Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல்பிரட் துரையப்பாவை புலிகள் படுகொலை செய்யவில்லை: திவயின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பாவை புலிகள் படுகொலை செய்யவில்லை: திவயின

alfred_duraiyappah.jpg

யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலைச் சம்பவம் குறித்த உண்மை 35 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமாகியுள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அல்பிரட் துரையாப்பாவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமர்தலிங்கத்தின் மூத்த மகன் காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தலிங்கத்திற்கும் இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஆர்.சுந்தரலிங்கம் தெரிவித்திருந்ததாக ராஜசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

காண்டீபன் அமிர்தலிங்கம் தனது தாயாரான மங்கையற்கரசி அமிர்தலிங்கத்துடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து, லண்டன் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் படுகொலைச் சம்பவத்தை பிரபாகரன் மேற்கொண்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய கே.சுந்தரலிங்கம் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://meenakam.com/?p=9129#more-9129

-------------------------------------------------------------------------------------------------------------

இந்த செய்தி எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்தது.... திவாயின நம்பிக்கையான ஊடகமா?

6f7108ab7637e542e0ab99ac3616f99e%5B1%5D.gif

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருணாவை இயக்கும் எட்டப்பன்!

இன்று துரோகி கருணாவின் அரசியல் ஆலோசகராக செயற்படும் கே.ரி ராஜசிங்கம் 1940களின் இறுதியில் கணபதிப்பிள்ளை துரைரத்தினத்தின் கடைகெட்ட வாரிசாக பிறந்தவர். இவர் புலோலி மேற்கு பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டவர். இவருடைய மனைவி சுன்னாகத்தை சேர்ந்தவர்.

பாடசாலை ஆரம்பக் காலத்தில் தம்பசிட்டி கலவன் பாடசாலையிலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டவர். தரப்படுத்தலில் பல்கலைக்கழகம் கிடைக்காததாலும், இவரது பெற்றோர்களால் இவரது அட்டகாசத்தை தாங்க முடியாததாலும் இங்கிலாந்து, அமெரிக்கா என்று சில காலத்திற்கு அனுப்பிவிட, அங்கிருந்து ஆங்கில அறிவையும், வெளிநாட்டுக் குற்றவியல் திறனையும் வளர்த்துக் கொண்டு நாடு திரும்பினார்.

பின்பு ஜி.ஜி. பொன்னம்பலத்தை பிடித்து ஒருவாறு புலோலி பலநோக்கு கூட்டுறுவச் சங்கத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்நேரத்தில்தான் இவர் வீரகேசரிப் பத்திரிகைக்கு தனது கட்டுரைகள், செய்திகளை எழுதுவதும், அதன் ஊடாக வரும் வருமானத்தை தனது செலவுக்கு பயன்படுத்துவதும், அத்தோடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து பல பொருட்களை தனது வீட்டுக்குள் பதுக்கி வியாபாரம் செய்வதும் இவரது முக்கிய வேலையாக இருந்தது.

இப்படியான செயல்களினால் இவரிடம் பணம் தாராளமாக புழங்கியது. ஒருவாறு ஜி.ஜி பொன்னம்பலத்தின் ஆசீர்வாதத்தால் புலோலியில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளராக கே.ரி ராஜசிங்கம் பதவி பெற்றுக் கொண்டார். அந்நேரத்தில் புலோலி வங்கியானது கூட்டுறவுச் சங்கத்தின் கிளை நிறுவனமாக இருந்தது என்று நினைக்கிறேன். அப்பொழுது இந்த வங்கியின் முகாமையாளராக கடமையாற்றியவர்களில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே. பாலகுமார் குறிப்பிடத்தக்கவர். இதனால் பாலகுமார் அவர்களுக்கு கே.ரி. ராஜசிங்கத்தின் திருவிளையாடல்கள் நன்கு தெரியும். அதே போல் விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கும் கே.ரி.ராஜசிங்கத்தின் கூத்துகள் தெரியும். காரணம், ராஜசிங்கம் தன்னை வீரகேசரியின் முக்கியமான எழுத்தாளராக காட்டிக் கொண்டு திரிந்த பொழுது அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். (க.வே.பாலகுமார் மற்றும் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரின் சமகாலத்தவராக இருந்ததும், அந்த நேரத்தில் இவர்களை விட பிரபல்யம் வாய்ந்தவராக இருந்ததும், இன்றைய இவரது நிலையும் இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கலாம். இதுவும் இவர் கருணாவிடம் அரசியல் ஆலோசகராக சேர்ந்ததற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.)

ராஜசிங்கம் கூட்டுறவுச்சங்கத்தில் முகாமையாளராக வேலை செய்து கொண்டிருந்தாலும், அவருடைய அடிமனதில் இருந்த நோக்கம் எப்படியாவது ஒரு அரசியல்வாதி ஆகிவிடுவதுதான். இவருக்கு வேலை வாங்கிக் கொடுத்து ஜி.ஜி பொன்னம்பலத்தின் செல்வச் செழிப்பை பார்த்து, இவருக்கும் அரசியல்வாதி ஆக வேண்டும் என்கின்ற வெறி உருவாகியது. ஜி.ஜி பொன்னம்பலம் லஞ்சத்திற்கு பெயர் போன ஒருவராக இருந்தார். இவரது லஞ்சத்தின் உச்சக்கட்டம் மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமைக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு சென்றிருந்தது. அத்துடன் ஐந்தாயிரம் தொடங்கி இருபதாயிரம் ருபாய்கள் வரையான பணத்தை (அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய பணமாக இருந்தது) இலஞ்சமாக பெற்றுக் கொண்டு, பல தகுதி அற்றவர்கள் ஆசிரியராக நியமனம் பெறுவதற்கும் ஜி.ஜி பொன்னம்பலம் வேலை செய்தார்.

பணம் உழைப்பதற்கு சிறந்த தொழிலாக அரசியலைப் பார்த்த கே.ரி ராஜசிங்கம் கே.பி ரத்னாயக்க ஊடாக அரசியலில் பிரவேசித்தார். இவரும் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரே. பல காலமாக சிறிமா பண்டாரநாயக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து தபால் தொலைத் தொடர்பு அமைச்சராக பணியாற்றியவர். கே.பி ரத்னாயக்காவின் கண் பார்வையால் ராஜசிங்கத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளரார் என்கின்ற பதவி கிடைத்தது. பின்னர் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களை பொறுத்து, தனது சுயலாபத்திற்காக சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்று மாறி மாறி உடுப்பிட்டி பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் தேர்தல்களில் நின்று, ஒவ்வொரு முறையும் ஆயிரம் வாக்குகள் கூடப் பெற முடியாமல் கட்டுப் பணத்தையும் இழந்தார்

உடுப்பிட்டி ராஜசிங்கம், பருத்தித்துறை நகரபிதா நடாராஜா, மு.பொ.வீரவாகு, குணரத்தினம் இவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னால் ராஜசிங்கத்தால் தாக்குப் பிடிக்க முடியாது போயிற்று. அத்தோடு மாத்திரம் அல்ல, கூட்டுறவுச் சங்கம் சம்பந்தமான இவரது மோசடிகளை பருத்தித்துறையில் அனைவரும் அறிந்திருந்தனர். அத்துடன் பெண்கள் சம்பந்தமாக இவர் மீது இருந்த உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் இவரது தோல்விக்கு ஒரு காரணம்.

புலோலி வங்கிக் கொள்ளையின் பொழுது, இவர் தனக்கு அறிந்த, தெரிந்த, எதிரி எல்லோரையும் காட்டிக் கொடுத்தார். அதுவே இவருக்கு வினையாக மாறி, ஊரை விட்டு ஓடி கொழும்பு போய் சேர்ந்தார். அங்கிருந்து கொண்டு சிலரை தனது முகவர்களாக வட பகுதியில் நியமித்துக் கொண்டு, தனது காட்டிக் கொடுப்புகள் மூலம் பணம் சம்பாதித்தார். இவரின் காட்டிக் கொடுப்பின் விளைவுதான், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் கைது. ஆரம்பத்தில் மு.பொ.வீரவாகுதான் இதைச் செய்தது என்று பருத்தித்துறையில் கதைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் ராஜசிங்கம்தான் இதை செய்தார் என்று உறுதியாகியதும், புலிகளின் தேடுதலுக்கு ஆளானதும், இவர் தலைமறைவு வாழ்வை தேடுவதற்கு காரணமாகின.

அத்துடன் அன்ரன் பாலசிங்கம் தேசியத் தலைவருடன் இருந்தது ராஜசிங்கத்திற்கு மேலும் சிக்கலை கொடுத்தது. காரணம் வீரசேகரியில் வேலை செய்த காலத்தில் இருந்த ராஜசிங்கத்தின் சரித்திரத்தை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

உமாமகேஸ்வரன் பிரச்சனையால் இயக்கத்திற்குள் பிளவும் இதே நேரத்தில்தான் ஏற்பட்டது. ராஜசிங்கம் இதை சாதகமாக பயன்படுத்தி உமாமகேஸ்வரனுடன் கூட்டுச் சேர முயன்றார். உமாமகேஸ்வரன் ராஜசிங்கத்தை விட அறிவு மிக்கவர். இவரது கடந்த கால வரலாற்றையும், இவரது தீய தொடர்புகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர். இதனால் இவரை சற்றுத் தள்ளியே வைத்திருந்தார்.

1983 கலவரத்தில் இவர் வீட்டுப் பக்கமும் வரமுடியாமல், கொழும்பிலும் இருக்க முடியாமல் தாய்லாந்திற்கு தப்பி ஓடினார். அதன் பிறகுதான் இலங்கையில் இருந்து அகதிகளாக பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். இதை கே.ரி. ராஜசிங்கம் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இவரது ஆங்கில அறிவு, எழுத்துத் திறமை, அரசியல்வாதிகளுடனான தொடர்பு, இவரது முகவர்கள் (காட்டிக்கொடுக்கும் முகவர்கள்) இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிரயாண முகவராக ஆரம்பித்த இவரது தொழில் ஓகோவென்று ஓடத் தொடங்கியது. இன்று கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து சேர்ந்தவர்களில் பெரும்பாலோனோர் ராஜசிங்கம் மற்றது அவரது சீடர்களாக இருந்து முகவர்களாக மாறியவர்கள் (இவர்களது பெயர்களையும் தேவைப்படின் வெளியிடுவேன்) ஆகியோர் மூலமாகத்தான் வந்தவர்கள்தான்.

ஆரம்பகாலத்தில் ஆண்களும் பின்பு 90 களில் பெண்களும் அதிகமாக வந்து சேர்ந்தார்கள். இதில் குறிப்பாக பெண்கள் இந்தக் கும்பலால் அனுபவித்த கொடுமைகளை சொல்வதென்றால், அதற்கு பல நூறு பக்கங்கள் தேவைப்படும். பாலியல்ரீதியான கொடுமைகளோடு, இந்தப் பெண்கள் இவர்களுக்காக போதைப் பொருட்களைக் கடத்துவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

.வன்னியிலிருந்து புலோலியூரான்

http://www.eddappar.com/47.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.