறுத் தவரை அதன் இலக்குகளைநழுவி வழுவும் திட்டங்களை எண்ணங்களை நிறைவேற்றி உள்ளது. அவருக்கும் அரசுக்கும் அது பெரும் வெற்றியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.